Posts

Showing posts from January, 2026

நீ எகிப்தை ஆளுவாய்! தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய்

Image
நீ எகிப்தை ஆளுவாய்!  தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 13 தொடர்: 79 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> •|• •|• •|• •|• •|• அமீர் அல் பர்தஜ்ஜானி அவர்கள் கூறுவதாவது; அல் முழஃப்பர் ஸைஃபுத்தீன் குத்ஸ் அவர்களிடம் எனது சிறு வயதில் நான் பணியாளனாக இருந்தேன். அப்போது அவருடைய தலையில் அதிகமான பேன்கள் இருந்தது; அவருடைய தலையை சீவி ஒவ்வொரு முறையும் ஒரு பேனை கொல்லும் போது ஒரு நாணயத்தையோ அல்லது அதைவிட குறைவாகவோ கேட்பேன்; எனக்கு அவர் வழங்கிக் கொண்டே இருப்பார். இவ்வாறு ஒரு நாள் அவருடைய தலையை நான் சீவிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு ஐம்பது வீரர்களின் (ஒரு பட்டாலியன் ) தளபதி பதவி வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். உடனே அவர், " உன் என்னபடி அல்லாஹ் நனவாக்கட்டும்! நிச்சயமாக உனக்கு ஐம்பது வீரர...

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஆசி வழங்கிய அண்ணல் நபி (ஸல்)

Image
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஆசி வழங்கிய அண்ணல் நபி (ஸல்) : ================================= <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> ================================== மாதம்: 12 தொடர்: 78 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> இமாம் ஜிலானி (ரஹ்) அவர்களின் பேச்சு அனைவரையும் கவர்வதற்குக் காரணம் நபிகள் நாயகம் அவர்கள்தாம்! ஆமாம்! இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் காடுகளில் கடும் தவம் செய்து வந்த வேளையில் கிலிர் (அலை) அவர்களை கண்ட பிறகு ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.  அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஊருக்குள் சென்று அனைத்து  மக்களையும் நல்வழிப்படுத்துங்கள்; இஸ்லாத்தை மக்களிடையே பரப்புங்கள்; மக்களுக்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்; மக்களுக்கு அறிவுரை சொல்வதில் இருந்து பின்வாங்க வேண்டாம்" என்று கூறினார்கள். இமாம்...

இந்த இரவில் விழித்திருப்பதா? விழித்துணர்வதா?

Image
https://youtu.be/k_b6718FLNQ?si=JhQ3zhgY1IbXk-V_ தலைப்பு :  இந்த இரவில் விழித்திருப்பதா விழித்துணர்வதா? இந்த இரவில் நாம் செய்கிற அமல்களாலும் பிரார்த்தனைகளாலும் புத்தகத்தில் இருந்து மட்டுமல்ல, உள்ளத்தில் இருந்தே  பாவங்கள் விலக வேண்டும். ஷஃபான் மாதத்தில் உள்ளதை சரி செய்யாதவன் ரமலானில் மிகவும் சிரமப்படுவான். உள்ளம் கெட்டவரின் உடல், நின்று தொழுவதில் எந்த பயனும் இல்லை . நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள்; நமது அடிமைத்தனத்தை புதுப்பிக்கும் இரவுதான் பராஅத்!என இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

மஹ்மூதே! இந்த இருவரிடமிருந்து என்னை காப்பாற்று!

Image
மஹ்மூதே! இந்த இருவரிடமிருந்து என்னை காப்பாற்று!  ==================================<=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 12 தொடர்: 77 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> நபியே நிச்சயமாக அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பான் 5:67 எனும் இறைவனளித்த வாக்குறுதி இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆம் நபிகளார் வாழும்போது பலர் கொன்றொழித்திட நினைத்தனர். அவர்கள் அனைவரும் தோல்வியை மட்டுமே சந்தித்தனர். இப்பொழுதும் சிலர் வேறு விதமாக நினைத்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. ஹிஜ்ரி 557 (கி.பி. 1162) ரோம் நகரைச் சார்ந்த சிலர் இரு கிருஸ்துவர்களை மதீனாவிற்கு அனுப்பி அங்குள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடலை எவருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொண்டு ஐரோப்பாவிற்கு வந்துவிட வேண்டும் என ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தனர். இருவரும் மொரோக்கோ முஸ்லீம்...

