Posts

Showing posts from November, 2024

தலைமை காஜி அவர்களின் பிறப்பும் படிப்பும் :

Image
தலைமை காஜி  அவர்களின் பிறப்பும் படிப்பும் : ============================= தலைமை காஞ்சி அவர்களின்  இன்னும் சில முன்னோர்கள் : ========================== ஷம்சுல் உலாமா, காஜி, உபைதுல்லாஹ் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் 1880 - 1927  ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முதல் காஜி ஆவார்கள். இவர்களின் அடக்கத்தளம் திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் இருக்கின்றது. காஜி முஹம்மது ஹபீபுல்லாஹ் அவர்கள் 1928 - 1978 வரை சுமார் 50 ஆண்டுகாலம் ஹாஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத் தளமும் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வாலாஜா மஸ்ஜிதில் உள்ளது.  காஜி ஸைய்யது ஷா முஹம்மது (1978 - 1981 ) அவர்கள் காஜியாக இருந்து செயல்பட்டார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும்போது அங்கேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அவர்கள் அடக்கத்தளம் ஜன்னத்துல் முஅல்லாஹ்வில் அமைய பெற்றுள்ளது. காஜி முஹம்மது அஜீஸுத்தீன் அவர்கள் 1982 - 1986 வரை காஜியாக செயல்பட்டார்கள். இவர்களின் அடக்கத்தளம் சிட்டி சென்டர் அருகில் உள்ள தஸ்தகீர் ஸாஹிப் தர்கா அடக்கத்தளத்தில் உள்ளது. இன்றுள்ள டாக்டர், காஜி, முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது ...

தலைமை காஜி அவர்களின் குறிப்பிட்ட சில முன்னோர்கள் :

Image
தலைமை காஜி அவர்களின்  குறிப்பிட்ட சில முன்னோர்கள் : ============================== நமது தலைமை காஜி அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்) அவர்கள் ஹைதராபாத் நிஜாம்களின் தலைமை செயலக அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில்  பணியாற்றினார்கள். நமது தலைமை காஜி அவர்களின் குடும்பத்தினரை அல் நாயித் /  நவாயித் என அழைக்கின்றனர்.  மதீனாவை ஆட்சி செய்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்ற ஆட்சியாளரின் காலத்தில் அவனுடைய கொடுமைகளை தாளாமல் ஒரு கூட்டம் பஸரா (எகிப்து) நகருக்கு குடி பெயர்ந்தது. பின்னர் அவர்கள் இந்தியாவின் வடக்கு பகுதியில் வந்து குடி ஏறினார்கள்.  நாயித் எனும் குடும்பத்தினர் இன்றும்  அரபு நாடு மற்றும் ஈரான், ஈராக் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நவாயித் எனும் குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்கள் அல்லது அவர்களின் நெருங்கிய தோழர்களின் வம்சாவளியினர் என்பது உண்மை.  والنَّائِطي: نسبةً لسُلالةٍ من القبائل العربيَّة، هاجرت من المدينة المنوَّرة خوفًا من الحجَّاج بن يوسف الثَّقفي إلى البصرة، ثم إلى السَّاحل الجنوبي للهند، وسكنت به، ومارست التِّجارة والملاحة...

நூல் அறிமுக கூட்டம்

Image
நூல் அறிமுக கூட்டம் : ======================= 24 \11 \ 2024 அன்று சமூகநீதி படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.  தலைமை உரை ஆற்றிய ஜெயபால் இரத்தினம் ஐயா அவர்கள் வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூலை சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூலை ஐயா அகவி அவர்கள் திறனாய்வுரை செய்தார்கள்.  அவர்களின் உரை  கேட்பதற்கு இனிமையாகவும் மிக சிறப்பாகவும் இருந்தது. அன்றைய தினம் 65 நூல்கள் விற்பனையானது.  அங்கிருந்த சகோதரர் ஒருவர், "வந்திருந்தவர்களின் எண்ணிக்கை விட நூலின் விற்பனை எண்ணிக்கை அதிகம்" என  கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களில் பா. வசந்தன் அவர்களோடு முதல் தொடர்பு ஆறு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. எந்த நோக்கத்தை முன்னிறுத்தி அவரை தொடர்பு கொண்டேனோ அந்த நோக்கம் நூலாக உரு பெற்று அவரின் வரவேற்புரையோடு முடிவுக்கு வந்தது.  எங்களது பெரிய வடகரை கிராமத்தில் இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் மீலாதுந் நபி விழாவிலும் அன்றைய தினம்  சிறப்புரை ஆற்ற...

