Posts

Showing posts from September, 2025

நாவின் வலிமை மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி

Image
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== நேற்றைய தொடர்ச்சி....6 நாவின் வலிமை : ================= குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லி வந்தார்கள். அவர்கள் பேசத் தொடங்கி விட்டால்  பல்லாயிரக்கணக்கானோரும் மௌனித்து விடுவார்கள். "அவர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு பயானிலும் நூற்றுக்கணக்கானோர் உணர்விலந்து விழுந்து விடுவார்கள்; பல்லாயிரக்கணக்கானோர் அழுது துடிதுடிப்பார்கள்; பல நூற்றுக்கணக்கானோர் அழுவதோடு மட்டுமின்றி தம் ஆடைகளை கிழித்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் நான்கைந்து பேர் உயிர் இழந்து விடுவார்கள்" என அவர்களின் மூத்த மகனார் ஸைய்யதுனா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இருண்டு போயிருந்த இதயங்களுக்கு ஒளி ஏற்றியதால் அவை புத்துயிர் பெற்றது. பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழ வழி வகுத்தது. பல்லாயிரக்கணக்கான மாற்று மதத்தினர் இஸ்லாத்தில் இணைந்தனர். அதனால் முஹ்யிதீன் - மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்று பொதுமக்கள் பட்டப்பெயர் சூட்...

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி ஈஷா (அலை) அவர்களின் ஆசி

Image
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ================================== = நேற்றைய தொடர்ச்சி......5 ஈஷா (அலை) அவர்களின் ஆசி : ============================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "மக்களுக்கு அறிவுரை சொல்ல வருவோரிடம் மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும்" எனக் கூறுகிறார்கள். 1.  ஷரீஅத் - மார்க்கக் கல்வியில் அதீத திறமை பெற்றிருக்க வேண்டும். 2.  ஆன்ம ஞானம் - சூபித்துவக் கலையில் ஈடுபட்டு முதிர்ச்சி அடைந்திருப்பதோடு அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும். 3.  எதை சொல்கிறோமோ அதை செய்யும் வழக்கம் இருக்க வேண்டும். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மேற்கண்ட மூன்று வரையறைகளையும் தம் வாழ்க்கைக்கு வகுத்துக் கொண்டு செயல்பட்டதால் அவர்களின் சொல் கேட்கும் அனைவரின் இதயத்திற்குள்ளும்  சென்றடைந்தது. இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய மாணவர்கள், சிஷ்யர்கள் ஆகியோர் அவர்கள் பேசும் பேச்சை எழுத்து வடிவமாக்கி உலகம் முழுவதும் பரவச் செய்தார்கள். அதனாலும் அவர்களின் புகழ் பரவியது.  அந்த நூல்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கின்றது. ஷைகு உமர் ...

மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி ...... தொடர்....4

Image
நேற்றைய தொடர்ச்சி....4 | | | மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== • • • • • புதிய பாணியில் அழைப்புப் பணி : ================================ இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் 11 வயதிலிருந்து 18 வயது வரை 1088-1095 / ஹிஜ்ரி  480 - 485 ஆகிய காலகட்டத்தில்  உள்ளூரில் படித்தார்கள்.  பின்னர் 18 வயதிலிருந்து 30 வயது வரை 1095 - 1107 / ஹிஜ்ரி 485 - 500 காலகட்டத்தில் பக்தாத், மக்கா, மதீனா போன்ற பல்வேறு இடங்களில் மார்க்க அறிஞர்களிடம் பயின்றார்கள். பின்னர் 30 வயது முதல் 40 வயது வரை 1107 -  1117 / ஹிஜ்ரி 500 - 510 காலகட்டத்தில் ஞான கல்வியை மட்டுமே பல அறிஞர்களிடம் பயின்றார்கள் . பின்னர் காடுகளுக்குச் சென்று சில வருடங்கள் கடும் தவம் புரிந்து ஆன்ம சுத்திகரிப்பு செய்து கொண்டு மீண்டும் ஊருக்குள் வந்து 1117 -1125 / ஹிஜ்ரி 510 - 518 காலகட்டத்தில் மக்களிடையே மார்க்கப் பிரச்சாரம் செய்தார்கள். அப்பொழுது காஜி அபூ ஸையித் மக்ரமீ (ரஹ்) அவர்கள் பக்தாத் ருசஃபா பகுதியில் باب الازج பாபுல் அஸ்ஜ் எனும் ஏரியாவில் ஹிஜ்ரி 528 ( ...

மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி ஞான கல்வி

Image
நேற்றைய தொடர்ச்சி...... ========================== மாபெரும் ஞானி மஹபூப் சுபஹானி முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== ஞான கல்வி : சுமார் பத்து வருடங்கள் பக்தாதில் மார்க்கக் கல்வியை பயின்ற பிறகு ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிஃபத் ஆகிய ஞான முறைக்கல்வியை கற்க முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  பொதுவாகவே முற்காலத்தில் மார்க்கக் கல்வியை கற்பிக்கும் பாடசாலைகள் குருகுலம் போல் இயங்கி வந்திருக்கின்றது; அங்கு பயின்று வெளியேறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆன்ம ஞான பயிற்சியை பெற்றே வருகின்றனர்.  அதனால்தான் அவர்கள் அன்று செய்த தீனுடைய சேவைகள் உடனுக்குடன் மக்களிடம் சென்று மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜீலானி (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் ஹம்மாது (ரஹ்) அவர்களிடமும் பின்னர் காஜி அபூ ஸயித் அல் முபாரக் அல் மக்ஸூமி (ரஹ்) அவர்களிடமும் ஆன்ம ஞான பயிற்சி பெற்று பைஅத் - ஞான தீட்சை பெற்றார்கள். மார்க்கக் கல்வி பயின்று வந்த வேலைகளிலேயே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் காடுகளுக்குச் சென்று  இரவு பொழுதிலும் விடுமுறை நாட்களிலும் இபாதத் -  இறைவழ...

இளமையும், கல்வியும்...

Image
நேற்றைய தொடர்ச்சி--------> மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) ================================== இளமையும், கல்வியும்... ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ இவ்வளவு சிறப்பு தன்மைகளைப் பெற்ற கௌசூல் அஃலம் அவர்கள் இறை நெறி தவறாத தாத்தா, தந்தை, அன்னை போன்றவர்களால் வளர்க்கப்பட்ட ஜீலானி (ரஹ்) அவர்கள் எவ்வளவு பேணுதலாக வளர்க்கப்பட்டு இருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.  ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு விவரம் தெரிவதற்கு முன்பே தந்தையை இழந்து அனாதையானார்கள். அதனால் தாய் வழி தந்தையான தாத்தா அப்துல்லாஹ் ஸவ்மயீ அவர்களே சிறப்பாக வளர்த்து வந்தார்கள். தமது சொந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வியை முறையாகக் கற்றார்கள். பின்னர் 18 வயதை அடைந்த பிறகு மேலும் விசாலமான கல்வியை கற்க பிற நகரங்களுக்குச் செல்ல விரும்பினார்கள். இஸ்லாம் மார்க்கத்தின் துறை சார்ந்த அனைத்து கல்விகளையும் முழுமையாக, முறையாக படிக்க வேண்டுமானால் பக்தாது செல்ல வேண்டும் என்பதை அறிந்தார்கள். ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது ஆசையை அன்னையிடம் தெரிவித்த போது மிகவும் மகிழ்வுற்றார்கள்.  இஸ்லாமிய கல்வியையும், ...