நபிகள் நாயகம் கிப்லா வைத்த பள்ளிவாசல் இன்றும்

Image
நபிகள் நாயகம்  கிப்லா வைத்த பள்ளிவாசல் இன்றும் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 77 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் தூலூன் ( முழு நிலவு)  (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 220 -  270 கி.பி. 835 - 884 காலகட்டத்தில் எகிப்தின் ஆளுநராக பதவி வகித்தார். தூலூனியா எனும் பெயரில் பாரம்பரியமான ஓர் அரசை நிறுவினார்; இவருடைய ஆட்சியின் தலைநகரமாக அல் கத்தாயிவு நகரம் இருந்தது. இந்த நகரம் எகிப்து நாட்டின் தென் கெய்ரோவில் ஸய்யிதா ஸைனப் மாவட்டத்தில் இருக்கின்றது. அரசியல் காரணங்களால் பின்னால் ஆட்சி பொறுப்புக்கு வந்த  அப்பாஸியா ஆட்சியாளர்கள் அந்த நகரை ஹிஜ்ரி 292 க்கு பிறகு திட்டமிட்டு அளித்தார்கள். ஆனாலும் இன்று இந்த நகரம் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. இவர் தனது ஆட்சி காலத்தின் ஹிஜ்ரி 266களில் ஒரு பள்ளிவாசலை கட்டினார்; அந்த பள்ள...

ஸலவாத்தும் நல்ல சத்தியமும்...

Image
ஸலவாத்தும்  நல்ல சத்தியமும்... °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஷைகு அல் ஆரிப் அஸ்ஸய்யது அஹமது ஸாவி (ரஹ்) அவர்கள் தான் எழுதிய ஸலவாத் சம்பந்தமான ஒரு நூலில் கூறுகிறார்கள். தலாயிலுல் கைராத் எனும் நூல் ஆசிரியர் ஷைகு முஹம்மது பின் சுலைமான் அல் ஜஸூலீ (ரஹ்) அவர்கள் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது தொழுகை நேரம் வந்துவிட்டது. உளூ செய்வதற்கு தண்ணீரைத் தேடிச் சென்றார்கள். அப்பொழுது ஒரு இடத்தில் ஒரு கிணறு தென்பட்டது. ஆனால் அதிலிருந்து தண்ணீரை வெளியில் எடுப்பதற்கான எந்த உபகரணமும் இல்லை.  அச்சமயம் அருகில் இருந்த மேட்டில் நின்று ஒரு சிறுமி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஷைகு அவர்களைப் பார்த்து அந்தச் சிறுமி, "நீங்கள் யார்?" என்று கேட்டார்.  ஷைகு அவர்கள்  தன்னை பற்றி சொன்னார்கள். அப்பொழுது அந்த  சிறுமி, "உங்களைக் குறித்து ஊரில் இருப்பவர்கள் புகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள்; ஆனால் இந்த கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியில் எடுப்பதற்கு குழம்பிப் போய் நிற்கிறீர்களே?" என்று சொன்னார்.  அச்சிறுமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கிண...

நீ இங்குதான் இருக்கிறாயா?

Image
நீ இங்குதான் இருக்கிறாயா? ============================== <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 76 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> முஹம்மது பின் நஸ்ரு அல் மரூஸீ (ரஹ்), முஹம்மது பின் ஜரீர் அத்தப்ரீ (ரஹ்), முஹம்மது பின் அல் முக்திர் (ரஹ்) ஆகியோர் எகிப்தின் 'தியார்' எனும் நகரத்தில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு வீட்டில் அமர்ந்து ஹதீஸ்களை தொகுத்து எழுதி கொண்டு இருந்தார்கள்; அந்த நாளில் அவர்கள் சாப்பிடுவதற்கு என்று எதுவும் இல்லை. இவர்கள் தமக்குள், "ஒருவரை வெளியே அனுப்பலாம்; அவர் வெளியே சென்று ஏதேனும் ஒரு வகையில் சாப்பாட்டை கொண்டு வரட்டும்" என முடிவு செய்தனர்.  யார் வெளியே செல்வது என்பதற்காக சீட்டு குலுக்கி போட்டார்கள்; அப்பொழுது முஹம்மது பின் நஸ்ரு (ரஹ்) அவர்களுடைய பெயர் வந்தது. அது ஒரு கைலூலா உறக்க நேரம்; அவர் எழுந்து நின்று தொழுது அல்லாஹ்வ...

