Posts

Showing posts from October, 2025

மீலாது சமய நல்லிணக்க விழா

Image
மீலாது சமய நல்லிணக்க விழா  ============================== அபூ உஸைத் (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டிலிருந்து முஸ்லிமல்லாத சில கைதிகளை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள்.  நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அந்தக் கைதிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது ஒரு கைதிப் பெண்மணி அழுது கொண்டிருந்தாள்.  'நீ ஏன் அழுகிறாய்?' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'என் மகன் கூஃபா நகரில் பனூ அப்ஸ் குலத்தாரிடம் விற்கப்பட்டு விட்டான்' என்று கூறினாள்.  உடனே நபி (ஸல்) அவர்கள் அபூ உஸைத் (ரலி) அவர்களிடம் 'நீங்கள் பஹ்ரைன் சென்று பனூ அப்ஸ் கோத்திரத்தார் வசிக்கும் பகுதிக்குச்  சென்று அந்தச் சிறுவனை அழைத்து வாருங்கள்' என்று கூறினார்கள்.  உடனே அபூ உஸைத் (ரலி) அவர்கள் அங்கே சென்று அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள்.  நூல் : ஹாகிம் நபி (ஸல்) அவர்கள் சகோதர சமயத்தைச் சேர்ந்த ஒரு பெண் கைதி மீது இரக்கப்பட்டு, அவரின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவரின் பிள்ளையை அழைத்துவர  தூரமான நாட்டிற்கு தன் தோழரை அனுப்பி வைத்தார்கள்.  சகோதர சமயத்தைச் சேர்ந்த பெண் க...

1500 வது மீலாது சமய நல்லிணக்க விழா அழைப்பிதழ்

Image
பாரம்பரியமிக்க இஸ்லாமிய கிராமமான பெரம்பலூர் மாவட்டம் பெரிய வடகரையில்...... 1500 வது மீலாது சமய  நல்லிணக்க விழா அழைப்பிதழ் ================================ நாள்: ======= 2.11. 2025 ஞாயிற்றுக் கிழமை நேரம்: ======== காலை 9:00  முதல் 1:15 மணி வரை •°•°•°•°•°•° காலை 9: 00 மணிக்கு பிறகு யாஸீன், தபாரக் மற்றும் மவ்லித் ஆகியன ஓதி நபி (ஸல்) அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மற்றும் நமது ஊரில் பிறந்து வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் அனைவருக்காகவும், பெரிய வடகரையோடு தொடர்புடைய அனைவருக்காகவும் ஃபாத்திஹா ஓதி துஆ செய்யப்படும். அதில் உள்ளூர், வெளியூர் ஜமாஅத்தினர் அனைவரும் இந்த துஆ மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். அன்று அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மூத்த ஆலிம் பெருந்தகை `மர்ஹூம் அப்துல்லாஹ் ஹள்ரத் கிப்லா, முஹம்மது காசிம் ஹள்ரத் கிப்லா, மர்ஹூமான அனைத்து ஆலிம்களுக்கும்  யாஸீன் ஓதி ஈஸால் ஸவாஃப் செய்யப்படும்; அதிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். ~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ முன்னிலை: =============== மவ்லவீ, A. அப்துல் பசீர் மன்பயீ தாமத் பரகாத...

மன்பயீ ஆலிம்களை அழைக்கிறது தாய் கல்லூரி

Image
மன்பயீ ஆலிம்களை  அழைக்கிறது தாய் கல்லூரி =============================== 165 வருடங்களாக கல்வி எனும் ஒளியின் பிறவாகமாக இயங்கி வருகிறது லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படித்து வெளிவந்த ஆலிம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் மக்கள் வாழும் பல்வேறு நாடுகளின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் சிறப்பான சேவையை செய்து வருகிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒரு முறை மீண்டும் தாய் கல்லூரிக்கு அவர்களை அழைத்து, இறைப்பணியை தொய்வின்றி செய்ய நஸியத் - ஆன்மீக போதனைகள் வழங்குவது வழக்கம்.  அவ்வாறான சங்கம நிகழ்வு 23/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று லால்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலிம்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும்.  எங்கள் தலைமை ஆசிரியர் அவர்கள், "மன்பயீ ஆலிம்கள் விசேஷமானவர்கள்; அவர்கள் பணி செய்கிற மஹல்லாவை அல்லது கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.  அதாவது அந்த ஊரில் உள்ள  சிறுவர்களுக்கு முறையான, சரியான மார்க்கக் கல்வியை வழங்குவதோடு அந்த ஊரில் உள்ள முதியோர்களுக்கும் பெண்களுக்கும் முறையான மார்க்கக் கல்வியை வழங்கி சி...