மாபெரும் ஞானி மஹ்பூப் சுப்ஹானி

Image
1.மாபெரும் ஞானி மஹ்பூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ================================== இது ஏற்கனவே நான் எழுதி வெளியிட்டு இருந்த ஒரு நூல்!  இதை மீண்டும் திருத்தி அமைத்தும் பல புதிய தகவல்களை இணைத்தும் வெளியிட நினைத்து முதலில் முகநூலில் வெளியிட நாடி உள்ளேன்.  வாசியுங்கள்!  வாசித்தபடி வாழுங்கள்!! முன்னுரை மனிதன் மனிதனாக வாழ வலிமார்களை அனுப்பிக் கொண்டிருக்கும் அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்! நபிமார்களின் வாரிசுகளில் முதல் தரமாணவர்களான வலிமார்களை இனம் காட்டித்தந்த இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் வலிமார்கள் எங்களூரில் (பெரிய வடகரை ) அடங்கி இருக்கும் இறை நேசர் மவ்லானா, அப்துல்லாஹ் ஹள்ரத் பாகவி (ரஹ்) அவர்கள் மீதும் இறையருள் உண்டாவதாக! நபிமார்களில் சிறந்தவராக நபி (ஸல்) அவர்கள் திகழ்வது போல் வலிமார்களில் சிறந்தவராக ஷைஹு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் திகழ்கிறார்கள். ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய வலிமார்களில் ஒருவரான ஷைஹு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை அன்று முதல் இன்றுவரை அவனியில் தோன்றிய அனைத...

மீலாது விழா கொண்டாடிய இரவில் நடந்த அதிசயம்

Image
மீலாது விழா கொண்டாடிய  இரவில் நடந்த அதிசயம் ============================ காஃபிரின் கனவில்  கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்  ===============≠================== அல்லாமா ஆபித் சிந்தீ (ரஹ்) அவர்கள் தனது ஹுக்மு இத்ஆமுத் தஆமு ஃபீ முநாசபாத்தில் ஃபரஹி அவித் தரஹி எனும் உணவளிப்பது சம்பந்தமான நூலில் கூறுவதாவது;  அல்லாமா ஆபித் சிந்தீ (ரஹ்) அவர்கள் 1841 களுக்கு முன்பு மதீனாவில் வாழ்ந்த பேரறிஞர்களில் ஒருவர். புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களுக்கு ஷரஹ் -  விரிவுரை எழுதியவர்; தஃப்ஸீர் பைலாவி போன்ற நூல்களுக்கும் விரிவுரை எழுதியிருக்கிறார். இவர் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்; அவற்றில் ஒன்றுதான் மேற் குறிப்பிட்ட நூல். நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாளில் தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு முஸ்லிம் தம் தெருவில் இருந்த அனைவருக்கும் விருந்தளிக்கிறார்; அந்த விருந்தில் மத பாகுபாடு இல்லாமல் அனைவரும் வந்து கலந்து கொள்கிறார்கள்.  இந்நிலையில் ஒரு யூதப் பெண், "ஏன் அவர் விருந்தளிக்கிறார்?" என விருந்து சாப்பிட்டு சென்ற ஒருவரிடம் கேட்டாள். அப்பொழுது அவர், "முஹம்மது நபி (ஸ...

இஸ்லாத்தை விட்டு விடாதே!

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 71 இஸ்லாத்தை விட்டு விடாதே! ============================== அபூ அலீ அல் ஹஸன் அல்ஹிகாரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் ஒரு வீட்டுக்குள் நுழைவது போன்று கனவு கண்டேன்; அங்கே நபி (ஸல்) அவர்கள் ஒருக்கழித்து படுத்திருந்த நிலையில் நான் பார்த்தேன். கிப்லா திசையில் அவர்களுடைய சட்டை கழட்டி வைக்கப்பட்டிருந்தது; நான் சென்று இடது தோள் புஜத்திற்கு நேராக அமர்ந்தேன்; நபி ஸல் அவர்கள் என் பக்கம் திரும்பி, "நீ இஸ்லாம் மார்க்கத்தை விட்டு விடாதே!" என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விற்கு மிகவும் அச்சப்படுகிறவன்; நான் எப்படி தீனுல் இஸ்லாத்தை விடுவேன்?; நான் எனது வலது கரத்தால் இடது கரத்தின் விரல்களோடு விரலாக கோர்த்து பிடித்துக் கொண்டு நான் இஸ்லாத்தை பற்றிப் பிடித்துக் கொள்வேன் -  அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்னக ரசூலுல்லாஹ் " என்று சொன்னேன்.  நூல் : ஹுல்யதுல் அவ்லியா  நல்ல மனிதர்கள...

