ரமலானில் வாகன விபத்துகள் அதிகரிப்பது ஏன்?
ரமலானில் முஸ்லிம்கள் வாகன விபத்துகளில் அதிகமாக சிக்குவது ஏன்?
==================================
2013 - 2016 காலகட்டத்தில் ஈரான் நாட்டின் வடபகுதியில் கஸ்பியன் கடற்கரை ஓரத்தில் ரஷ்ட் எனும் மாநிலத்தில் குயலான் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நடக்கும் ஆக்சிடென்ட் விபத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
வெவ்வேறு வானிலை அமைப்புகள் உள்ள சந்தர்ப்பத்திலும், ரமலான் அல்லாத சந்தர்ப்பத்திலும் கூட ஆய்வு செய்யப்பட்டது.
போக்குவரத்து விபத்துகள் 0.040 என்ற அளவிலும், மற்றும் காயங்கள் 0.001 என்ற அளவிலும் கணிசமாக அதிகரித்தன. போக்குவரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்திருந்தது.
அதிலும் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்க நெருங்க விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
காரணம் நோன்பு திறப்பதற்காக விரைந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்கள் செயல்படுவதாலும், ட்ராபிக் - வாகன நெருக்கடிகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவதாலும், சர்க்கரை - நீரழிவு நோய் உள்ளவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மன நெருக்கடிக்குகளுக்கு ஆளாவதாலும் அவசரத்தில் ஏதோ ஒன்று செய்வதால் விபத்துகள் நேருகின்றது.
எனவே இந்த தகவலை முஸ்லிம்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்; அதனால் நமது சக தோழர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
எனவே ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் இடத்திற்கு நோன்பு திறப்பதற்கான அரை மணி நேரத்திற்கு முன்பே விரைந்து சென்று விடுங்கள்.
நோன்பு திறக்கும் நேரங்களில் உங்களுடைய வாகன ஓட்டிகளுக்கு வேலை பலுவை சுமத்தாதீர்கள்.
உங்களுடைய நண்பர்களுக்கு மேற்கண்டவற்றை எடுத்துச் சொல்லி கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள்.
ஆதாரம் மற்றும் இந்த கட்டுரையை விரிவாக அறிய : https://link.springer.com/article/10.1186/s12889-025-21980-5
Comments
Post a Comment