Posts

Showing posts from February, 2026

நாகூர் ஹனிபா பாட்டு பாடத் தெரியுமா?

Image
நாகூர் ஹனிபா  பாட்டு பாடத் தெரியுமா? **************************    -   பாகவி, ஃபாஜில் ஜமாலி ஆலிம் ஒருவர், தம்மிடம் நுழைவுத்தேர்வுக்கு வந்தவரிடம், "உனக்கு நாகூர் ஹனிபா பாடல் தெரியுமா?" எனக் கேட்டதும், அவர் பாடலை பாடினார். "நீ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று விட்டாய்" என்று கூறினார். அரபு மொழியில் ஒரு பழமொழி உண்டு.  سل المجرب ولا تسأل الحكيم அறிவாளியிடம் கேட்காதே! அனுபவசாலியிடம் கேள்! "ஆயிரம் அறிவாளிகளின் சொல்லை விட , ஒரு அனுபவசாலியின் சொல் மேலானது" என கிரேக்க பழமொழி ஒன்று உள்ளது. ஒரு மேம்பாலத்தின் அடியில் போகமுடியாமல் கண்டைனர் லாரி சிக்கிக்கொண்டது. டை கட்டிய பல அறிவாளிகள் முயற்சித்தும் லாரியை முன்னும் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னாலும் கொண்டு வர இயலவில்லை. பாலத்தின் அடியில் வழமையாக அமர்ந்திருக்கும் ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி, அவர்களில் மிகப்பெரிய அதிகாரியிடம், "இதற்கு நான் வழி சொல்கிறேன்" எனக் கூறினார். "பல பட்டங்கள் பெற்ற நாங்களே செய்வதறியாது திணறுகிறோம், நீ என்ன சொல்லப் போகிறாய்?" என கேவலமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே மேற...

இன்று தமிழ்நாட்டில் ரமலான் முதல் பிறை பார்க்கப்பட்டதாக ஆலிம்களாலும் காஜிகளாளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது

Image

நோன்பாளிகளுக்கு கண்கள் வறண்டு போகுமா?

Image
நோன்பாளிகளுக்கு  கண்கள் வறண்டு போகுமா?  ============================= 2024 ஆம் ஆண்டு ரமலான் நோன்பு நோற்ற 13 ஆண்கள் மற்றும் 27 பெண்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது.  சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  சராசரி ஆண்களின் வயது 38.17 பெண்கள் சராசரி வயது 38. 07. 12 மணி நேரங்களில் இருந்து 13 அரை மணி நேரம் வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்கும் பொழுது அவர்களுடைய கண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகுமா? கண்கள் வறண்டு போகுமா? நீர் சத்து குறைவதால் ஏதேனும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஷுடான் வாங் , ஸ்கெபன்ஸ் கண் ஆராய்ச்சி நிறுவனம்  மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, அமெரிக்கா ரோவாய்டா அலீல்டின் , ஷெஃபீல்ட் டீச்சிங் ஹாஸ்பிடல்ஸ் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட், யுனைடெட் கிங்டம் அலி லாமின் , மான்செஸ்டர் பல்கலைக்கழக NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (MFT), யுனைடெட் கிங்டம் ஆகிய மருத்துவ ஆய்வு கழகத்தின் உயர்நிலை மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையை  08 ஜனவரி 2025 அன்று Takayoshi Masuoka , கனசாவா மருத்துவ பல்கலைக்கழகம், ஜப்பான் மதிப்பாய்வு செய்து வெளியி...

ரமலானில் வாகன விபத்துகள் அதிகரிப்பது ஏன்?

Image
ரமலானில் முஸ்லிம்கள் வாகன விபத்துகளில் அதிகமாக சிக்குவது ஏன்?  ================================== 2013 - 2016 காலகட்டத்தில் ஈரான் நாட்டின் வடபகுதியில் கஸ்பியன் கடற்கரை ஓரத்தில் ரஷ்ட் எனும் மாநிலத்தில் குயலான் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நடக்கும் ஆக்சிடென்ட் விபத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது.  வெவ்வேறு வானிலை அமைப்புகள் உள்ள சந்தர்ப்பத்திலும், ரமலான் அல்லாத சந்தர்ப்பத்திலும் கூட ஆய்வு செய்யப்பட்டது.  போக்குவரத்து விபத்துகள் 0.040 என்ற அளவிலும், மற்றும் காயங்கள் 0.001 என்ற அளவிலும்  கணிசமாக அதிகரித்தன. போக்குவரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்திருந்தது. அதிலும் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்க நெருங்க விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  காரணம் நோன்பு திறப்பதற்காக விரைந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்கள் செயல்படுவதாலும்,  ட்ராபிக் - வாகன நெருக்கடிகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவதாலும், சர்க்கரை - நீரழிவு நோய் உள்ளவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மன நெருக்கடிக்குகளுக்கு ஆளாவதாலும் அவசரத்தில் ஏதோ ஒன்று செய்வதால் விபத...