இவர்கள்தான் நபிகள் நாயகம்

Image
கலைவாணர் அரங்கத்தில்  1500 ஆவது மீலாது விழா அழைப்பு  ================================== இவர்கள்தான் நபிகள் நாயகம் ************************************** 1493 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டின் மலைகள் நிறைந்த மக்கா நகரில் 20.04.571 திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் முஹம்மது நபி பிறந்தார்கள். எட்டு வயதிலிருந்து பனிரெண்டு வயது வரை ஆடு மேய்த்தார்கள். பனிரெண்டு வயதிலிருந்து வணிகம் செய்தார்கள். இருபத்தைந்தாம் வயதில் ஏற்கெனவே இருமுறை வாழ்விழந்த 40 வயது கதீஜாவை மணந்தார்கள். சிறுபிராயம் முதலே அல் அமீன் "உண்மையாளர்" என்று அடைமொழிப் பெற்ற அவர்கள் தன் நாற்பதாம் வயதில் இறைவனிடமிருந்து செய்தி வருவதாகக் கூறினார்கள். மக்கள் நம்பினார்கள். ஏற்கெனவே செல்வமும், செல்வாக்கும் மிக்கவராக அவர்கள் திகழ்ந்ததால் தாம் ஒரு இறைத்தூதர் என்று கூறுவதன் பின்னணியில் புகழும், பணமும் சேகரிக்கும் அற்ப நோக்கம் இல்லை எனப் புரிந்த மக்கள் அவரின் பின்னால் அணி அணியாய் திரண்டனர். அப்பொழுது மக்கா மாநகர முக்கியஸ்தர்கள், செல்வந்தர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, "மக்காவின் ஆட்சி பொறுப்பை அளிக்கிறோம்,  நீர் ப...

நிம்மதி வேண்டுமா?

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 70 நிம்மதி வேண்டுமா? ======================= ஷைகு அபூ இஸ்ஹாக் அஷ்ஷீராஜி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  நான் பக்தாதில் உறங்கிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; அவர்களோடு அபூ பக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் குறைவான அறிவிப்பாளர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ்களை அறிவித்துத் தாருங்கள்;  அவற்றை உங்களிடம் இருந்து நேரடியாக எனக்கு கிடைத்த நற்செய்தியாக நான் கருதுவேன்; உலகில் அதை கொண்டு நான் கண்ணியப்படுத்தப்படுவேன்; மேலும் அதுவே எனக்கு மறுமையில் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "யா ஷைகு" என என்னை அழைத்தார்கள்; எனக்கு 'ஷைகு' என பெயர் வைத்து என்னோடு பேசினார்கள்; அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; "யார் நிம்மதியை தேட...

கொலைகார இஸ்ரேலே! அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து

Image
கொலைகார இஸ்ரேலே!  அமெரிக்காவே!  காசா மீதான போரை நிறுத்து  ================================== பாலஸ்தீன் காசா மீது 712 வது நாளாக இன்று வரை யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த யுத்தத்தில் இதுவரை 65000/ ஆயிரம் பேருக்கும் மேலாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 15 வயது முதல் 65 வயது வரையிலான ஆண்கள் சுமார் 25,211 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என Palestinian Ministry of Health - பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 18,592 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 10,328 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக Washington Institute — May 19, 2025 அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. 972 Magazine மற்றும் The Guardian, Local Call ஆகிய ஊடகங்களின் கூற்றுப்படியும், இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத் தரவுப் பட்டியலின் அடிப்படையிலும்  Hamas மற்றும் PIJ போராளிகள் 8,900 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகிறது. 732 பேர் பட்டினியால் இறந்து இருக்கிறார்கள்; இது அல்லாமல்  பட்டினியால் இறந்த குழந்தைகளின் எண்ண...