இந்திய குடியரசு தின வரலாறு

Image
இந்திய குடியரசு தின வரலாறு  ============================== அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினம். (Republic Day) ==================================== அனைவருக்கும்  77 வது குடியரசு தின  நல்வாழ்த்துக்கள்.  இந்திய நாடு சுதந்திரத்தை நோக்கி நெருங்கி கொண்டிருந்தபோது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை 9/12/1946  திங்கள் கிழமை அன்றே அன்றைய தலைவர்கள் தொடங்கிவிட்டார்கள். அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியாவிற்குத் தேவையான அரசியல் சட்ட வரையறைகளை நிர்ணயிக்கும் சபை உருவாக்கப்பட்டுவிட்டது. 15/8/1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசியலமைப்பு சபை  (Constituent Assembly of India) 299 பிரதிநிதிகளை கொண்டு 29/ 8 / 1947 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்தான் இந்த அமைப்பு சபையின் தலைவராக இருந்தார்கள்.  அதேநேரம் வரைவு குழு தலைவராக டாக்டர் B.R.  அம்பேத்கர் அவ...

குடியரசு தினவிழா நினைவுகள்

Image
குடியரசு  தினவிழா நினைவுகள்  _________________________ எங்கள் ஊரில் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் அஃலா ஹள்ரத் அவர்களிடம் பயின்று இரண்டாவது பேஜ்ஜில் ஓதி முடித்து, பின்நாளில் பட்டம் பெற்ற மர்ஹூம் அப்துல்லாஹ் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். இவர்கள் இந்திய விடுதலைக்காக பங்காற்றியவர்களில் ஒருவர். அஃலா ஹள்ரத் அவர்களின் மகனார் ஜியாவுதீன் அஹமது பகாதூர் அவர்கள் 1919 களில் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் தீவிர பங்கெடுத்திருந்தார்கள்.  அச்சமயம் திருச்சி மாவட்ட கிலாஃபத் இயக்க தலைவர்களான வி.எஸ். முஹம்மது இப்ராஹிம், சையத் முர்துஜா ஹஜரத் போன்றவர்களோடு மவ்லவி, அப்துல்லாஹ் பாகவி அவர்கள் நெருங்கிய தொடர்பிலும், கிலாஃபத் இயக்க பணிகளில் தீவிரமாகவும் செயல்பட்டு வந்தார்கள்.  (1) ஓர் அடி குறிப்பு காந்தியடிகளார் அவர்கள் அரை நிர்வாணதோடு திருச்சிக்கு வந்த முதல் மற்றும் இரண்டாம் பயணங்களில் உடன் இருந்தார்கள்.  அப்துல்லாஹ் பாகவி (ரஹ்) அவர்களின் தீவிர செயல்பாடுகளால் எங்களூரிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கிலாஃபத் இயக்கத்தோடு ...

குனூத் நாஸிலாவை ஓதி வாருங்கள்

Image
குனூத் நாஸிலாவை  ஓதி வாருங்கள்  <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 75 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> கலீஃபா அல் முஸ்தன்ஜித் பின் அல் முக்தஃபி லி அம்ரில்லாஹ் (கி.பி.1136 - 1160) அவர்களிடமிருந்து வஜீர் இப்னு ஹுபைரா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  பதினைந்து வருடங்களுக்கு முன்பு நபி (ஸல்) அவர்களை நான் (அல் முஸ்தன்ஜித்) கனவில் கண்டேன். அப்பொழுது நபிகளார், "உமது தந்தை கலீஃபா பொறுப்பில் பதினைந்து வருடங்கள் இருப்பார்" என்று கூறினார்கள்; அவ்வாறே எனது தந்தை ஆட்சி பொறுப்பில் இருந்தார். அல் முஸ்தன்ஜித் அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்; என் தந்தை அல் முக்தஃபி அவர்கள் மறைவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு  நபி (ஸல்) அவர்களை மீண்டும் கனவில் கண்டேன்.  அப்பொழுது என்னை ஒரு பெரிய வாசலின் வழியாக அழைத்துச் சென்றார்கள்; பிறகு ஒரு மலையின் உ...

