பெரிய வடகரையின் முன்னோர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ?: ================================== ஒருநாள் திருச்சி நத்ஹர் வலி (ரஹ்) அவர்கள், பாபா ஃபக்ருத்தீன் (ரஹ்) அவர்களை அருகில் அழைத்து, அவர்களுக்குக் கிலாஃபத் - என்னை போல் நீங்களும் செயல்படுங்கள் என ஆசி நல்கி, தங்களின் பல் துலக்கும் குன்னி மரக்குச்சியையும் அவர்களிடம் கொடுத்து ''இதனை எடுத்துக் கொண்டு பயணம் புறப்படுங்கள் . இரவு தங்குமிடத்தில் இதனை மண்ணில் ஊன்றி வையுங்கள். வைகறையில் இது எந்த இடத்தில் முளைத்திருக்கிறதோ அதனையே உம்முடைய தங்குமிடமாக ஆக்கி, இஸ்லாத்தைப் பரப்பி வாருங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் புறப்பட , அவர்களுடன் இருநூறு ஃபக்கீர்களும் - சீடர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஊர், ஊராக அவர்கள் தங்கிக் கொண்டே சென்றார்கள். தங்கும் இடமெல்லாம் அக்குச்சியை ஊன்றி வைத்தார்கள். ஒரு இடத்திலும் அது தளிர்க் கவில்லை. ஓரிரவு அவர்கள் ஒரூரை அடைந்து, அங்கு இரவுத் தங்கினார்கள், வழக்கம் போல் தம் குருநாதர் தந்த குன்னி மரப் பல்குச்சியை அவ்விடத்தில் நட்டி...