O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை
O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை ========================== இன்று தென்காசி குற்றாலத்தில் O.M. ஹள்ரத் அவர்களின் பேரனும், மௌலவி தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்களின் மகனும்மான முஹம்மது அனஸ் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் எனது ஆன்மீக ஆசான் O.M. ஹள்ரத் கிப்லா அவர்கள் ஆற்றிய உரை : மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒரு திருமணம் நடைபெற்றது; திருமணத்தின் முடிவில் பாதாம், அக்ரூட் ,காய்ந்த பேரித்தம் பழங்கள், கற்கண்டு ஆகியன விசிறி எறியப்பட்டது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த நபிகள் நாயகம் அவர்கள், அருகில் அமர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்களை தள்ளி விட்டுவிட்டு கீழே கிடந்த காய்ந்த பேரித்தம் பழத்தையும், பாதாம் கொட்டையையும் பொறுக்கி எடுத்து சாப்பிட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், "நாயகமே! இந்த கொட்டைக்காக என்னை தள்ளி விடுவதா! நீங்கள் சொல்லியிருந்தால் நானே எடுத்துக் கொடுத்திருப்பேனே?" என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், "அபூபக்கரே! இன்று திருமணம் ந...
Comments
Post a Comment