தொடர் 30. ஞானம் பெறும் வழிகள்

Image
ஞானம் பெறும் வழிகள்  ====================== நேற்றைய தொடர்ச்சி....30 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  =============================== இறைஞானம் - நல்ல விஷயங்களை மன உதிப்பின் (இல்ஹாம்) மூலம்  இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவோர் கீழ்காணும் பத்து விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 1.  நாவடக்கம்  2.  கோல், புறம் பேசாமல் இருத்தல் 3.  தம்மை விட எவரையும் தாழ்ந்தவராக எண்ணாமல் இருத்தல்  4.  பொய் பேசாதிருத்தல்  5.  ஹராமான பார்வை பார்க்காமல் இருத்தல்  6.  தன் செல்வங்களை நல்வழியில் செலவழித்தல்  7.  அல்லாஹ் தனக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல்  8.  ஐந்து நேரத் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்  9.  பெருமை சுயநலம் போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றாமல் பாதுகாத்துக் கொள்ளுதல்  10.  நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளையும், சுன்னத் ஜமாஅத் கொள்கைகளையும் முறையாகப் பேணுதல். மேற்கண்ட பத்து நற்குணங...

உண்மையான வலி / சூஃபி / இறைநேசர் யார்?

Image
உண்மையான வலி /  சூஃபி / இறைநேசர் யார்? مَن هو الوليُّ الحق؟ مَن هو الصوفيُّ الصادق؟ مَن هو المحبُّ الحقيقيُّ لله؟ ================================ நேற்றைய தொடர்ச்சி.....29 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  =================================== உண்மையை மட்டுமே பேசும் குணம் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் இயற்கை குணமாகும். உடைமைகளுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்ட போதே பொய்யை பேசாதவர்கள், எதிர்காலத்தில் எப்படி பேசி இருக்க முடியும்?  ஒருவர், "மனிதத் தன்மையின் அடிப்படை எது?" என வினவியதற்கு, "உண்மை பேசுவதே அடிப்படை " எனக் கூறினார்கள். வலி - இறைநேசர் யார் என்று பொதுமக்களிடம் கேட்டால் அவர்கள், "அற்புதங்களை செய்கிறவர், உலக இன்பங்களை விட்டும் ஒதுங்கி வாழ்பவர், ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர், பிறரின் மனதில் இருப்பதை சொல்பவர்" என்றெல்லாம் கூறுவார்கள். ஷரீஅத் எனும் இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, குர்ஆன் மற்றும் ஹதீஸ் வலியுறுத்தும் வாழ்வியலை ஏற்று நடப்பவர்களே உண்மையான வலி -  சூஃபி ஆவார் என்பதே இஸ்லாத்தின் அளவுகோல் ஆகும்...

தொடர் 28. பணிவும் பாசமும் மலரும் போது...

Image
பணிவும் பாசமும் மலரும் போது... عند ما تزهر التواضع والمحبة ================================== நேற்றைய தொடர்ச்சி....28. மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== •°•°•°•°•°•° இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு தெருவின் வழியாக நடந்து செல்லும் போது அங்கு சிலர் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். சிறுவர்கள் அருகே சென்று அவர்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்; அந்த சிறுவர் சிறுமியரின் தலைகளில் கைகளை வைத்து பாசமாக தடவிக் கொண்டிருந்தார்கள்  அப்பொழுது சிறுவர்களில் ஒருவர் "எங்களுக்குக் கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுங்கள்" எனக் கேட்டனர்.  இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் அருகில் இருந்த கடைக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று அவர்கள் கேட்ட அனைத்து வகையான தின்பண்டங்களையும் வாங்கி வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.  இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பொதுவாகவே குழந்தைகள் மீது பேரன்பு கொண்டு இருந்தார்கள். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மனைவியரில் எவருக்கேனும் உடல்நிலை ச...