நமது அமைதி நமக்கு சமாதி !!

Image
நமது அமைதி  நமக்கு சமாதி  ~~~~~~~~~~~ 50 தொழிலாளர்களுக்கு மேலாக தொழிலாளர்களை வைத்துள்ள இஸ்லாமிய நிறுவனத்தினரும்,  அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் மாநில, மாவட்ட, வட்ட, நிர்வாக அலுவலகங்களிலும், சிறிய, பெரிய அனைத்து பள்ளிவாசல்களிலும், ஆண்கள் மதரஸா , பெண்கள் மதரஸா , இஸ்லாமியர்கள் நடத்தும் தங்கும் விடுதிகள், சூழ்நிலைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் வசிக்கிற தெருக்களிலும் குடியரசுதின கொடியேற்று விழா  நடத்த வேண்டும். நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தையும்,  நமது முன்னோர்கள் வடிவமைத்த மூவர்ண தேசியக் கொடியையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இது,  இஸ்லாமியர்களாலே சாத்தியமானது என்பதை சப்தமிட்டு சொல்ல வேண்டும். நமது அமைதி  நமக்கு சமாதி! இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்ட, உழைத்த நமது மூத்த முன்னோர்களை வாசியுங்கள். நேசியுங்கள். நினைத்துப் பாருங்கள். நமது சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றியத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால், முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.  உங்கள் குடும்பத்தினரிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். கண்டிப்பாக,...

அதிகாரம் இருந்தும் அடக்கமாகவும், அரசராக இருந்தும் அடியாராகவும்.....

Image
அதிகாரம் இருந்தும் அடக்கமாகவும்,  அரசராக இருந்தும் அடியாராகவும்..... <><><><><><><><><><><><><><><><><><> அதிகமாக அள்ளிக் கொடு ! <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 74 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> மன்னர் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம், "ஹாரூனே! இந்த ஆட்சி அதிகாரம் உங்களிடம் வந்து சேரும்! எனவே நீங்கள் நடந்து சென்று ஹஜ் செய்யுங்கள்;  போர்க்களங்களில் கலந்து கொள்ளுங்கள்; ஹஜ்ஜுக்கு செல்லும் போது இரண்டு ஹரம்களிலும் உள்ள மக்களுக்கு தாராளமாக ஸதக்கா செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் நடந்து சென்று ஹஜ் செய்தார்கள். இரண...

அவருக்கு பயப்படாதீங்க......

Image
அவருக்கு பயப்படாதீங்க...... <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 73 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> ஹிஜ்ரி 570 களில் இன்றைய துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில்  டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் சிஸ்ரே - Cizre எனும் நகரம் அன்று 'ஜஸீரத் இப்னு உமர்' எனும் பெயரில் இருந்து வந்தது. அந்த நகரத்தின் காஜியாக ஸத்ருத்தீன் மவ்ஹூப் அல் ஜஸ்ரி (ரஹ்) அவர்கள் இருந்தார்கள்.  இயற்கையாகவே இவர் மிகப்பெரும் செல்வந்தராகவும், மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்யக் கூடியவராகவும் இருந்ததால், அளவற்ற செல்வத்திற்கு சொந்தக்காரராக இருந்தார்.  அந்தப் பகுதியின் ஆளுநர் இவரின் செல்வத்தின் மீது ஆசை கொண்டு அதை அபகரிக்க வேண்டுமென நினைத்து செயல்பட்டார்; இது காஜி ஸத்ருத்தீன் மவ்ஹூப் அல் ஜஸ்ரி (ரஹ்) அவர்களுக்கு தெரியவந்தது. உடனே காஜி அவர்கள் தனது வியாபார நண்பர்...

நான் ஆணையிட்டால்....

Image
நான் ஆணையிட்டால்,  அது கீழ்ப்படிகிறது <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 105 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) மிகவும் ஏழ்மையானவர், இவர் தனது கனவில்  நபி (ஸல்) அவர்களைக் கண்டார். ( அந்தப் கனவின் காட்சி) ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்கள் மிகப்பெரிய வெட்ட வெளியில் நின்றிருந்தார்கள்; அவர்களைச் சுற்றி, நேர்மையான அவர்களது தோழர்கள் ஒரு குழுவாகவும், தூய்மையான அவர்களது குடும்பத்தினர் ஒரு கூட்டமாகவும் நின்றிருந்தனர். அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்களிடம் ஏதோ பேசினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்; ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்கள் அங்கு கூடி இருந்த தம் மக்களிடம் மறுமையின் சில காட்சிகளை சொல்லி அச்சமூட்டி விளக்கினார்கள். மேலும், மறுமையில் அல்லாஹ் தமக்குச் செய்தி...