தமிழ்நாடு தலைமை காஜி அவர்களின் முன்னோர்கள் :

Image
தமிழ்நாடு தலைமை காஜி  அவர்களின் முன்னோர்கள் : ========================== ஹள்ரத், காஜி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ அவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, முஹம்மது அஜீசுத்தீன் (ரஹ்), இவர்களின் தந்தை  ஹள்ரத், காஜி, உபைதுல்லாஹ் ஷம்சுல் உலமா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், காஜி, ஸிப்கதுல்லாஹ் மதராஸீ பத்ருத்தவ்லா (ரஹ்), இவர்களின் தந்தை ஹள்ரத், திவான், முஹம்மது கவுஸ் ஷரஃபுல் முல்க் (ரஹ்),  இவர்களின் தந்தை ஹள்ரத், மவ்லவீ, நஸிருத்தீன் முஹம்மது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுதீன் அஹமது ஸகீர் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், முஹம்மது அப்துல்லாஹ் ஷஹீத் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, நிஜாமுத்தீன் அஹமது கபீர் (ரஹ்),  இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ஹுசைன் லுத்ஃபுல்லாஹ் (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, ரழிவுத்தீன் முர்தழா (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, முஹம்மது கபீர் (ரஹ்),  இவர்களின் தந்தை, ஹள்ரத், காஜி, அஹமது (ரஹ்), இவர்களின் தந்தை, ஹள்ரத், ஃபகீஹ் அபூ முஹம்மத் (ரஹ்), இவர்களின் தந்தை,  ஹள்ரத், ஃபகீஹ் மக்தூம் இஸ்மாயீல் (ரஹ்), இவர்களின் தந...

நம் காலத்திலும் வாழும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்:

Image
நம் காலத்திலும் வாழும்  இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்:  ============================= ==== டாக்டர், முஃப்தீ, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூபீ  அவர்கள்  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ يحكي أن الإمام البخاري ذات يوم ركب سفينة في البحر وكان معه ألف دينار، وكان هذا مبلغ طائل حينها، فجاء إليه رجل من أصحاب السفينة وأظهر له الحب والمودة وأخذ يتقرب منه ويجالسه دائماً، وعندما وجد الإمام البخاري حبه وولاءه له مال إليه، حتي أنه أخبره ذات يوم عن الدنانير الموجودة لدية . وفي يوم قام هذا الرجل من نومه يبكي ويمزق ثيابة ويطلم وجهه، إلتف لوحه الناس يسألونه عن سبب فعلة هذا، فقال لهم أنه كان لديه صره تحوي ألف دينار وقد ضاعت، فأخذ الناس يبحثون في السفينة بالكامل ويفتشون الجميع، فأخرج الإمام البخاري حينها صرته وألقاها في البحر خفية، وهكذا إنتهي الناس من تفتيش السفينة بالكامل ولم يعثروا علي الدنانير، فرجعوا إلي الرجل يبخونة بشدة لأنه كاذب . وبعدما إنتهت الرحلة ونزل الناس من السفينة ذهب الرجل إلي الإمام البخاري وسأله : ماذا فعلت بصرة الدنانير ؟ فقال له : ألقيتها في البحر، تعجب الرجل ك...

தலைமை காஜி அவர்களின் எளிமை, தூய்மை, வாய்மை :