அருள் மழையின் அறிவியல் ரகசியங்கள்

Image
அருள் மழையின்  அறிவியல் ரகசியங்கள் ============================= மழை /  தண்ணீர் ماء எனும் சொல் திருக்குர்ஆனில் 63 இடங்களில் இடம்பெற்றுள்ளது. 63 என்பது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தின் அளவை குறிக்கும்.  தண்ணீர் இல்லாமல் எப்படி மனிதன் பூமியில் வாழ இயலாதோ அதுபோலவே நபி ஸல் அவர்களின் போதனைகளை ஏற்காமல் ஒரு மனிதன் பூமியில் மனிதனாக வாழ இயலாது. غيث எனும் சொல்லுக்கு மழை என்று பொருள்.  مطر எனும் சொல்லுக்கும் மழை என்றுதான் பொருள்.  ஆனால் مطر எனும் சொல் தண்டனைகளை கொண்டு வரும் மழை என்றே திருக்குர்ஆன் பொருள் சொல்கிறது. பெரும்பாலும் இந்த வார்த்தை எந்தெந்த சமுதாய மக்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டனவோ அங்கெல்லாம் இந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான். நூஹ் (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் இந்த வார்த்தையவே பயன்படுத்தி இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. கடல், நதி, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் சூரிய வெப்பத்தின் காரணமாக ஆவியாக மாறி மேலே செல்கிறது.  சின்னச் சின்ன நீர் துளிகள் மேலே செல்லும் பொழுது பல சின்னத் துளிகள் ஒன்றாக இணைந்து மேலே செல்கிறது. ...

தொடர் 27. தர்க்க இருளில் இருந்து தஸவ்வுப் ஒளிக்கு.

Image
தர்க்க இருளில் இருந்து  தஸவ்வுப் ஒளிக்கு ======================== இமாம் ஜீலானியின் மாணவர் ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தீ ரஹ் அவர்கள். ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ நேற்றைய தொடர்ச்சி...27 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== •°•°•°•°•°•° ஷிஹாபுத்தீன்  சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்கள் இளமையாக இருந்த சந்தர்ப்பத்தில் தர்க்கக் கலையில் பெரும் நிபுணராக இருந்தார்கள்.  இவருடைய சிரியா தந்தை நஜ்முதீன் சுஹ்ரவர்த்தி (ரஹ்) அவர்களுக்கு தன் தம்பி மகனுடைய போக்கு அறவே பிடிக்கவில்லை. எவ்வளவோ சொல்லியும் அவர் தர்க்கக் கலையில் இருந்து விலகுவதாக இல்லை. இந்நிலையில் ஒரு நாள் நஜ்முதீன் சுஹ்ரவர்த்தி (ரஹ்) அவர்கள் தன் தம்பி மகன் ஷிஹாபுத்தீன் சுஹ்ரவர்த்தீ (ரஹ்) அவர்களை அழைத்துக் கொண்டு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் வருகைக்காக காத்திருந்தபோது தன் தம்பி மகனிடம், "மகனே! நாம் நபி (ஸல்) அவர்களின் சந்ததிகளில் ஒருவரிடம் வந்திருக்கின்றோம்.  அவர் பரிசுத்தமான உள்ளத்திற்கு...

தர்மத்தில் உள்ள ஆன்மீகம்

Image
தர்மத்தில் உள்ள ஆன்மீகம்  =========================== நேற்றைய தொடர்ச்சி....26 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== •°•°•°•°•° இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தொழுகை சென்றிருந்தபோது ஏற்கனவே அறிமுகமாகி இருந்த பெரும் வியாபாரி ஒருவர், "என்னிடம் ஜகாத் அல்லாத ஸதக்கா நிதி மிகப்பெரும் தொகை  உள்ளது;  அதை பெறுவதற்கு தகுதியானவர்கள் யாரையும் நான் காணவில்லை; எனவே இதை பெறுவதற்கு தகுதியானவர்களை அடையாளப்படுத்தினால் வழங்கிடுவேன்" என்று கூறினார். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அந்தத் தொகையை பெறுவதற்கு தகுதியானவர் தகுதி இல்லாதவர் ஆகிய இரு சாராருக்கும்  கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு பன்மடங்காக திரும்பத் தருவான்;  தர்மம் வழங்குகிற நீங்கள் யாருக்கு வழங்குவது என யோசிக்க வேண்டாம்; உங்களிடமிருந்து பெறுகிறவர்தான் அதை யோசிக்க வேண்டும்; எனவே நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள்" எனக் கூறினார்கள். அவ்வாறே அவர் வழங்கினார்.  செல்வந்தர்கள் எவரேனும் தர்மத்தை பெற்றால் நாம் கையை நீட்டி வ...