எனது ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டே இரு!

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 69 எனது ஹதீஸ்களை  அறிவித்துக் கொண்டே இரு! ============================== சுலைமான் பின் யஜீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; ஹிஜ்ரி 293 களில் ஈரானில் வாழ்ந்த அலீ பின் அபீ தாஹிர் (ரஹ்) அவர்கள் சிரியாவிற்கு பயணமானார்கள்; அவர்கள் அதிகமான ஹதீஸ்களை சேகரித்து எழுதி வைத்திருந்தார்கள். அவர் தனது நூல்களை ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து கொண்டு கடலில் பயணித்தார்.  கடல் கொந்தளிப்பின் காரணமாகவும், கப்பலின் எடை கூடுதலாக இருந்ததின் காரணமாகவும் கப்பல் நிலை தடுமாறியது; அப்பொழுது அவர் தனது பெட்டியை கடலில் தூக்கி எறிந்தார்; சிறிது நேரத்தில் கடல் அமைதி அடைந்தது;  பின்னர் கப்பலில் இருந்து இறங்கியதும் துறைமுகத்திலேயே மூன்று நாட்கள் தங்கி இருந்து, இரவும் பகலும் தொழுது இறைவனிடம் பிரார்த்தித்தார். மூன்றாவது நாள் அதிகாலையில் இறைவனை தொழுத பிறகு, "இறைவா! உன் முகத்திற்காகவும், நபியின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கா...

ஸஹீஹ் - தரமான நபிமொழி

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 8 தொடர் : 68.   ஸஹீஹ் -  தரமான நபிமொழி  ============================== ஹதீஸ் கலை வல்லுநர் இமாம் தப்ரானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்களிடம் ஒரு ஹதீஸின் தரம் குறித்து கேட்டேன்; அது இந்த ஹதீஸ் தான்!  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய்.  (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. இந்த ஹதீஸின் தரம் குறித்து நான் கேட்டதற்கு ஸஹீஹ் - தரமான நபி மொழி தான் என மூன்று முறை கூறினார்கள்.  நூல் : அல் முஸ்தத்ரஃப்  பொதுவாகவே ஒவ்வொருவரும் நெருக்கடிகளில் உழலும் போது தான் நல்ல கன...

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்

Image
அதிரை ஆசான் மௌலானா  முஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்  =================÷÷÷÷÷÷÷÷========= ஒவ்வொரு மாணவரும் துறை சார்ந்த ஒவ்வொரு கல்வியையும் ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார்கள்.  அறிவியலை இன்ன ஆசிரியரிடமும், கணக்கை இன்னா ஆசிரியரிடமும் ஆங்கிலத்தை இந்த ஆசிரியரிடமும் கற்றுக் கொண்டதாக சொல்லுவார்கள். எனக்கு ஒழுக்கத்தை கற்பித்தவர் இந்த ஆலிம் தான்! இவர் மக்தூம் முஹம்மது லப்பை /  கதீஜா பிவி தம்பதியருக்கு மகனாக தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் பிறந்தார்.  ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் அதிராம்பட்டினம் ஸலாஹிய்யா அரபுக் கல்லூரியில் சில வருடங்களும் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில் சில வருடங்கள் என நான்கு ஜும்ராக்களை படித்தார். பின்னர் குடும்ப கஷ்டங்களின் காரணமாக சென்னை, பெங்களூர், ஸ்ரீரங்கப்பட்டினம் என பல்வேறு நகரங்களில் உணவகங்களில் பணி செய்தார். 1974 களில் ஒரு நாள் சினிமா பார்த்துவிட்டு வந்து பள்ளிவாசலில் தொழுத பிறகு  "இறைவா! இனி நான் சினிமா பார்க்க மாட்டேன...