Image
தலைமை காஜி அவர்களின்  எளிமை, தூய்மை, வாய்மை :  ============================ தலைமை காஜி அவர்கள் தமது அலுவலகத்தில் வெறும் கோரைப்பாயில் அமர்ந்துதான் தம் பணிகளை மேற்கொள்வார்கள். பழங்காலத்தில் கணக்குப் பிள்ளைகள் வைத்திருப்பது போன்று மரப்பலகையினால் ஆன சிறியதொரு டேபிள் போட்டு அமர்ந்திருப்பார்கள்.  காலை எட்டு மணிக்குத் தமது பணியைத் தொடங்கி மஃரிப் வரை அலுவலகத்தில் அமர்ந்திருந்து பலபாகங்களிலிருந்து வரும் அனைவருக்கும் கேட்கும் சான்றிதழ்களை வழங்குவார்கள். அதற்காக ஒரு பைசாகூட கட்டணம் பெற மாட்டார்கள்.  தலைமை காஜி அவர்களுக்கு உதவியாளரோ, பியூனோ, டைப்மிஷினோ தொலைபேசியோ எதுவும் கிடையாது.  ஆடம்பரம் இல்லாமல் மிகப்பணிவுடனும், எளிமையாகவும், புன் சிரிப்புத் தவழ அனைவரையும் வரவேற்று அவர்களின் குறைகளை அறிந்து நிறைவு செய்துத் தருவார்கள்.  எவரையும் கடிந்து கொள்ளாமல் பணியாற்றுவதை காணும்போது நாம் படித்த  கலீஃபாக்களின் வாழ்வுதான் நம் கண் முன்னே வந்து செல்லும்.  பார்க்கவும் பழகவும் அவர்கள் எளிமையாக இருந்தாலும் கொள்கையில் உறுதியானவர். இவர்களைப் போன்று கொள்கையில் உறுதியான வேறு எவரை...

பெரம்பலூர் அலவி மௌலானா அவர்கள் நபிகள் நாயகத்தின் சந்ததியா?

Image
பெரம்பலூர் அலவி மௌலானா அவர்கள் நபிகள் நாயகத்தின் சந்ததியா? ================================= الْعَلَوِيَّةُ هُمُ الْمَنْسُوبُونَ لِعَلِي وَإِنْ لَمْ يَكُونُوا مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهُمَا  التَّحْفَةُ ج : ٧ ص : ٦٦ فَضْلُ فِي أَحْكَامِ لَفْظِيَّةٍ لِلْمُوْضَى بِهِ) فَجَمِيعُ أَوْلَادِ عَلِي يُقَالُ لَهُمْ مِنْ آلِهِ لِأَنَّهُمْ مِنْ بَنِي هَاشِمٍ   حَاشِيَةُ الْقَلْيُونِي ج: ٣ ص: ١٦٩ بَابٌ فِي أَحْكَامِ الْوَصِيَّةِ اللُّفْظِيَّةِ) பொருள் :  ========== அலவிகள் என்போர் அலீ (ரலி) அவர்களின் சந்ததிகள் ஆவர்; ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு பிறக்காதவர்களும் அலவிகலே! அலீ (ரலி) அவர்களின் அனைத்து பிள்ளைகளும் பனூ ஹாஷிம் சந்ததியில் வந்து விடுவதால், அவர்கள் யாவரும் நபி (ஸல்) அவர்களின்  சந்ததிகளாகவே  கருதப்படுவார்கள். நூல் : அத்துஹ்ஃபா ,  அல் கல்யூனீ ஹாஷியா விளக்கம் :  ========== அலவி எனும் சொல்லுக்கு அலீ (ரலி) அவர்களின் ஆன்மக்கள் என்றும், ஹுசைன் (ரலி) அவர்களின் வழித் தோன்றல்கள் அனைவரும் என்றும் பொருள்.  ஹள்ரத் அலீ (ரலி) அவர்களுக்கும்...

ஐந்தாவது தலைமுறையாக...

Image
================================= ஐந்தாவது தலைமுறையாக =================================  தமிழ்நாடு அரசு தலைமை காஜி, ================================= அல்லாமா, ஸலாஹுத்தீன் ================================= முஹம்மது அய்யூப் அவர்கள்: ================================= அரசு தலைமை காஜி அவர்கள் "ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் வமிசா வழியில் வந்தவர்கள்" என்று சொல்லப்படுகிறது.  இதை உறுதி செய்துகொள்ள தலைமை காஜி அவர்களிடத்திலேயே கேட்டபோது, "என் முன்னோர்கள் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள்; ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை" என்று கூறினார்கள்.  உள்ளது உள்ளபடி உண்மையை உரைத்த தலைமை காஜி அவர்கள் சித்திக் -  உண்மையாளர் பரம்பரையில் உள்ளவராகத் தான் இருப்பார் எனத் தோன்றியது. 1892 இல் நவாப் வாலாஜா முஹம்மது அலீ அவர்களின் காலத்தில் முதல் காஜியாக  பத்ருத்தவ்லா (ரஹ்) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு இன்று கடற்கரைச் சாலையில் அமைத்துள்ள பிரசிடென்சி கல்லூரி வளாகத்தில்தான் அலுவலகம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் சென்னை ர...

