Posts

Showing posts from June, 2025

நபிகள் நாயகம் அவர்களால் "ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என அழைக்கப்பட்டவர் யார்?

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 7 தொடர் : 48 நபிகள் நாயகம் அவர்களால்  "ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என அழைக்கப்பட்டவர் யார்?  =============================== இமாம் அப்துல் காதிர் ஷாதுலீ  ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தன் நூலின் முன்னுரையில் கூறுகிறார்கள்.  ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்;  நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது நபிகள் நாயகம் அவர்கள், "ஷைகுல் ஹதீஸ் அவர்களே!" என்று என்னைப் பார்த்து சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கவாதிகளில்  ஒருவரா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்!" என்று கூறினார்கள்.  "எந்த வேதனையும் இல்லாமல் நான் முந்தி சென்று விடுவேனா!" என்று மீண்டும் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த வாய்ப்பு உமக்குத்தான் உண்டு!" என்று கூறினார்கள். நூல் : அந்நூருஸ் ஸாஃபிர் அன் அக்பாரில் கர்னில் ஆஷிர், ஷதராதுத் தஹப். இமாம் அப்துல் ...

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய நினைத்த யூத பெண்ணின் வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு?

Image
நபி (ஸல்) அவர்களை கொலை  செய்ய நினைத்த ஜைனப் பின்த்  ஹாரிஸ் எனும் யூத பெண்ணின்  வாரிசுதான் பெஞ்சமின் நெதன்யாகு  என ஆய்வில் உறுதியானது ? ================================== பலஸ்தீனில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உலகத் தன்னார்வலர்கள் கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை காசாவிற்குள் இஸ்ரேல் அரசாங்கம் அனுமதிக்காமல் இருந்தது.  இந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து அனுமதித்து வருகிறது. உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் மக்களுக்கு ஐ.நா. வின் பெரும் முயற்சியால் இஸ்ரேல், அமெரிக்கா வழியாக கோதுமை மாவு மூட்டைகளை வழங்கி வருகிறது. அதில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.  போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் ஆக்ஸிகோடன் மாத்திரையை அரைத்து மாவில் இரண்டற கலந்து இருக்கிறார்க...

அணு குண்டு தயாரிப்பு ஃபத்வா என்ன?

Image
அணு குண்டு தயாரிப்பது குறித்து இஸ்லாத்தின் ஃபத்துவா தீர்வு என்ன? ================================== உலகத்தில் 195 நாடுகள் இருக்கின்றது. இவற்றில் ஒன்பது நாடுகளில் மட்டும் அணு ஆயுதங்கள் குறிக்கின்றன. இவற்றில் ஒரு இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் ஆகும். அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வது  யானையைக் கட்டித் தீனி போடுவது போல!  இதற்கான தொழிற்சாலை கட்டுமானம், அறிவியல் ஆய்வாளர்கள் சம்பளம் மற்றும் பல வழிகளில் ஆகின்ற செலவுகள் ஒரு நாட்டின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதத்தை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக் கொள்ளும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுவின் பயன்கள் : ===================== 1. அணு ஆயுதம் உள்ள நாட்டின் மீது எந்த ஒரு நாடும் போர் தொடுக்க அச்சப்படுகின்றது. அதனால் அந்த நாடு தன் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி குறுகிய காலத்தில் மிக பெரும் வளர்ச்சியை அடைய முடியும்.  அதே நேரம் தன் நாட்டின் மீது பிறர் படையெடுத்து விடுவார்களோ என்கிற அச்சப்படத் தேவையே இல்லை.   2.  புகை இல்லாமல் அணு மின் நிலையங்களில் அணுக்கரு பிளவு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  3....