அனஸ்! அவரை விடுங்கள்!! அவர்தான் நமக்கு வேண்டும்!!!

Image
அனஸ்!  அவரை விடுங்கள்!!  அவர்தான் நமக்கு வேண்டும்!!! <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 103 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> உஸ்தாத் அப்துல் அஸீஸ் அபூல் ஃபழ்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து உளூ செய்து கொண்டிருப்பதாகக்  கண்டேன். அவர்களின் பணியாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபிகளாரின் முன் நின்று, கையில் தண்ணீர் நிரம்பிய குவழையை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி உதவி செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் நான் விரைந்து வந்து  அனஸ் (ரலி) அவர்களின் கையிலிருந்த குடுவையை பறித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கைகளில் நான் தண்ணீர் ஊற்றத் தொடங்கினேன். இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள் கோபமடைந்து, என் கையிலிருந்த குடுவையைப் பறிக்க முனைந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அ...

மரணத்திற்குப் பிறகும் வாக்கை காப்பாற்றும் வாய்மையாளர்!

Image
மரணத்திற்குப் பிறகும் வாக்கை காப்பாற்றும் வாய்மையாளர்! <=><=><=><=><=><=><=><=><=><=><=> அல்லாஹ் உனக்கு  ஆரோக்கியம் தருவானாக! <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 102 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><>   இப்னு அபீ தய்யிப் அல் ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “எனக்கு பத்து ஆண்டுகளாக செவிட்டுத்தன்மை இருந்தது ( அதனால் பிறர் பேசுவதை என்னால் கேட்க இயலாது; இந்நிலையில்) நான் ஒருமுறை மதீனாவிற்கு சென்றிருந்தேன்.  நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் மிம்பருக்கும் இடையில் ஒரு இரவு உறங்கினேன்; அப்போது கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்.  நான் நபிகளாரிடம், "யா ரசூலல்லாஹ்! நீங்கள், 'என்னை முன்னிறுத்தி  அல்லாஹ்விடத்தில் “வஸீலா” கேட்பவருக்கு என் ஷஃபாஅத் கட்டாயம் உண்டு"...

இருந்த இடத்திலிருந்து இறைவனைக் காணலாம்

Image
இன்று இரவு மிஅராஜ் இருந்த இடத்திலிருந்து  இறைவனைக் காணலாம் :::::::::::::::::::::--------------:::::::::::::::::::::: الصلاة معراج المؤمن நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகை முஃமீன்களின் மிஅராஜ் ஆகும்.  அஸ்ஸலாத் - தொழுகை எனும் சொல் திருக்குர்ஆனில் 85 முறை இடம் பெற்றுள்ளது. 17 × 5 = 85  ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகை. அதில் 17 ரக்அத்துகள் உண்டு. அதைத்தான் மேற்கண்ட கணக்கில் 5 ம், 17 ம்  சொல்லிக் காட்டுகிறது.  இவ்வளவு துல்லியமாக ஒரு நேர்கோட்டில் இதை அமைத்தது  அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் முடியும்? நபி (ஸல்) அவர்களுக்கு சித்ரத்துல் முன்தஹா அருகே அல்லாஹ் தொழுகையை வழங்கினான்.  உள ஓர்மையோடு மனிதன் தொழும்போது, தன் இருப்பிடங்களை விட்டு, படைப்பினங்களை விட்டு இறைவனோடு ஆத்மார்த்தமாக  நெருங்குகிறான்.  மனிதன் தொடர்ந்து உள ஓர்மையோடு தொழுதால் சித்ரத்துல் முன்தஹாவில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை  சந்தித்தது போல் நாமும் இருந்த இடத்திலிருந்து அல்லாஹ்வை சந்திக்க முடியும் என்பதைத்தான் அந்தச் சொல் கூறுகிறது. தொழுகை, இறைவனும் மனிதனும் சந்திப்பதற...

