Posts

Showing posts from April, 2025

ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள்

Image
ஹஜ் வழிகாட்டு நெறிமுறைகள் ================================== தல்பியாவை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். இஹ்ராம் அணிந்த உடன் தல்பியாவை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். எடுத்துக்கொள்ள வேண்டியவைகள்: ================================== 1. நீங்கள் சாப்பிட்டுவரும் மருந்துகள், நாற்பது நாட்களுக்கு டாக்டர் சீட்டுடன் (Prescription) எடுத்துக்கொள்ள வேண்டும். 2. ஐந்து அல்லது 6 செட் உடைகள் (Dresses) (இதில் இரண்டு செட் புதிய உடையாக இருக்க வேண்டும்.)  3.  மக்கானா 2  இஹ்ராம் 2 செட் . 4. பிரஷ்,பேஸ்ட், சோப்பு சேவிங் செட் போன்றவைகள். 5. சன் கிலாஸ் ( Sun Glass -UV treated.) *அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள்:* உதாரண மாத்திரைகள் 1. ஜுரம் (TAXIMO/PARACETAMOL 20) 2. ஒற்றைத் தலைவலி (GRENIL10 ) 3. இருமல் சிரப் (MUCOLITE OR COREX DX 3 BOTTLE ) 4. சளி (ALERID & OFLIN 200MG 30) அல்லது ( SAMAHAN 20 ) 5. அலர்ஜி ( ALLEGRA 120 / AVIL 25 ) 6. ஆன்டிபயாடிக்  ( AMOXLIN 500. /10 ) 7. வயிற்றுப்போக்கு ( SPORLAC/LOPARAT/GRAMOGYL10 ) 8. உடல் நீர் குறைவு (சோர்வு)  ...

ஹாஜிகளின் கனிவான கவனத்திற்கு....

Image
ஹாஜிகளின்  கனிவான கவனத்திற்கு.... ========================= ஹரம் ஷரீஃபில்  ஜனாஸா தொழுகை முறை  ========================== ஹஜ் மற்றும் உம்ரா செல்லக்கூடிய அனைவரும் கீழ்காணும் தகவலை முழுமையாகப் படித்து விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன். இரண்டு ஹரம் ஷரிஃப்களிலும் ஒவ்வொரு வக்து தொழுகைக்கு பிறகும் ஜனாஸா தொழுகை நடைபெறும். அந்த ஜனாஸா தொழுகையில் ஆண்களும் பெண்களும் அங்கு  கலந்து கொள்ளலாம்.  பெண்கள் ஜனாஸா தொழுகை தொழுவதற்கு ஹரம் ஷரீஃபில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உலகத்தில் வேறு எந்த பகுதியிலும் அந்த வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. எனவே ஜனாஸா தொழுகையின் முறையை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஜனாஸா தொழுகையில்  நான்கு தக்பீர்கள் சொல்லப்படும். ஒவ்வொரு தக்பீருக்கு பிறகும் ஓத வேண்டிய துஆக்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.  இப்பொழுது மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தக்பீரை இமாம் சொன்ன பிறகும் கீழ்காணும் துஆக்களை ஓத வேண்டும். ஜனாஸா தொழுகையின் சிறப்பு : ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَ...

காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி - நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்கள்

Image
காயல்பட்டணம்  மஹ்லரா அரபுக் கல்லூரி -  நீங்கள் அறிய வேண்டிய  அரிய தகவல்கள் ========================= செயலாளர், மஹ்லரதுல் காதிரிய்யா காயல்பட்டணம்.. சுமார் நூறு அடி உயரம்! நூறு அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்ட வடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! நூற்றி ஐந்து (105) ஆண்டுகளைக் கடந்தும்கூட புதுமை மாறாத பொலிவு மிக்க தோற்றம்! பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு! குவலயம் போற்றும் குதுபு நாயகம் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ஆண்டகை (ரலி) அவர்களின் புனித ரவ்ளா ஷரீபின் அமைப்பில் பரவசமூட்டும் இது, பாங்கான கவர்ச்சி! சிறு மக்கமெனும் செகம் புகழ் கொண்ட, காயல்மாநகரின் நடுவண், "ஞாலம் போற்றும் ஞானியர் திலகம் முஹ்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் நினைவாக, காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் வண்ண 'மஹ்லரா'வின் எண்ண இனிக்கும் அமைப்பு! ஹிஜ்ரி 1288-ம் ஆண்டு ஷவ்வால் பிறை 25-ம் நாள்! அண்ணல் முஹ்யித்தீன் ஆண்டகை (ர...