அறிவை நம்பி மோசம் போன அபூ ஜஹலின் வாரிசுகள் ட்ரம்பும் நெதன்யாகுவும்

Image
அறிவை நம்பி மோசம் போன  அபூ ஜஹலின் வாரிசுகள்  ட்ரம்பும் நெதன்யாகுவும் =========================== அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட போது, "எங்களுடைய உளவு அமைப்பினரும் மொசாத் உளவு அமைப்பினரும் ஈரான் குறித்து தவறான புள்ளி விபரங்களை சொன்னதால்தான் போரில் இறங்கினோம்" என்று கூறினார்.  அதாவது கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக பொருளாதார தடை இருக்கின்ற இந்த ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருக்காது, ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இருக்க மாட்டார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை மற்றும் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையினர் அனைவரும் தனது அறிவால் சிந்தித்தும் யூகித்தும் கணித்ததை ரிப்போர்ட்டாக எழுதி அனுப்பி வைத்து விட்டார்கள்.  அதை, உண்மை என்று நம்பி தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் போரில் குதித்தது; ஆனால் இரண்டு நாடுகளும் புறமுதுகிட்டு ஓடுகிற அளவிற்கு ஈரான் தன் வல்லமையையும், ஆற்றலையும், அறிவையும் நிரூபித்து விட்டது. இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை ஒத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது ஸவ்ர் குகையில் தங்கி...

இஸ்லாம் மற்றும் சுன்னத்தின் அடிப்படையில்....

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 7 தொடர் : 47 இஸ்லாம் மற்றும்  சுன்னத்தின் அடிப்படையில்.... ∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆ ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுஸைன் பின் அபீ ஜயீத் எனும் அபூ அலீ துபாங் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாமியனாகவே எழுப்பப்பட வேண்டுமென தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனது சுன்னத்துடனும் எழுப்பப்பட துஆ செய்கிறேன்" என்று கூறினார்கள். நூல் : அல் பிதாயா வந் நிஹாயா. •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• எனது அனைத்து  ஆக்கங்களையும் பார்க்க....... •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• Blogger: Posts https://share.google/Z22JfjuBUunvwFzSs

எனக்கு நபிகள் நாயகம் அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்களா?

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம் : 7 தொடர் : 46 என்ன காரணமாக இருக்கும்?  ∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆<>∆ முஹம்மது பின் யஹ்யா அல் குர்மானீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்) அவர்களிடம் நானும் வேறு சிலரும் இருந்தோம்; அப்பொழுது ஒரு இளைஞர் எங்களிடையே வந்தார்; அவர் யார் என்று எங்களில் யாருக்கும் தெரியவில்லை; இந்நிலையில் அவர் எங்களுக்கு ஸலாம் சொன்னார்.  பின்னர் உங்களில் யார் அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்) எனக் கேட்டார்; நாங்கள் சம்பந்தப்பட்டவரை சுட்டிக்காட்டினோம்.  அவர் அவர்களிடம் நெருங்கி வந்து, "ஷைகு அவர்களே! நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் அபூ அலீ பின் ஷாதான் அவர்களை சந்தித்து எனது ஸலாத்தினை எத்தி வையுங்கள் என்று கூறினார்கள்; அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ" பின்னர் அந்த இளைஞர் சென்றுவிட்டார்;  அபூ அலீ பின் ஷாதான் (ரஹ்...

நபி ஸல் அவர்கள் கேட்டார்கள் இமாம் கஸ்ஸாலீ எங்க?

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ மாதம் : 7 தொடர் : 44 இமாம் கஸ்ஸாலீ எங்கே?  ========================= இமாம் அபுல் ஃபதஹ் அல் ஸாவீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  நான் ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் நான் நுழைந்தேன் ; மக்கள் திடீரென என்னை நோக்கி வந்தார்கள்; அவர்களுக்கு இடையே மிகப் பெரிய முற்றம் -  ஹால் இருந்ததைக் கண்டேன்; அங்கே அதிகமான மக்கள் அமர்ந்திருந்தார்கள். அங்கு இருந்த ஒவ்வொருவருடைய கைகளிலும் மொத்தமான ஒரு நூல் இருந்தது; அவர்கள் அனைவரும் ஒரு மனிதரை சுற்றி அமர்ந்திருந்தார்கள். நான் அங்கிருந்தவர்களிடம், "அவர்கள் ஏன் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்; நடுவில் அமர்ந்திருப்பது யார்?" என்று கேட்டேன். அவர்கள், "நடுவில் அமர்ந்திருப்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்; அவர்களை சுற்றி அமர்ந்திருப்பவர்கள் மத்ஹபுகளை தோற்றுவித்தவர்கள் ஆவர்; மேலும் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது மத்ஹபுகான கொள்கை கோட்பாடுகள் அடங்கிய நூலை பெருமானாரிடம் வாசித்துக் காட்டி, அவர்களுக்கு முன்னிலையிலேயே அதை சரி பார...

ஈரானில் தயார் நிலையில் அணு ஆயுதம்?