பஞ்சத்தில் மலர்ந்த பரிவு

Image
பஞ்சத்தில் மலர்ந்த பரிவு ========================= நேற்றைய தொடர்ச்சி....25 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பஞ்சகாலத்தில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இந்த பஞ்சகாலத்தில் தொடர்ந்து இருபது நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்தேன்; தங்கியிருக்கும் இடத்தில் உண்ண எதுவும் கிடைக்காது என உறுதியாக அறிந்து கொண்ட பிறகு காடுகளுக்குச் சென்று கீரைகள் பழங்கள் ஏதேனும் புசிக்கலாம் என ஆசைப்பட்டு பக்தாது அருகே இருந்த  காடுகளுக்குள் நுழைந்தேன்.  அங்கே எழுபதுக்கும் மேற்பட்ட ஆலிம்கள் 'சாப்பிட ஏதாகிலும் கிடைக்குமா?' என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.  அந்தக் காட்சியை கண்டதும் அவர்களுக்கு போட்டியாக நாம் இங்கு இருக்க வேண்டாம் என எண்ணி திரும்பி வந்து கொண்டிருந்தேன்.  அப்பொழுது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன்; அவர், "உனது தாயார் இந்தத் தங்கக் கட்டியை உன்னிடம் கொடுக்கச் சொன்னார்கள்" என சொல்லி ஒரு தங்கக் கட்டியை கொடுத்தார்.  நான் அந்த தங்கக் க...

தொடர் 24. பிறர் பசியை தன் பசியால் தனித்தவர்

Image
பிறர் பசியை  தன் பசியால் தனித்தவர் : ========================= நேற்றைய தொடர்ச்சி....24 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ===================================== •°•°•°•°•° இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பக்தாத் நகரத்தில் கல்வி கற்று வந்தபோது அந்த நகரமும், நாடும் கடும் பஞ்சத்தில் மூழ்கி இருந்தது. அப்போது அவர்களுக்கு வயது இருபது. அச்சமயத்தில் மக்கள் பசி பட்டினியால் வாடினார்கள்; ஏழைகள் பரிதவித்தார்கள்;  தண்ணீர் இல்லாத திஜ்லா நதிக்கரையில் இலை தழைகள் ஏதேனும் கிடந்தால் பறித்து உண்ணலாம் என எண்ணி பலர் சுற்றினார்கள்.  கடைத் தெருக்களிலும் காய்கறி மார்க்கெட்களிலும் அழுகிப்போனவற்றை சாப்பிடுவதற்கு ஒரு கூட்டம் அலைமோதியது. அந்நேரத்தில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வசம் ஏதேனும் பணம் இருந்தால் அதை ஏழை எளியோருக்கு வழங்கி மகிழ்வார்கள்.  அவர்களின் தாயார் அவ்வப்பொழுது அனுப்பி வைக்கும் பணத்தில் சிறிதளவை தமக்காக வைத்துக் கொண்டு பெரும்பாலானவற்றை ஏழைகளுக்கு வழங்கி விடுவார்கள்.  இந்தப் பஞ்சத்தின் போது பல நாட்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சாப்...

தொடர் 23. தானத்தின் தெய்வீக முகம்

Image
தானத்தின் தெய்வீக முகம் ============================ நேற்றைய தொடர்ச்சி.....23 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தமது வாகனத்தில் தமது பணியாளருடன் சென்று கொண்டிருந்தார்கள் . வழியில் இரவு வந்ததும் 'அஜீலா' எனும் கிராமத்தில் தங்குவது என முடிவு  செய்தார்கள்; பின்னர் தமது பணியாளரிடம் "இந்த கிராமத்தில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் ஒருவருடைய வீட்டை தேர்ந்தெடுத்து வந்து சொல்லுங்கள் அங்கே நாம் இரவை கழிப்போம்" என்று சொல்லி அனுப்பினார்கள். அவர் கிராமம் முழுவதும் சுற்றி பார்த்தார்; சிலரிடம் விசாரித்த வகையில் ஒரு வீட்டை காட்டினார்கள்;  அந்த வீட்டை அடையாளம் வைத்துக்கொண்டு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் சென்று விபரத்தைச் சொன்னார்கள்.  இருவரும் அந்த வீட்டிற்கு வந்ததும் இரவு தங்குவதற்கு அனுமதி கேட்டார்கள்; அவர்கள் அனுமதித்து உள்ளே அழைத்தார்கள்.  அந்த வீட்டில் வயதான தம்பதியரும் இளம் பெண்ணும் இருந்தனர்; வீட்டின் கூரைகள் இற்று விழும் நிலையில் இருந...