இல்லை' என்பதைச் சாப்பிடு; 'இல்லை' என்பதைக் குடி !

Image
'இல்லை' என்பதைச் சாப்பிடு;  'இல்லை' என்பதைக் குடி !  <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 101 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் கடுமையாக நோயுற்றிருந்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார்கள். ஹஸன் (ரஹ்) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உன் நோயிலிருந்து நலமடைய விரும்பினால், ‘இல்லை’ என்பதைச் சாப்பிடு; ‘இல்லை’ என்பதைப் பருகு” என்று கூறினார்கள். கனவிலிருந்து விழித்த ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள், இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் பத்தாயிரம் திர்ஹங்களை கொடுத்தனுப்பி, “இதை ஏழைகளுக்குப் பகிர்ந்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தக் கனவின் பொருள் என்ன என்று கேட்டு வரும்படி ஒருவரை அனுப்பி வைத்தார்கள். அவர் சென்று விபரங்களை சொன்னதும் இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அ...

அல்லாஹ்வின் கையைப் பிடித்த அத்தார் (ரஹ்) அவர்கள்

Image
அல்லாஹ்வின் கையைப்  பிடித்த அத்தார் (ரஹ்) அவர்கள்  <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 100 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> அல் அக்பரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் நான் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “யா ரசூலுல்லாஹ்! என் கண்களில் வலி இருக்கின்றது; தயவுசெய்து தாங்கள் தங்களுடைய கைகளால் என் கண்களைத் தடவி விடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களிடம் செல்லுங்கள்; அவர் உமது கண்களைத் தடவுவார்" என்று கூறினார்கள். அதை கேட்டதும் என் மனதில் “நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு, உலக மக்களில் ஒருவரிடம் செல்வத?” என்று எண்ணினேன். மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம், “யா ரசூலல்லாஹ்! நீங்கள்தான் என் கண்களைத் தடவி விடவேண்டும்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ...

அவர் கையை கழுவி விடுங்கள்

Image
அவர் கையை கழுவி விடுங்கள்  <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 99 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> அபூ ஜஃபர் அல் ஸைதலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்களைச் சுற்றி பல ஏழை எளியவர்கள் கூட்டமாக அமர்ந்து இருந்தார்கள். அச்சமயம் திடீரென வானம் இரண்டாகப் பிளந்தது; அதிலிருந்து இரண்டு மலக்குகள் இறங்கி வந்தார்கள்; அவர்களில் ஒருவரின் கையில் ஒரு குண்டான் பாத்திரமும், மற்றொருவரின் கையில் ஒரு நீர் ஊற்றும் பாத்திரமான ஜக்கும் இருந்தது. இரு வானவர்களில் ஒருவர் தன் கையிலிருந்த பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைத்ததும் மற்றொருவர் தண்ணீரை ஊற்றினார்; நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் கழுவிக் கொண்டார்கள். மேலும் அங்கு பல ஏழை மனிதர்கள்  இருந்தார்கள்; அவர்களும்  ஒருவர் பின் ஒருவராகக் தமது கைகளைக்...

எழுந்திரு… நபிகள் நாயகம் வந்திருக்கிறார்கள்

Image
எழுந்திரு…  நபிகள் நாயகம்  வந்திருக்கிறார்கள் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 98 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> அபுல் கைர் அத்தியானத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் ஒருமுறை நபிகள் நாயகம்  அவர்களின் நகரமான மதீனாவிற்கு வந்திருந்தேன். அப்போது நான் மிக மிக வறுமையில் இருந்தேன். ஐந்து நாட்கள் அங்கே தங்கி இருந்தேன்; சாப்பிடுவதற்கு ஒரு கவளம் உணவுகூட கிடைக்கவில்லை. பின்னர் நான் நபி (ஸல்) அவர்களின் கப்ரு அருகே சென்று  அங்கே நபி (ஸல்) அவர்களுக்கும், அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறினேன். பின்னர் நான்  “யா ரஸூலல்லாஹ்! இன்று இரவு நான் உங்களின் விருந்தாளி” என்று சொல்லிவிட்டு மிம்பரின் (பிரசங்க மேடைக்கு) பின்னால்  படுத்து உறங்கினேன். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; நபிகளாரின் வ...