பாகியாதுஸ் ஸாலிஹாதில் பட்டம் பெறும் மானவர்களுக்கு தலைப்பாகை துணிக்கு தனி வக்ஃபு

Image
பாகியாதுஸ் ஸாலிஹாதில்  பட்டம் பெறும் மானவர்களுக்கு தலைப்பாகை துணிக்கு தனி வக்ஃபு : =~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~=~ மர்ஹூம் கிப்லா ஹலரத் நினைவு மலரிலிருந்து.... இந்தக் கட்டுரையை எழுதியவர் மௌலவி மு.  அப்துல் பத்தாஹ் பாகவி அவர்கள் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கு P.A. முஹம்மது அபூபக்கர் கிப்லா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பேராசிரியராகவும் நாஜராகவும் இருந்தபோது நிரந்தர பல வக்ஃபு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரு வக்ஃபு வித்தியாசமானது.  ================================== பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தலைப்பாகை அணிவிப்பது வழக்கம். அந்தத் தலைப்பாகை துணியை வாங்கி தருவதற்காக உத்தம பாளையத்தைச் சேர்ந்த செல்வந்த பெண்மணியான ஹஜ்ஜா சின்ன கத்தம்மாள் என்பவரிடம் பேசி அவர்கள் மூலம் சொத்து ஒன்றை தலைப்பாகைகாக எழுதி வைக்க கிப்லா ஹள்ரத் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.  கிப்லா ஹள்ரத் அவர்கள் மதரஸா பாகியாதுஸ் ஸாலிஹாத்தில் நீண்ட காலம் பேராசிரியராக பணியாற்றியதால் அங்கு எந்தத் துறையில் வக்ஃபு இல்லை என...

வக்ஃபு திருத்தச் சட்டம் பிஜேபியினருக்கு வெற்றியா?

Image
வக்ஃபு திருத்தச் சட்டம்  பிஜேபியினருக்கு வெற்றியா?  ============================== கஅபாவை அழிக்க வந்த  ஆபிரஹா மன்னனுக்காக  மக்க மாநகர் திறந்தே கிடந்தது ; எதிர்ப்பே இல்லாமல் மக்காவை அழிக்கப் போகிறோம் என்கிற ஆணவத்தோடு நுழைந்த ஆபிரகாம் அடிச்சுவடு இல்லாமல் அவனும்  அவன் பரிவாரங்களும்  அழிந்துப் போனார்கள்! அதுபோல்  மூஸா நபியை துரத்தி வந்த   ஃபிர்அவ்ன்  தனக்காக திறந்திருந்த  நைல் நதியில் மூஸா சென்று விட்டார்  அவரை நான் அளிப்பேன் என ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் எதிர்ப்பே இல்லாமல் உள்ளே நுழைந்தவன் அடிச்சுவடே இல்லாமல்  அவனும் அவன் பரிவாரங்களும் அழிந்து போனார்கள். அதுபோல் எதிர்ப்பே இல்லாமல் வக்ஃபு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற ஆணவத்தில் பிஜேபியினர் பெருமிதம் கொள்கிறார்கள்.  பிஜேபினரின் வெற்றி ஆபிரகாம் அழிந்ததை விடவும், ஃபிர்அவ்ன் அழிந்ததை விடவும் கொடூரமாகவும் வரலாறாகவும் மாறும். "சிவன் சொத்து குலநாசம்" என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அது  அல்லாஹ்வுக்கும் பொருந்தும்.

நபிகள் நாயகத்திற்கு வக்ஃபு செய்த நபித்தோழர் :

நபிகள் நாயகத்திற்கு  வக்ஃபு செய்த நபித்தோழர் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ யூதர்களில் பனீநுளைர் சமூகத்தில் பனு கையின்கா பிரிவைச் சேர்ந்த முகைரீக் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார்.  இவர் ஓரு துறவி / பாதிரியாரும் ஆவார்; இவருக்கு மனைவி மக்கள் எவரும் இல்லை. தவ்ராத் வேதத்தை நன்கு அறிந்திருந்த மார்க்க மேதை ஆவார்.  நபி (ஸல்) அவர்கள் குபா பகுதியில் இருக்கும் போதே தேடிச்சென்று இஸ்லாத்தில் இணைந்து விட்டார். நபி (ஸல்) அவர்களை நபி என தாம் முதலில் ஒப்புக்கொண்டு, "இவர்தான் இறுதி நபி, எதிர்பார்க்கப்பட்ட நபி, பஷாரத் -  நன்மாராயம் சொல்ல வந்த நபி, தவ்ராத் இன்ஞீல் போன்ற வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட , வர்ணிக்கப்பட்ட நபி என்று தம் சமூகத்தினருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.  இவர் நபிகள் நாயகம் அவர்களை முதன் முதலில் பார்த்ததும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.  உஹது போர்க்களத்தில் கலந்து கொண்டு மிக வீரதீரமாக போர் செய்து பலரை கொன்று குவித்தார்கள்; இறுதியில் தானும் படுகாயங்கள் அடைந்து மரண தருவாயில் இருக்கும் பொழுது  اموالي الى محمد يضعها حيث يشاء  "எனது செல்வங்கள் அனைத...