சுதந்திரப் போர் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் 
===================================

தொடர் :..........8

படையெடுப்புகள் ஏன்? 
சுதந்திரப் போர் 
நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன? 
====================================

ஒரு நாட்டின் மீது  படை எடுப்பது பல்வேறு காரணங்களால் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக அரசியல், பொருளாதாரம், மதம், அல்லது பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகதான்  படையெடுப்புகள் நடந்துள்ளன. 

அரசியல் காரணங்களுக்காக : ஒரு நாட்டின் மன்னரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவது,

தன் நாட்டின் எல்லையை பெரிதாக்கி வலிமையான பேரரசை அமைப்பதற்காக படை எடுத்தல்,

அதிகாரப் போட்டி / அதாவது அடுத்தடுத்த நாடுகளுடன் தன் செல்வாக்கை நிரூபணம் செய்வதற்காக போர் தொடுத்தல் 

பொருளாதார காரணங்களை முன்னிட்டு துறைமுகங்கள், கடல் மார்க்கங்கள், வணிகப்பாதைகள் ஆகியவற்றை கைப்பற்றுவதற்காக போரிடுதல்,

ஒரு நாட்டில் உள்ள வளங்களான தங்கம், வெள்ளி, மசாலா, எண்ணெய் போன்ற வளங்களை அடைய போர் செய்தல்,

மதங்களைப் பரப்ப அல்லது மத அடக்குமுறைகளை ஏற்படுத்த அல்லது நாகரீகம் என்கிற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்த போரிடுதல் போன்ற பல காரணங்களுக்காக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. 

நமது இந்தியாவிற்குள் நுழைந்த ஐந்து நாட்டு ஆங்கிலேயர்கள் மதங்களைப் பரப்பவும், வியாபாரம் செய்யவும், வளங்களை கொள்ளையடித்து செல்லவுமே யுத்தங்களை செய்தார்கள்.

********

நமது இந்திய சுதந்திரப் போர் நமக்குக் கற்றுத் தரும் பாடம் இதுதான்! 

கான்சாகிப், யூசுப் கான், மருதநாயகம் என்று சொல்லப்படும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனை காட்டிக் கொடுத்தது சீனிவாசன் என்பவன்.

1799 மே 4 அன்று சிப்பாய்களோடு சிப்பாயாக போர் புரிந்து வீர மரணம் அடைந்த திப்பு சுல்தானைக் காட்டிக் கொடுத்தது திவான் பூர்னைய்யா, கிருஷ்ணப்பா போன்றவர்கள் தான்!

வங்கத்து சிங்கம் சிராஜுத் தவ்லா அவர்களை காட்டி கொடுத்தது மீர் ஜாஃபர் என்பவன் தான்! 

எனவே நாம் சம்பாதிப்பது, உயர்த்தப் பதவிகளைப் பெறுவது போன்ற செயல்களில் கவனம் செலுத்துகிற அதே நேரம், 

நமக்கு அருகில் இருந்து கொண்டு நம்மை வீழ்த்த நினைப்போர் யார்? நம் மீது பொறாமை படுகிறவர்கள் யார்? நமக்கு அருகில் இருந்து கொண்டு நமது குழி பறிப்பவர்கள் யார்? என்பதையும் கவனிக்க வேண்டும்; கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று அவர்களுக்கான சரியான தீனியை  போட்டு / கொடுக்க வேண்டியதை கொடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அவர்களுக்கான செட்டில்மென்ட்டை செய்து வெளியேற்றி விட வேண்டும் 

இப்படி செய்வதால் மட்டுமே நாம் உயர்வதை வேறு யாராலும் தடுக்க இயலாது.

சுயநலத்திற்காக / சில பேர் வாழ்வதற்காக ஒரு நாட்டை அடிமைப்படுத்த நினைக்கும் அல்லது ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நினைக்கும் சக்திகளை வேரறுப்போம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்