நோன்பு

ரமலான் ஒரு பொறுப்புதையில்


பேசும் நோன்பு :

عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: « الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ ، رواه مسند احمد

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு சொல்லும், "இறைவா! நான் இவ்வடியான் உணவு சாப்பிடுவதை விட்டும், பகலில் இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் . இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக! அல் குர்ஆன் சொல்லும். "நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன். 
எனவே, இவன் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்பாயாக!

 நூல் :  முஸ்னது அஹ்மத்

இந்த அண்டத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துச் செல்லும் அனைத்து ஜீவராசிகளும் பேசும் ஆற்றல் பெற்றது. ஒரே இடத்தில் உள்ள கல், மண், கண்ணாடி குடுவை, கள்ளிமரம் போன்ற எதுவும் பேசாது.

அதைப்போல் உலகத்தில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த அனைத்து நாட்டு ஜீவராசிகளும் ஒரே மொழியைத் தான் பேசும். உதாரணமாக தமிழ்நாட்டு கோழியும், அசாம் மாநில கோழியும், அமெரிக்கா கோழியும் ஒரே மொழியில் தான் பேசும். 

இவ்வாறே உலகில் உள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரே மொழியைத்தான் பேசும். 

அதேநேரம் ஒரு கோழியை சுற்றி உள்ள ஆடு, மாடு, குரங்கு, பறவைகள் என அவை ஒவ்வொன்றும் பேசுகிற மொழியவும் அந்தக் கோழி அறிந்திருக்கும்.

உலகத்தில் பேசுகிற ஆற்றல் பெற்ற எந்த உயிரினமும் மறுமை நாளில் பேசும் சக்தியைப் பெறாது. மனிதனின் நாவு இப்பொழுது பேசுகிறது. மனிதனின் கை, கால்கள் பேசுவதில்லை. ஆனால் மறுமை நாளில் மனிதனின் கை, கால்கள், நகம் உட்பட அனைத்தும் பேசும் ஆற்றல் பெற்றதாக இருக்கும்.  

மேலும் புத்தகம், கல், மண், பேனா போன்றவை இந்த உலகத்தில் பேசும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. ஆனால் மறுமை நாளில் இவற்றுக்கு பேசும் ஆற்றலை அல்லாஹ் வழங்குவான். 

அந்த வரிசையில் உள்ளதுதான் நோன்பும். குர்ஆனும். 
மறுமை நாளில் இவற்றுக்கு, அவற்றுக்கே உரிய உருவ அமைப்பை கொடுத்து அல்லாஹ் பேசும் ஆற்றலையும் கொடுப்பான். அப்பொழுதுதான் அவை மேற்கண்டவாறு பேசும்.

எனவே இவ்வுலகத்தில் பேசாத நோன்பு மறுமை நாளில் பேச இருப்பதால், உங்கள் வாய்கள் எதையும் உண்ணாமல் இருக்க பூட்டு போட்டு வையுங்கள். உங்களுக்காக நோன்பு வாய் திறந்துப் பேசும்.

மறுமை நாளில், பேசாதவைகள்
வாய் திறந்து பேசும்போது நாம் வாய் திறந்து பார்த்திருப்போம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்