Image
நேற்று இரவு ஈரான் அணுகுண்டு  சோதனை செய்து விட்டதா? ÷÷÷÷÷÷÷÷÷÷÷========÷÷÷÷÷÷÷÷÷ நேற்று இரவு பின் நேரம் ஈரானில் அணுமின் நிலையத்துக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள அணுமின் நிலையத்துக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருப்பதாகவும், பத்து கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது. மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது. சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளதாகும்.  இது நேற்றைய தினமலரில் வெளிவந்த செய்தி! இதை கீழுள்ள வெப்சைட்டில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.  https://share.google/YoD2XXsR7U6KxsYYI நிலநடுக்கமா  அணுகுண்டு பரிசோதனையா?  ============================== அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பவர்கள் அதை முதன் முதலில் சோதனை செய்து பார்ப்பார்கள். ...

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட இரவை போன்று இஸ்ரேலில்....

Image
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட  இரவை போன்று இஸ்ரேலில்.... ============================= இந்த வீடியோவை முதலில்  பார்த்துவிட்டு கீழ் இருக்கும் தகவலை படியுங்கள் : நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்ள சென்றிருந்த போது அதற்கு முதல் நாள் இரவில் மக்காவை சுற்றி இருந்த மலைகளில் நபித்தோழர்கள் தங்கி இருந்தார்கள்.  அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வொருவரும் இரண்டு அடுப்புகளை மூட்டி சமையல் வேலையைப் பாருங்கள் ; இயன்றவரை நள்ளிரவு வரை அடுப்புகள் அனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று உத்தரவிட்டிருந்தார்கள்.  இந்த உத்தரவின் உண்மையான நோக்கத்தை பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்களே என்பதற்காக அனைவரும் அதனைச் செய்தார்கள்.  மக்காவில் வாழ்ந்த இறை மறுப்பாளர்கள், குறைஷிகள் மற்ற அனைவரும் ஒவ்வொரு மலையிலும் அடுப்புகள் எரிவதைப் பார்த்து இலட்சக்கணக்கானவர்கள் வருகை தந்திருக்கிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார்கள்.  ஏனென்றால் சமையல் செய்கிறவர்கள் ஐந்து பேர், பத்து பேர் சேர்ந்து தான் சமையல் செய்வார்கள்.  ஒரு அடுப்புக்கு ஐந்து பே...

ரகசியமான செய்தி ! விரும்புவோர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வாருங்கள்

Image
இந்த வருடம் ஏப்ரல் 12 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள ஒன்று கூடினர்.  "அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டேன்" என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள்" என்று அமெரிக்கா கேட்டது.  அதற்கு இஸ்ரேல் ஒன்பது நாட்டினர் நியூக்ளியர்  வைத்திருக்கிறார்கள்; நான் ஏன் இதில் கையெழுத்து போட வேண்டும்? ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மட்டுமே அணுவை பயன்படுத்துவேன்; நீங்கள் கேட்பது போன்று ஒப்புக்கொண்டு கையொப்பம் இடம் முடியாது" என கூறியது.  உடனே அமெரிக்கா, "அப்படி என்றால் இன்னும் 60 நாள் அவகாசம் தருகிறேன்; அதற்குள் கையொப்பம் இடவில்லை என்றால் போர் தொடுப்போம்" என கூறியது  அதைப்போல் ஜூன் 13 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இஸ்ரேல் ஈரானை தாக்கியது.  இந்த தாக்குதல் இஸ்ரேலில் இருந்து ஏவுகணைகளை ஈரான் மீது தாக்க வில்லை.  இஸ்ரேலியர் ஈரானுக்குள் ஊடுருவி வந்து ஈரானை தாக்கினர். அந்த வகையில் இந்த தாக்குதல் சற்று வித்தியாசமானது.  ஆமாம்! இரண்டு வருடங்களுக்கு முன்பே தன் உளவு அமைப்பான மொசாத்தை சேர்ந்த உளவுத்துறையினர் 100 பேரை ஈரானுக்குள் அனுப்பியது; அதில் ஆண்க...

