Posts

Showing posts from March, 2025

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

Image
பகல் வேளைகளில்  உண்ணாமல்  பருகாமல்  உடலாசை கொள்ளாமல்  தவ வாழ்க்கை வாழ்ந்தோரே!  உங்களுக்கு எமது  நோன்பு பெருநாள்  நல் வாழ்த்துக்கள்!  வலிகள்  தேய்பிறையாய் தேயட்டும்!  வசந்தம்  வளர்பிறையாய் வளரட்டும்!  நம் வாழ்வில்  மீண்டும் மீண்டும்  ரமலானையும்  லைலத்துல் கத்ர் இரவையும்  கிடைக்கச் செய்து  அதில்  அதிகமான அமல்களை  செய்யும் வாய்ப்பை  அல்லாஹ் அருள்வானாக!  ரமலான் காலங்களில்  அல்லாஹ் நம்மை பார்க்கிறான்  என்கிற சுய கட்டுப்பாட்டோடு  வாழ்ந்தது போல் எதிர்காலத்தில்  நம்மை வாழ செய்வானாக! ரமழான் வசந்தம்  உங்களுக்கும்,  உங்கள் குடும்பத்தினருக்கும்  அமைதியையும்,  வளத்தையும்  வழங்கட்டுமாக! அன்புடன்  மவ்லவீ B. M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ & மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசல் நிர்வாகம்

லைலத்துல் கதர் இரவு 27 வது இரவா?

Image
லைலத்துல் கதர் இரவு  27 வது இரவா? ======================== உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மகத்துவமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) என்பது, (ரமளான் மாதத்தின்) இருபத்தேழாம் இரவாகும்" என்று கூறினார்கள்.  நூல்: முஸ்லிம், திர்மிதீ  ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “அபுல் முன்திர் அவர்களே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் 'வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் 'மகத்துவமிக்க இரவை' (லைலத்துல் கத்ரை ) அடைந்துகொள்வார்' என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை செய்வானாக! நிச்சயமாக 'மகத்துவமிக்க இரவு' (லைலத்துல் கத்ர்) ரமளான் மாதத்தில்தான் உள்ளது; அது (ரமளான் மாதத்தின்) இருபத்தேழாவது இரவுதான் என்பதை அன்னார் அறிந்தே இருந்தார்கள்” என்று பதிலளித்துவிட்டு, பின்னர் (அது தொடர்பாகச்) சத்தியம் செய்தார்கள். நான், "அதை (அந்த இரவை) நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வீர்கள்?" என்று க...

சூஃபிகளின் நோன்பு - 3

நேற்றைய தொடர்ச்சி..... சூஃபிகளின் நோன்பு - 3  ^^^^^^^^^^^^^=======^^^^^^^^^^ 4. பிற உறுப்புகள் பாவங்களில் ஈடுபடாமல் பாதுகாப்பது :  கை, கால்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும் பாவமானவற்றை விட்டும், சந்தேகத்திற்குரியவற்றை விட்டும், சிறு குற்றங்களை விட்டும் முழுமையாக  பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  நோன்பு துறக்கும் நேரத்தில் சந்தேகத்திற்கு உரியவற்றை சாப்பிடுவதை விட்டும் விலகி இருக்க வேண்டும்.  ஏனென்றால் ஹலாலானதை சாப்பிட்டு நோன்பு நோற்று விட்டு நோன்பு துறக்கும் போது ஹராமானதை சாப்பிடுவதால் என்ன பயன்? 5. நோன்பு துறக்கும் போது கவனமாக இருப்பது :  இஃப்தார் -  நோன்பு துறக்கும் போது வயிறு நிரம்ப சாப்பிடுவது நல்லதல்ல!  ஹலாலான உணவை நோன்பு துறக்கும் நேரத்தில் சாப்பிடுவது ஆகுமானதாக இருந்தாலும், வயிறு நிரம்ப உண்பது அல்லாஹ்விடத்தில் கோபத்தை ஏற்படுத்தும். நோன்பின் நோக்கம்; மன எழுச்சிகளை அடக்குவதும், அல்லாஹ்வின் விரோதியான ஷைத்தானை கட்டுப்படுத்துவதும் தான். பகலில் நோன்பின் காரணமாக சாப்பிட முடியாமல் போன  வண்ணமயமான பல உணவுகளையும், பானங்களையும் நோன்பு துறக்கும் போது உண...