நபிகள் நாயகம் எனக்கு 100 தீனார் கொடுத்தார்கள்

Image
98.  நபிகள் நாயகம் அவர்கள்  எனக்கு 100 தீனார் கொடுத்தார்கள் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 12  தொடர்: 98 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> மதீனத்துல் முனவ்வராவின் வரலாற்றைப் பதிவு செய்த "அத் துஹ்ஃபதுல் லதீஃபா ஃபீ தாரீகில் மதீனதிஷ் ஷரீஃபா" என்ற நூலின் ஆசிரியர் கூறுகிறார். “நான் முழுமையாக நம்பும் ஒருவரிடமிருந்து எனக்கு இந்த செய்தி அறிவிக்கப்பட்டது. மதீனாவில் உள்ள ஷம்ஸ் ஸவாப் அல் முகீசீ  (ரஹ்) அவர்களுக்கு மக்காவிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'அஸ் ஸுபைர் பின் அலீ பின் ஸய்யிதி அல் குல்' (ரஹ் ) என்பவருக்கு நூறு திர்ஹம் வழங்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று அல் முகீசீ (ரஹ்) அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது. இந்நிலையில் முகீசீ (ரஹ்) அவர்களிடம் ஐம்பது...

என்ன ஆச்சி? இங்கே வா! என நபிகள் நாயகம் அழைத்தார்கள்

Image
என்ன ஆச்சி? இங்கே வா!  என நபிகள் நாயகம் அழைத்தார்கள் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 96 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள், யஅகூப் பின் ஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.  நான் (ஹதீஸை தேடிச் சென்ற) பயண காலத்தின் இரவு நேரங்களில் விளக்கின் ஒளியில் எழுதிக் கொண்டிருப்பேன்; அவ்வாறு ஒரு இரவு எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென எதோ ஒன்று என் கண்களில் பட்டது. அதனால் விளக்கின் ஒளியையே என்னால் பார்க்க முடியாமல் கண்கள் குருடாகி ஆகிவிட்டது.  உடனே நான் என் பார்வை போய்விட்டதே என்றும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை இனி எழுத முடியாமல் போய்விடுமோ என்றும், நான் அந்நிய நாட்டில் (பயணத்தில்) இருக்கிறேனே என்றும் எண்ணி அழுதேன். இவ்வாறு மனவேதனையுடன் இருந்தபோது, தூக்கம் என்னை மீறிக் கொண்டு வந்தது; நான் தூங்...

என்ன பேசுறீங்க நீங்க.....

Image
என்ன பேசுறீங்க நீங்க..... °°°°°°°°°°ππππππππ°°°°°°°°°°°°°° நபி (ஸல்) அவர்களின்  நூரைப் பார்ப்பது <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 95 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்; அவர்களுக்கு அருகில் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், “நான் ஒரு கனவு கண்டேன்; மக்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டு இருந்தார்கள் (மறுமை நாள் போல் இருந்தது). அப்போது அனைத்து நபிமார்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு இரண்டு நூர்கள் இருந்தன; அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஒரு நூர் இருந்தது. பின்னர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; அவர்களுடைய தலை முடியிலும், உடலில் உள்ள ஒவ்வொரு முடியிலும் ஒளி நிறைந்திருந்தது; அவரை பின்பற்றியவர்கள் அனைவருக்கும் இரண்டு நூர் - ஒளி இருந்தது”. இதைக் கேட்...

கவிதையையும் கவிஞர்களையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பிடிக்குமா?

Image
கவிதையையும் கவிஞர்களையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பிடிக்குமா?  <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> நான் அதை நேசிக்கிறேன்; அதை  நேசிப்பவர்களையும் நேசிக்கிறேன் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> மாதம்: 11 தொடர்: 95 நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><><><><> ஒரு அறிஞர், தன் பாடசாலையை தொடங்கும் போது, கஅப் பின் ஜுஹைர் (ரலி) அவர்களின் ஒரு கவிதையை  வாசிக்காமல் ஒருபோதும் தொடங்க மாட்டார். அதையே அவர் வளமையாக வைத்திருந்தார். இதற்கான காரணம் அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் “நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்போது அவர்களிடம், ‘யா ரசூலல்லாஹ்! கஅப் பின் ஜுஹைர் (ரலி) அவர்களின் கவிதையை உங்கள் முன் பாடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! (பாடுங்கள்) நான் அவரின் கவிதையை ...