விருதுகள் கௌரவம் பெரும் விழா :

Image
விருதுகள் கௌரவம் பெரும் விழா :   ================================ 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராக ராஜாஜி அவர்கள் இருந்தபோது காஜி பதவிக்கு அரசு இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து ஐந்து நபர்கள் விருப்ப மனு அளித்திருந்தார்கள்.  அவர்களுக்கான நேர்காணல் தேதி அரசு மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில் நேர்காணல் - இண்டர்வியூவிற்கு நான்கு பேர் குறித்த நேரத்தில் ஆஜராகி இருந்தார்கள். முதல் அமைச்சர் ராஜாஜி அவர்கள் வந்திருந்த ஆலிம்களிடம் பேசுவதற்காக தயாரான போது, ஐந்தாவது நபர் ஹபீபுல்லாஹ் என்பவர் வராததை அறிந்து "அவர் ஏன் வரவில்லை?" என்று தம் உதவியாளரிடம் கேட்டார்.  "அய்யா! இன்று வெள்ளிக்கிழமை என்பதால் தம்மால் இண்டர்வியூவிற்கு வர இயலவில்லை" என ஹபிபுல்லாஹ் என்பவர் கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார் . உடனே ராஜாஜி அவர்கள் "ஷரிஅத் சட்டப்படி தீர்ப்பு வழங்கும் காஜி பதவிக்கு இவர்தான் பொருத்தமானவர்; ஹபீபுல்லாஹ் சாஹிபை தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக தேர்வு செய்து அறிவித்து விடுங்கள்" என முதல்வர் மூதறிஞர் ராஜாஜ...

நூல்கள் அறிமுக கூட்டம் :

Image
நூல்கள் அறிமுக கூட்டம் : ======================== பெரம்பலூர் சமூக நீதிப் படைப்பாளர்கள் சங்கம் இரண்டு நூல்கள் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றது.  அதில் ஒரு நூல் வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் நூல்! இந்த நிகழ்ச்சி வருகின்ற 23/ 11/ 2024 மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.  உங்களுக்காக  இனிய உரைகள்  காத்திருக்கின்றது!  அதனால்  உங்கள் இதயத்தின் கணம் குறையும்!  அவசியம் வாருங்கள்!  உங்களில் அதிசயம் நிகழும்!

ஆணவத்தோடு வாழ்ந்தஆத் மக்களின் அழிவு :

Image
ஆணவத்தோடு வாழ்ந்த ஆத் மக்களின் அழிவு : ===================== فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۚ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ ۖ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ﴾ [ الأحقاف: 24] தங்கள் பள்ளத்தாக்குகளை நோக்கி மேகங்கள் திரண்டு வருவதை அவர்கள் கண்டபோது "இது எங்களுக்கு மழை தரும் மேகம்" என்று கூறினார்கள்; "இல்லை! நீங்கள் விரைவாக எதை தேடினீர்களோ அதுதான் இது! அது ஒரு சுழல் காற்று; அதில் வதைக்கும் வேதனை உள்ளது" (என்று ஹூது நபி அவர்கள் கூறினார்கள்.) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ﴾ ஏழு இரவுகள் எட்டு பகல்கள் அக்காற்றை அவர்கள் மீது (அல்லாஹ்) தொடர்ந்து வீச செய்தான்; வேரோடு சாய்ந்து விட்ட பேரித்த மரங்களின் அடிபாகங்களைப் போன்று சடலங்கலாக அந்த சமூகத்தினர் வீழ்ந்து கிடப்பதை நபியை நீர் காண்பீர்! 69:7 ஆத் சமுதாய மக்கள் குறித்து அல்லாஹ் மேற்கொண்ட வசனங்களில் பேசியிருப்பதை கண்டீர்கள்.  அவர்கள் வசித்த வீடுகளும் அவர்களின் சட...