கனவின் காட்சி எதார்த்த சாட்சி

Image
கனவின் காட்சி எதார்த்த சாட்சி  =============================== இந்தத் தொடர் இன்றுடன் முடிந்தது. <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 87 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• முஹம்மது பின் ஸஈத் அல் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் கி.பி. 1211 - 1294 ஹிஜ்ரி 608 காலகட்டத்தில் எகிப்து பெனி ஸுவெய்ஃப் நகரத்திற்கு அருகிலுள்ள பூஷ்ரி Busiri எனும் கிராமத்தில் பிறந்து எகிப்து போன்ற நகர்ப்புறங்களில் வளர்ந்தார்கள். இவர்கள் சூஃபி மரபு கவிஞர் ஆவார்; இவர்கள்  الهمزية في مدح خير البرية  ஹம்ஸிய்யா المضرية முழரிய்யா الدالية தாலிய்யா  متفرقة للبوصيري  பல சிறிய கவிதைகள் என பல கவிதை நூல்களை இயற்றி இருக்கிறார்கள். 83 வயதுவரை வாழ்ந்த இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் தம் இறுதி காலங்களில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் சிரம...

முன்னுரை

Image
முன்னுரை நற் சிந்தனைகளை விதைத்து, இதயத்தை உயிர்ப்பித்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தும் நித்திய வழிகாட்டியான அல்குர்ஆனை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! முப்பொழுதும் இறைநினைவோடு வாழ 'இன்ஷா அல்லாஹ்!' எனும் இனிய சொல்லை இஸ்லாமியர்களின் வாழ்வியலாக ஆக்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் தோழர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு எப்போதும் பயமும், மனக்குழப்பமும், தூக்கமின்மையும் இருக்கின்றது; நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.  அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃபை முழு கவனத்துடன் ஓதி வாருங்கள்; சில வாரங்களில் குணமாகும்" எனக் கூறினார்கள். இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தம் தஃப்ஸீரில் ஜும்மாவுடைய நாளில் சூரத்துல் கஹ்ஃபை ஓதுகிறவர்களுக்கு ஒரு மறைமுகமான பாதுகாப்பு வளையத்தை அல்லாஹ் அமைக்கின்றான்" எனக் கூறுகிறார்கள். இமாம் இப்னுல் ஜவ்ஸி (...

ரமலான் நோன்பும் உடல் நலமும் உலகளாவிய மருத்துவ ஆய்வுகள்

Image
இன்று ஜும்ஆ உரை  ---------------------------------------  ரமலான் நோன்பும் உடல் நலமும் உலகளாவிய மருத்துவ ஆய்வுகள் ================================== இஸ்லாம் கிறிஸ்துவம், இந்து மதம், யூத மதம் போன்ற பல்வேறு மதங்களின் மரபுகளில் நோன்பு -  உண்ணாவிரதம் இருப்பது பரவலான மரபாகும்.  விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை சுமார் 13 மணி நேரம் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் உண்பதையும் குடிப்பதையும் தவிர்த்து நோன்பு நோற்கிறார்கள்.  நோன்பு நோற்கும் இந்த முறை 1447 வருடங்கள் பழமையானது. உலகத்தில் வாழும் 30% சதவீத முஸ்லிம்களில் 23% சதவீத முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள். உலகத்தில் உள்ள 195 நாடுகளில் 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.  இவர்கள் அந்தந்த நாடுகளின் பல்வேறு சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தின் ஒரே சட்டத்தை பின்பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு நோன்பு நோற்று வாழ்கிறார்கள்.  ரமலான் நோன்பின் நேரங்கள் ஒவ்வொரு நாட்டின் அட்சரேகையை பொறுத்து (பூமியின் 23½° சாய்வு காரணமாக) மாறுபடும். நார்வே நாட்டில் அதிகபட்...

ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை

Image
ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை  ===================================== பத்ரு யுத்தம் மிகப்பெரிய வெற்றியை இஸ்லாமியருக்கு ஈட்டி தந்தது; அதனால் அனைத்து ஸஹாபாக்களும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். குள்ளமான உருவம் கொண்ட அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அந்த யுத்தத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த சாகச நிகழ்வையும் செய்யவில்லை.  ஆனால் மற்ற நபித்தோழர்கள் எதிரிகளில் ஒருவரையோ இருவரையோ கொலை செய்திருக்கிறார்கள்; காயப்படுத்தி இருக்கிறார்கள்; எதிரிகளை புறமுதுகு காட்டி ஓட செய்திருக்கிறார்கள்.  குள்ளமாக இருந்ததால் நம்மால் இது போன்ற சாதனைகளை செய்ய இயலவில்லையே என்கிற வருத்தத்தோடு நபிகள் நாயகம் அவர்களை சந்தித்தார்கள்.  நபி (ஸல்) அவர்கள் அவரின் முக வாட்டத்தை புரிந்து கொண்டு அருகில் கிடந்த ஒரு ஈட்டியை எடுத்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கைகளில் திணித்து, "இந்தப் போர்க்களம் முழுவதும் சென்று சுற்றிப் பாருங்கள்; எவரேனும் சாகாமல் இருந்தால் அவரை நீங்கள் சாகடித்து விடுங்கள்; உங்களுக்கும் மறுமையில் மிகப்பெரிய வெகுமதி கிடைக்கும்" என்று கூ...

ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை

Image
ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை  ===================================== பத்ரு யுத்தம் மிகப்பெரிய வெற்றியை இஸ்லாமியருக்கு ஈட்டி தந்தது; அதனால் அனைத்து ஸஹாபாக்களும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். குள்ளமான உருவம் கொண்ட அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அந்த யுத்தத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த சாகச நிகழ்வையும் செய்யவில்லை.  ஆனால் மற்ற நபித்தோழர்கள் எதிரிகளில் ஒருவரையோ இருவரையோ கொலை செய்திருக்கிறார்கள்; காயப்படுத்தி இருக்கிறார்கள்; எதிரிகளை புறமுதுகு காட்டி ஓட செய்திருக்கிறார்கள்.  குள்ளமாக இருந்ததால் நம்மால் இது போன்ற சாதனைகளை செய்ய இயலவில்லையே என்கிற வருத்தத்தோடு நபிகள் நாயகம் அவர்களை சந்தித்தார்கள்.  நபி (ஸல்) அவர்கள் அவரின் முக வாட்டத்தை புரிந்து கொண்டு அருகில் கிடந்த ஒரு ஈட்டியை எடுத்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கைகளில் திணித்து, "இந்தப் போர்க்களம் முழுவதும் சென்று சுற்றிப் பாருங்கள்; எவரேனும் சாகாமல் இருந்தால் அவரை நீங்கள் சாகடித்து விடுங்கள்; உங்களுக்கும் மறுமையில் மிகப்பெரிய வெகுமதி கிடைக்கு...

புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு விழா

Image
புதிய பள்ளிவாசல்  கட்டிடம் திறப்பு விழா  ====================== عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ، مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمِفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، (سنن ابن ماجه) ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்;  “யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசல் கட்டுகிறாரோ — அது பறவையின் கூடு அளவாக இருந்தாலும் — அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.” நூல் : இப்னுமாஜா நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவில் குபா பகுதியில் முதன் முதலாக மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலை கட்டி முடித்த பிறகு தொழுதார்கள்.  பின்னர் வீட்டிலேயே உளூ செய்து கொண்டு இங்கு வந்து தொழுவோருக்கு ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என அறிவித்தார்கள்.  அதாவது மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலுக்கு வந்து தொழுவோருக்கு மட்டும் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்பதின் நோக்கம் புதிய பள்ளிவாசலில் ஆர்வமாக வந்து அனைவரும் தொழ வேண்டும் என்பதுதான் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.  எனவே  ஜமாஅத்துல...

சமாதானம் ஆகிவிடு!!