தொடர் 22. உதவிதான் உண்மையான வழிபாடு

Image
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== நேற்றைய தொடர்ச்சி.....22 உதவிதான் உண்மையான வழிபாடு ================================== •°•°•°•°•° இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு நதியை கடந்து வந்து தமது ஊருக்கு செல்ல முயற்சித்த போது அங்கே ஆடைகள் கிழிந்த நிலையில் ஒருவர் நின்றிருந்ததை கவனித்தார்கள்; அவர் முகம் வாடி இருந்தது.  அவர் அருகே சென்று "உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் இந்த நிலையில் இருக்கிறீர்?" என்று கேட்டார்கள்.  அதற்கு அவர், எனது ஊர் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கிறது; நான் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்;  படகோட்டிக்கு கொடுப்பதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை; அதனால் நான் இங்கேயே இருக்கின்றேன்;  அந்தப் படகோட்டியிடம் எவ்வளவோ கெஞ்சி கேட்டுப் பார்த்தும் என் மீது அவர் இரக்கம் காட்ட வில்லை; அதனால் பல நாட்களாக உணவின்றி இதே பகுதியில் இருக்கின்றேன்" என்று கூறினார்.  இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடமும் அந்த நேரம் பணம் இல்லை; என்ன செய்வது என்று யோசித்து விட்டு இறைவனிடம் இரு கரம் ஏந்தி துஆ செய்தார்...

தொடர் 21. குளிர் காலத்தில் வேர்வை

Image
குளிர் காலத்தில் வேர்வை: =========================== நேற்றைய தொடர்ச்சி....21 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== அபூ முஹம்மது அஃபாஸ் என்பவர் கூறுகிறார். நான் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் குளிர்காலத்தின் நடுவில் ஒரு முறை சென்றிருந்தேன். அச்சமயம் கடும் குளிர் காலமாக இருந்தது. அந்தக் குளிரை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை.  இந்நிலையில் அண்ணார் ஒரு முழுகை கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள். இதனால் அவர்களின் தலையில் உடல் சூட்டின் காரணமாக  ஆவி பறந்தது. வேர்வை அவர்களது உடலிருந்து வேர்ந்துக் கொண்டே இருந்தது.  அந்தக் கடும் குளிர் காலத்தில் அவர்களை நெருங்கி அமர்ந்திருப்பவர்கள் தம் கைகளில் விசிரியை வைத்துக் கொண்டு தமக்குத் தாமே விசிரிக் கொள்ளும் அளவிற்கு வெப்பக்காற்று அண்ணாரின் உடலிலிருந்து வெளிவரும்.  இது அல்லாஹ் அவர்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகம் இல்லை. நூல் அஃலாமுல் முஸ்லிமீன்  உருவ அமைப்பு  ================ இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மெலிந்த உடல், உயரமான த...

தொடர் : 20. என் உள்ளத்தில் இல்லை

Image
என் உள்ளத்தில் இல்லை: =========================== நேற்றைய தொடர்ச்சி.....20 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== •°•°•°•° இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சிறப்புதன்மைகளை செவியேற்றிருந்த ஓர் இறைநேசர் அவர்களைக் காண வெகு தொலைவிலிருந்து நடந்து பக்தாதிற்கு வந்தார்.  வரும் வழியில் பல ஏக்கர் நிலங்களில் பேரீத்தம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பேரீத்த மரங்கள் மிகச் செழிப்போடு இருந்தது மட்டுமில்லாமல் அதிகமான பழ குலைகளை தாங்கியும் நின்றது.  இவ்வளவு செழிப்பான தோட்டத்தை இதற்கு முன் வேறு எங்கும் பார்த்திராத அவ்விறைநேசர் அங்கு சென்ற ஒருவரிடம் "இது யாருடைய தோப்பு?" எனக் கேட்டார்.  அவர் இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடையது" எனக் கூறினார். இவ்விறை நேசருக்கு திடுக்கம் ஏற்பட்டது. இப்படி நிலத்தின் மீதும் செல்வத்தின் மீதும் ஆசை வைத்துள்ள ஒருவர் எப்படி இறை நேசராக இருப்பார்? என எண்ணினார். ஆனாலும் அவர் தொடர்ந்து பக்தாது நகருக்குள் சென்றார். அங்கிருந்த பெரிய மளிகைக் கடை ஒன்றில் அதிகமான கூட்டம் கா...

தமிழகத்தின் தலைமை காஜீ....

