குர்ஆன் விஷயத்தில் நாம் என்ன சொல்வது?
நபி {ஸல்} அவர்களை நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 57 குர்ஆன் விஷயத்தில் நாம் என்ன சொல்வது? ============================== ஹிஜ்ரி 250 களுக்கு முன்பு பக்தாதில் வாழ்ந்த முஹம்மது பின் மன்சூர் அத்தவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல் ) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்களோடு இரண்டு மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவருடைய முகத்தையும் நான் அறிவேன். நான் : அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் விஷயத்தில் நான் என்ன சொல்வது? "குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம்; படைக்கப்படவில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும்தான் இதற்கு சாட்சி" என்று கூறினேன்; அப்பொழுது அவ்விருவரும் விழிப்பு நிலையில் இருப்பது போன்று நான் உணர்ந்தேன். நூல்: இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னா ஹிஜ்ரி 250 காலகட்டத்தில் குர்ஆன் படைக்கப்பட்டதா? இறைவேதமா எனும் விவாதம் விண்ணை முட்டிக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்களின் இந்த தீர்ப்பு, முஹம்மது பின் ...