Image
சமாதானம் ஆகிவிடு!! <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 86 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• ஷைகு ஷிஹாபுத்தீன் அப்துல் வாரிஸ் அல் மாலிகீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  எனக்கும் ஷைகு நாஸிருத்தீன் முஹம்மது அல் பக்ரீ (ரஹ்) அவர்களுக்கும் இடையே சில காரணங்களால் முரண்பாடு இருந்தது; அதனால் நான் அவரை விட்டும் விலகி வாழ்ந்து வந்தேன்.  இந்நிலையில் ஒரு நாள் நான் நபி ஸல் அவர்களை கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், "ஷைகு நாஸிருத்தீன் முஹம்மது அல் பக்ரீ (ரஹ்) அவர்களோடு  சமாதானம் ஆகிவிடு" என்று கூறினார்கள்.  உடனே நான் கண் விழித்ததும் எனது ஊரில் இருந்து அவர் ஊருக்குச் சென்று அவர்களோடு சமாதானம் ஆனேன். நூல்: அத்துரருல் காமினா ஷைகு ஷிஹாபுத்தீன் அப்துல் வாரிஸ் அல் மாலிகீ (ரஹ்) அவர்கள் மாபெரும் ஹதீஸ் துறை அறிஞராகவும், சூஃபி ஷைகுவாகவ...

அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு

Image
அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 84 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• அபூ மூஸா அத்துர்கீ (ரஹ்) அவர்கள் கலீஃபா அல் முதவக்கில் அவர்களுடைய படை தளபதிகளில் ஒருவராக இருந்தார்.  அவர் மிகப்பெரும் போர்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அவருக்கு ஒரு போதும் காயங்கள் ஏற்பட்டதே இல்லை; அதே நேரம் அவர் போர் செய்யும் பொழுது கவச உடைகள், பாதுகாப்பு அணிகலன்கள் எதையும் அணிவதும் இல்லை.  இந்நிலையில் அவரிடம் ஒருவர் இது குறித்து கேட்டார்; அதற்கு அவர், "நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்' என்று நான் கேட்டுக் கொண்டேன்.  அப்பொழுது அவர்கள், "உமக்கு எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாது; ஏனென்றால் எனது வழித்தோன்றல்களில் ( - அஹ்ல ப...

காஜி பதவி வேண்டாம் என்று சொன்னவருக்கு நேர்ந்த கதி....

Image
குற்றமற்றவரை அடிக்கிறாயா? <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> காஜி பதவி வேண்டாம் என்று சொன்னவருக்கு நேர்ந்த கதி.... ==================================== மாதம்: 13 தொடர்: 83 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• அன்றைய ஈராக்கின் அதிபர் இப்னு ஹுபைரா அவர்கள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களை  நீதிபதி பதவிக்கு நியமிக்க விரும்பினார்; "ஒரு சமயம் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஏற்கவில்லை என்றால் சத்தியமாக அவருடைய தலையில் நான் சாட்டையால் அடிப்பேன்" என்று கூறினார். இந்த செய்தி இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் சொல்லப்பட்ட போது அவர்கள், "இந்த உலகில் என்னை அவர் சாட்டையால் அடிப்பது, மறுமை நாளில் இரும்பு கம்பிகளால் நான் அடிக்கப்படுவதை விட எளிமையானது, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அந்தப் பொறுப்பை ஏற்க மாட்டேன்; அவர் என்னை கொன்றாலும் சரிதான்" என்ற...

மன்சூர் அல் ஜமாலை விடுதலை செய்!

Image
மன்சூர்  அல் ஜமாலை விடுதலை செய்! <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 83 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• அஹ்மத் பின் யஜீத் அல் முஹல்லபீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அப்பாஸியா கலீஃபாக்களில் ஒருவரான அல் முஃதமித் (ரஹ்) அவர்களிடம் ஒரு இரவு இருந்தோம். அவர் தன் படுக்கையில் தலையணையிலிருந்து தலையை தூக்கிக் கொண்டு "நீங்கள் யாரும் இங்கிருந்து செல்லக்கூடாது" என சொன்ன  பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக உறங்கி விழித்தார். "சிறையில் உள்ள மன்சூர் அல் ஜம்மால் (ஒட்டகத்தை வைத்து தொழில் செய்கிறவர்) என்பவரை அழைத்து வாருங்கள்" என்று கூறினார்; அவ்வாறே அவர் அழைத்து வரப்பட்டார். கலீஃபா: எவ்வளவு காலமாக நீ சிறையில் இருக்கின்றாய்?  அவர்: மூன்று ஆண்டுகளாக.... கலீஃபா: உனது உண்மையான பிரச்சனையை சொல்!  அவர் : நான் மவ்சூல் நகரைச் சேர்ந்தவன...

என்னிடம் காட்டிய மரியாதைக்காக...