Image
தமிழகத்தின் தலைமை காஜீ.... ~~~~~~~~~~~~~.    ~~~~~~~~~~~~~ மிகப்பெரும் அறிவு ஞானத்திலும் ,  யாருக்கும் பயப்படாமல், அடிபணியாமல் மார்க்க தீர்ப்பை மிக தைரியமாக தனக்கே உரித்த பாணியில் உரக்கச் சொல்வதிலும் , வாழும் காலத்தில் அரசின் எந்த சலுகையும் பெறாமல் எளிமையாய் வாழ்ந்து மறைந்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் ஸலாஹுதீன் முஹம்மது அய்யூபி (ரஹ்) அவர்களுக்குப் பின் அந்த காஜி யின் இடத்தை யார் நிரப்புவது.? என்கிற மிகப்பெரும் கேள்வி தமிழக ஆலிம் பெருமக்கள் இடத்திலும் தமிழ் சமூகத்திடத்திலும் இருந்து கொண்டிருந்தது. அந்த இடத்தை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் ஆதரவுடன் பெரும் போட்டியும் நிலவியது. தமிழக முஸ்லிம் சமூகம் தங்களுக்கு பொருத்தமான தலைமை காஜியை தேடிக் கொண்டிருந்தது. பதவிகள் சிலரை அலங்கரிக்கும். சிலரைக் கொண்டு பதவி தன்னை அலங்கரித்துக் கொள்ளும். அப்படி தலைமை காஜி என்கிற பதவிக்கு தகுதிமிக்க ஒருவராய் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் எங்களது கண்ணியத்திற்குரிய  ஆசிரியத்தந்தை உஸ்மான் முஹ்யித்தீன் ஃபாஜில் பாகவி ஹழ்ரத் அவர்கள். "தகுதிமி...

தொடர் 19. கல்விக் கூடத்தில் ஒரு காட்சி:

Image
கல்விக் கூடத்தில் ஒரு காட்சி: ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ நேற்றைய தொடர்ச்சி....19 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்  ==================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பக்தாதில் "பாபுல் அஸ்ஜ்" எனும் கலாச்சாலையில் நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கல்வி கற்பிதார்கள். இதன் பயனாக ஆண்டுக்கு சுமார் மூன்றாயிரம் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டுமுரீதும் பெற்று வெளியேறுவார்கள்.  அப்படி பார்க்கப்போனால் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்னாரிடம் கல்வி பயின்றும் முரீதும் பெற்றும் இருக்கிறார்கள் என தெரிய வருகிறது.  இம்மாணவர்கள் உலகம் முழுதும் பறவிச் சென்று மார்க்கத்தை பரப்பினார்கள். அண்ணாருக்கு அளிக்கப்பட்ட அடைமொழி பெயரான முஹ்யித்தீன் - மார்க்கத்தை உயிர்பித்தல் எனும் சொல் நூறு சதவிகிதம் உண்மையானது. நூல் : கலாயிதுல் ஜவாஹிர்  போதிப்பதில் பொறுமை  ======================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை தேடிவரும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக  அவர்கள் எதிர்பார்த்த துறைச்சார்ந்த கல்வியை போதித்து தருவார்...

தென்னாட்டு ஆலிம்களின் தந்தை வேலூர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள்

Image
தென்னாட்டு ஆலிம்களின் தந்தை வேலூர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள்  ==================================== சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அலுவலகத்தில் இருந்த மவ்லவீ ஜியாவுத்தீன் பாகவி ஹள்ரத் அவர்களும் நானும் 29/12/2005 அன்று ஷப்பீர் அலீ ஹள்ரத்  (ரஹ்) அவர்களை சந்திக்க கானத்தூர் சென்று இருந்தோம்.  அன்று அவர்கள் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் குறித்து சொன்ன செய்திகளில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு நீண்ட பதிவுதான்! ஆனால் பயன்மிக்க வரலாறு! •°•°•°•° அபூ பக்ர் (ரலி) அவர்களின்  வழித்தோன்றதில் தோன்றிய மவ்லானா ஷாஹ் மதார் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மதுரையில் பிறந்து வாழ்ந்து அங்கேயே அடக்கம் ஆனார்கள்.  இவர்களின் மகன் மவ்லானா அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூரில் குடியேறினார்கள். இவர்களுக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உண்டு. ஒருவர் மவ்லானா குலாம் முஹையதீன் (ரஹ்) அவர்கள்; இவரின் மகன் வயிற்று பிள்ளை தான் வேலூர் அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள். மற்றொருவர் மவ்லானா நன்னு மீர...