உயரமான இடத்தில் இருந்தவாறு உரையாற்றுகிறார்

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன் *•••••••••••÷÷÷÷÷÷÷•••••••••••••••••* *•••••••••••÷÷÷÷÷÷÷•••••••••••••••••* மாதம் : 6 தொடர் : 42 உயரமான இடத்தில்  இருந்தவாறு உரையாற்றுகிறார் : =============================== பெண் ஷைகாக இருக்கக்கூடிய, மார்க்க சட்ட வல்லுனரான, மிகப்பெரும் பேச்சாளரான பாத்திமா பின்த் அப்பாஸ் (ரஹ்) அவர்கள் ஒரு உயரமான இடத்தில் நின்று பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்;  அவரின் உரையைக் கேட்டு அங்கிருந்த பெண்கள் மிகப்பெரும் பயனை அடைந்தார்கள்; மேலும் அந்நிகழ்வுக்குப் பிறகு அங்கிருந்த பெண்கள் அனைவரும் அல்லாஹ் மற்றும் ரசூலுக்குக் கட்டுப்பட்டு தமது இதயத்தை அல்லாஹ்விற்காகவே ஒதுக்கி விட்டார்கள். இமாம் இப்னு தைமியா அவர்கள் அந்த பெண் ஷைகு உடைய அமலைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். மேலும் அவரின் அறிவாற்றல், சிந்தனைகள், பிறரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாங்கு, அவரின் இறையச்சம், அவரின் இறை நினைவிலான அழுகை ஆகியவற்றைக் கண்டு புகழ்ந்து பேசினார்கள். ஸலாஹுத்தீன் அஸ் ஸஃபதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஷைஹு தகியுத்தீன் பின் தைமியா (ரஹ்) அவர்கள் பற்றிய ஒரு செய்த...

புதுப்பொலிவுடன் திருக்குர்ஆன் தமிழுரை மறு வெளியீட்டு விழா :

Image
புதுப்பொலிவுடன் திருக்குர்ஆன்  தமிழுரை மறு வெளியீட்டு விழா :  =========••••••••••••••••============ மவ்லவீ, ஆஷிகே ரசூல், O.M. அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்களும் மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் ஆகிய நானும் திருக்குர்ஆன் தமிழுரை 2018 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு செய்து இருந்தோம்; அதை அமானத் அறக்கட்டளை  முதன் முதலில் வெளியிட்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் மறு பதிப்பு செய்யும் பொழுது உலகம் முழுவதிலும் இருந்து பலர் சொன்ன தமிழ் திருத்தங்களை சரி செய்து வெளியிட்டு வருகிறோம்.  ஒவ்வொரு முறையும் புதிய பதிப்பு வெளிவரும்போது O.M. ஹள்ரத் அவர்களும் நானும் தனித்தனியாக திருக்குர்ஆன் தமிழ் தர்ஜுமா முழுவதையம் வாசித்து திருத்தங்களை  செய்வோம். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து அது குறித்து ஆலோசித்து முடிவெடுத்ததை பதிவு செய்வோம்.  அந்த வகையில் கடந்த பதினைந்து வருடங்களாக மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வருகின்றோம். தர்ஜுமாவை கவனித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஒவ்வொரு முறையு...

ஈரான் இஸ்ரேல் யுத்தத்தைக் கண்டு உலக நாடுகள் அச்சப்படுவது ஏன்?

Image
ஈரான் இஸ்ரேல் யுத்தத்தைக் கண்டு உலக நாடுகள் அச்சப்படுவது ஏன்? ÷÷÷÷÷÷÷÷÷÷÷=========÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாட்டினரும் மாறி மாறி தாக்கி கொள்வதில் இரண்டு நாட்டினருக்குமே பலத்த சேதங்கள் ஏற்பட்டு  வருவது மறுக்க முடியாத உண்மை! இஸ்ரேலில் கொஞ்சம் அதிகமாகவே சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதுவும் உன்னையே! "இஸ்ரேலுக்குள் ஒரு தூசி நுழைய முடியாது" என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தது அந்த நாட்டு அரசு.  அதை உண்மை என நம்பி உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்த உலக அரசாங்கங்களும், ஊடகங்களும் இப்பொழுது இஸ்ரேலில் நடக்கும் நேரடி கள நிலவரத்தை கண்டு அஞ்சுகின்றனர். பின் வாங்குகின்றனர். அது ஈரானின் தாக்குதலை கண்டு அல்ல!  இஸ்ரேல் தன் வலிமை குறித்து சொல்லி பில்டப் கொடுத்தது போல் தற்போது கள நிலவரம் இல்லையே என்று எண்ணி. அல்லது இஸ்ரேல் அரசு சொல்லி வந்த செய்திகள் அனைத்தும் பொய்கள். பொய்களைச் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்களே என்ற ஏமாற்றத்தை எண்ணி! இஸ்ரேல் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதே என்று எண்ணி!! அதே நேரம் தாக்குதலை நடத்தும் ஆளில்லாத விமானம், கண்டம் விட்டு கண்டம் தா...

பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே! வருக!! வருக!!!

Image
நபி ஸல் அவர்களை  நான் கனவில் பார்த்தேன் ========================= மாதம் : 6 தொடர் : 41 பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே! வருக!! வருக!!! =========================== நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அபூ யஹ்யா பின் நபாதா (ரஹ்) அவர்கள் தம் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஜும்ஆ உரையின் மூலம் மிகப்பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  இவர்களைப் போன்று ஜும்ஆ பிரசங்கத்தை அறிவார்ந்த முறையிலும், அறிவியல் சார்ந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் அந்த நூற்றாண்டில் யாரும் பேசியதாக வரலாறு இல்லை. இவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் கனவில் பிரசங்கம் செய்வது போன்று கனவு கண்டார்கள். அந்தக் கனவை நான் விவரிக்கிறேன்;  சனிக்கிழமை இரவு நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழர்கள் நிறைந்த ஒரு கூட்டத்தினரையும்   ஓர் கபர்ஸ்தானில் வைத்து நான் பார்த்தேன். நான் அவர்களை முன்னோக்கி சென்ற பொழுது, "பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளரே வருக! வருக!! " என நபி (ஸல்) அவர்கள் என்னை வரவேற்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அடக்கத் தலங்களை சுட்டிக்காட்டி, "பேச்சாளரே! இவர்கள் குறித்து என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்...

குஜராத் விமான விபத்தும் அமெரிக்கா இரட்டை கோபுர விமான தாக்குதலும்

Image
குஜராத் விமான விபத்தும் அமெரிக்கா இரட்டை கோபுர விமான தாக்குதலும்  ================================== அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை தாக்கிய விமானம் போயிங் 767. இதன் பெட்ரோல் கொள்ளளவு 91290 லிட்டர் ஏறத்தாழ. குஜராத்தில் விழுந்த விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787. இதன் பெட்ரோல் கொள்ளளவு 184164 லிட்டர் கொள்ளளவு ஏறத்தாழ.  இரட்டைப் கோபுரத்தை தாக்கிய விமானத்தின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்டது குஜராத்தில் விழுந்த விமானத்தின் எடை. அமெரிக்கா செப்டம்பர் 11, 2001 அன்று இரட்டை கோபுரத்தை  விமானம் தாக்கியதால் 110 மாடி கட்டிடமும் சரிந்து விழுந்து உருகுளைந்து போனது.  அதைவிட அதிக சக்தி வாய்ந்த போயிங் 787 ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக விழுந்ததில் பி. ஜே. மருத்துவ கல்லூரி கட்டிடம் சிறிய சேதாரத்தோடு கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய விமானத்தை தாங்கிக்கொண்டு கட்டிடம் எப்பொழுதும் ஸ்ட்ராங்காக நிற்கின்றது. ஆறாவது மாடி மட்டும் சிறிதளவு டேமேஜ் ஆகி இருக்கின்றது.  அது எப்படி சின்ன விமானம் தாக்கி 110 மாடி கட்டிடம் மட்டும் சரிந்...

தமிழ்நாடு தலைமை காஜி அவர்கள் குறித்து

Image
மர்ஹூம், அல் அஜாரி, காதிரி, அல் கஸ்னாஸானி தமிழ்நாடு தலைமை  காஜி  அவர்கள் குறித்து ================================== சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களுக்காக இரங்கல் கூட்டத்தை சைதாப்பேட்டை நவாப் பள்ளியில் வைத்து நடத்தியது. அப்பொழுது பேசப்பட்ட கருத்துக்கள். ரஹ்மத் பதிப்பகத்தின் உரிமையாளர் M.A.  முஸ்தபா அண்ணன் அவர்கள் என்னிடம் கூறினார்கள். 24.11. 2024 அன்று "இமாம் புகாரி (ரஹ்) விருது" வழங்கும் விழாவை நடத்தினோம் ; விருது  வழங்குவதோடு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிளியும் வழங்குவது வழக்கம். தமிழ்நாடு தலைமை காஜி அவர்களை சந்தித்து மேற்கண்ட விபரங்களை கூறி அழைப்பு விடுத்தோம்; அப்பொழுதே அவர்கள் "நிகழ்ச்சிக்கு வருகிறேன்; கேடயங்களை பெற்றுக் கொள்கிறேன்; ஆனால் எனக்கு பரிசுத்தொகை வேண்டாம்" என்று சொன்னார்கள்.  இந்நிலையில் விழா நாளில் விழா மிகச் சிறப்பாக கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.  விழாவிற்கு தலைமை காஜி அவர்கள் வருவார்களோ, மாட்டார்களோ என்ற பதற்றத்தில் நாங்கள் இருந்தோம்; ஏனென்றால் அவர்களின் உடல்நிலை அவ்வளவு நலமா...