Image
என்னிடம் காட்டிய மரியாதைக்காக... <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 81 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹ்) அவர்களின் தந்தை அவர்கள் ஹஜ் முடித்துவிட்டு மதீனாவிற்கு ஸியாரத் செய்ய வந்திருந்தார்கள். அப்பொழுது மதீனாவின் ஆளுநர் அவர்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.  ஆளுநர் கூறினார்; "உங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய புனித அறையை திறந்து காட்ட விரும்புகிறேன்; நீங்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் நபிகளாரை ஸியாரத்து செய்யுங்கள்; இந்த பாக்கியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை" மன்னர் அவர்கள், "அல்லாஹ்விடம் இருந்து பாதுகாப்பு வேண்டுகிறேன்; பள்ளிவாசலின் ஒரு ஓரத்தில் நின்று நான் ஸியாரத்து செய்து கொள்கிறேன்; நபிகளாருக்கு அருகில்...

சூரா தபாரக் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி

Image
சூரா தபாரக்  தொடர்புடைய ஒரு நிகழ்ச்சி <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 81 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• ஒரு ஷைகு அவர்கள் காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அனுமதிக்கப்பட்டதும் அவர் உள்ளே வந்தார்; அவர் வயதான தோற்றத்தில், அழகான உருவ அமைப்பில், கம்பீரமாக காணப்பட்ட முதியவராக இருந்தார். "ஷைகு அவர்களே! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.  "நான் வெளிநாட்டில் இருந்து வருகிறேன்! இந்த ஊர் காரர் அல்ல!" என்று பதில் அளித்தார்.  காஜா புஜ்ரக் (ரஹ்) அவர்கள், "உங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருக்கின்றதா?" என்று கேட்டார்.  அதற்கு அவர், "நான் நபி (ஸல்) அவர்களின் தூதராக மன்னர் ஷா அவர்களிடம் வந்திருக்கிறேன்" என்று கூறினார்.  இதனைக் கேட்ட காஜா...

இன்று இரவு வானம் திறக்கிறது

Image
இன்று பராஅத் இரவு  =•=•=•=•=•=•=•=•=•=•=•=•=• இன்று இரவு வானம் திறக்கிறது  ~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷  உங்கள் பெயர் எந்த ஏட்டில் இருக்கின்றது? / பராஅத் இரவு பித்அதா? /  ரகசியங்கள் நிறைந்ததா பராஅத் இரவு? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் கட்டுரைதான் இது! உங்களை நெருங்கி வரும் ஒரு கோளை காண இரவில் விழித்திருக்கிறீர்கள்; கோளரங்கம் சென்று பார்க்கிறீர்கள்; உங்களை நோக்கி நெருங்கி வரும் இறைவனை இந்த இரவில் தரிசிக்க வேண்டாமா? ஷஃபான் எனும் சொல்லில் ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன; அவற்றில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஆரிஃபீன்களும் ஞானவான்களும் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஷஃபான் ஐந்து பாக்கியங்களை தன்னுள் சுமந்திருகிறது. ஷ ش-شرافة  எனும் எழுத்து இந்த இரவில் பல சிறப்புகள் இருப்பதையும்,  அய்ன் ع-علو எனும் எழுத்து இந்த இரவில்  அமல்கள் செய்யும் போது பல படித்தரங்களில் உயர்வுகள் கிடைக்கும் என்பதையும்,  ப  ب-بر எனும் எழுத்து உலகியல் மற்றும் மறுமை சார்ந்த பல நன்மைகள், கூலிகள் கிடைக்கும் என்பதையும்,  அலிஃப்  ا-الفة எனும் எ...

மத்ஹபுகள் உண்மையானது....

Image
மத்ஹபுகள் உண்மையானது.... <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 80 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> |• |• |• |• |• இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு நாள் இரவு, ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அலி (அபுல் ஹஸன்)! என்னிடமிருந்து பாரம்பரியமாக வந்த மத்ஹப்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; அவைதான் உண்மையானது" என்று கூறினார்கள். ( இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் சிந்தனையாளர்; மார்க்க விஷயங்களை நன்கு அறிந்தவர்; நான்கு மத்ஹப்களுக்குள் கட்டுப்பட்டு இல்லாமல் புதுமையாக சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் (முஜ்தஹித்); அந்த சந்தர்ப்பத்தில் தான் இந்த கனவு தோன்றியது.) நான் கண் விழித்தபின்  எனக்குள் பல சிந்தனைக...