வரலாற்று ஒளியில் பெரிய வடகரை நூல் அறிமுகம் :

Image
வரலாற்று ஒளியில்  பெரிய வடகரை நூல் அறிமுகம் : =============================== வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் இந்த நூல் எனது 39 ஆவது வெளியீடு ஆகும்.  பெரிய வடகரை என் கிராமம். பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே நான் பிறந்து வளர்ந்த ஊர்.  இந்திய முஸ்லிம்கள் வந்தேறிகள் என்றும் வரலாறு இல்லாதவர்கள் என்றும் சொல்லுவோருக்கு இந்நூல் அர்ப்பணம்!  Big Bang எனும் அணு வெடிப்பின் மூலம் முதன் முதலில் உலகம் உண்டானதில் இருந்து இன்றைய நாள் வரை உள்ள எங்கள் கிராமத்தின் ஆதாரப்பூர்வமான வரலாற்றை இதில் பதிவு செய்து இருக்கின்றேன். இன்னும் பதிவு செய்யப்படாமல் எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு ஆதாரங்கள் இல்லாததால் பலவற்றை பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை தொடர்ந்து தேடி வருகிறேன். ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வரலாற்றையும், தன் கிராமம் மற்றும் வாழும் நிலப்பரப்பின் வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். எனது ஆன்மீக ஆசான் -  ஷைகுனா O.M ஹள்ரத் அவர்களுக்கு ஒரு பிரதியை ...

அது மகன் ஷத்தாத் கட்டிய சொர்க்கம்

Image
அது மகன் ஷத்தாத்  கட்டிய சொர்க்கம். : - 3 ====================== தொடர்ச்சி...... இப்படியும் ஒரு செய்தி காணப்படுகின்றது; ====================== அல்லாஹ் "இஜ்ராயீலே! நீங்கள் எப்போதாவது எவர் மீதாவது இரக்கம் கொண்டு இருக்கின்றீரா ?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! ஒரு முறை கடலில் கப்பல் ஒன்று  கவிழ்ந்துப் போனது; அதில் இருந்த அத்தனை பேரின் உயிரையும் நான் தான் கைப்பற்றினேன். உடைந்தக் கப்பலில் ஒரு கர்ப்பிணிப் பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து இருந்தாள். அதை சிறிய மரத்துண்டில் வைத்து நீந்தி கொண்டிருந்தாள்.  அச்சமயம் உனது உத்தரவுக்கிணங்க ஒரு மீனை கடிக்கச் செய்து அதன் மூலம் அந்தத் தாயின் உயிரையும் என்னையே நீ கைப்பற்றச் செய்தாய்! அது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது" எனக் கூறினார். "இதைப் போன்று வேறு ஏதேனும் சம்பவங்களை நீ சந்தித்து இருக்கிறாயா?" என அல்லாஹ் மீண்டும் கேட்டான்.  அதற்கு இஜ்ராயீல் (அலை) அவர்கள், "இறைவா! ஷத்தாத் 300 வருடங்களாக, பார்த்துப் பார்த்து சொர்க்கத்தைக் காட்டினான்; அவன் உள்ளே நுழைவதற்கு முன்பு அவன் உயிரை கைப்பற்றச் சொல்லி விட்டாய்; அது...

அது மகன் ஷத்தாத் கட்டிய சொர்க்கம். :- 3

அது மகன் ஷத்தாத்  கட்டிய சொர்க்கம். : ====================== தொடர்ச்சி...... இப்படியும் ஒரு செய்தி காணப்படுகின்றது; ====================== அல்லாஹ் "இஜ்ராயீலே! நீங்கள் எப்போதாவது எவர் மீதாவது இரக்கம் கொண்டு இருக்கின்றீரா ?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! ஒரு முறை கடலில் கப்பல் ஒன்று  கவிழ்ந்துப் போனது; அதில் இருந்த அத்தனை பேரின் உயிரையும் நான் தான் கைப்பற்றினேன். உடைந்தக் கப்பலில் ஒரு கர்ப்பிணிப் பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து இருந்தாள். அதை சிறிய மரத்துண்டில் வைத்து நீந்தி கொண்டிருந்தாள்.  அச்சமயம் உனது உத்தரவுக்கிணங்க ஒரு மீனை கடிக்கச் செய்து அதன் மூலம் அந்தத் தாயின் உயிரையும் என்னையே நீ கைப்பற்றச் செய்தாய்! அது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது" எனக் கூறினார். "இதைப் போன்று வேறு ஏதேனும் சம்பவங்களை நீ சந்தித்து இருக்கிறாயா?" என அல்லாஹ் மீண்டும் கேட்டான்.  அதற்கு இஜ்ராயீல் (அலை) அவர்கள், "இறைவா! ஷத்தாத் 300 வருடங்களாக, பார்த்துப் பார்த்து சொர்க்கத்தைக் காட்டினான்; அவன் உள்ளே நுழைவதற்கு முன்பு அவன் உயிரை கைப்பற்றச் சொல்லி விட்டாய்; அது எனக...