கிணறு வக்ஃபு :

Image
கிணறு வக்ஃபு :  ================ فقد روى الإمام أحمد وغيره عن سعد بن عبادة قال: قلت: يا رسول الله إن أمي ماتت، أفأتصدق عنها؟ قال: نعم، قلت: فأي الصدقة أفضل؟ قال: سقي الماء. حسنه الألباني. ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறுவதாவது;  அல்லாஹ்வின் தூதரே! (நான் வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்று இருந்த போது) எனது தாய் மரணித்து விட்டார்;  (அவரின் நினைவு என்னில் அதிகமாக இருக்கின்றது; அவரின் மீது உள்ள பிரியத்தின் காரணமாக) நான் எதாகிலும் சதக்கா - வக்ஃபு செய்யவா? நபி (ஸல்) அவர்கள் :  ஆம்!  செய்யுங்கள் ! ஸஅத் ரலி :  நான் எதை ஸதக்கா - வக்ஃபு செய்வது சிறந்தது ? நபி (ஸல்) அவர்கள் :  பிறருக்கு தண்ணீர் வழங்குவது சிறந்தது (அதற்காக கிணற்றை வெட்டுங்கள்.)  நூல் : நஸாயீ, முஸ்னது அஹ்மத்  ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள ஒரு பகுதியில் முதலில் ஒரு கிணற்றை வெட்டினார்கள். பிறகு மற்றொரு கிணற்றை வெட்டினார்கள். அந்தக் கிணற்றுக்கு  பிற்காலத்தில் பெயர் "பிஃரு உம்மு ஸஅத்" என ஆகிவிட்டது. அன்றைய காலத்தில் பாலைவன நிலப்பரப்பான ...

நாயகமே ! ஷிப்லியவா முத்தமிட்டீர் ?

Image
நபி (ஸல்) அவர்களை  நான் கனவில் பார்த்தேன் =========================== மாதம் : 6 தொடர் : 40 19. நாயகமே ! ஷிப்லியவா முத்தமிட்டீர் ? ========================= அபூபக்கர் முஹமது பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் இருந்த போது சூஃபி அபூபக்கர் ஷிப்லீ (ரஹ்) அவர்கள் வந்தார்கள்.  அவரைக் கண்டதும் அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று, அவர்களை முஆனகா - கட்டியணைத்த  பிறகு அவர்களுடைய நெற்றியில் இரண்டு கண்களுக்கு இடையே முத்தமிட்டார்கள். அறிவிப்பாளர் அபூபக்கர் முஹமது பின் உமர் (ரஹ்) அவர்கள், "எனது தலைவரே! ஷிப்லியை போய் நீங்கள் இப்படி கண்ணியப்படுத்துவதா? பங்தாதில் இருக்கிற அனைவரும் இவரை பைத்தியம் என்றல்லவா சொல்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.  அதற்கு அபூபக்கர் பின் முஜாஹித் (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஷிப்லீ அவர்களிடம் எதைச் செய்வதை நான் கண்டேனோ அதையே நான் இப்பொழுது செய்து இருக்கிறேன்;  ஒருமுறை நபி (ஸல்)  அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், ஷிப்லீ அவர்கள் நபிகள் நாயகம் அவர்களை ...

ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் :

Image
ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் :  =============================== ஹிஜ்ரி 1317 ஆம் ஆண்டு ஹள்ரத் ஷைகுல் இஸ்லாம் ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள் ஹஜ் செய்துவிட்டு மதீனாவில் வந்து தங்கி இருந்த ஓர் இரவில் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள்.  அந்தக் கனவில் நபி (ஸல்) அவர்கள், "உமக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்கள். அதற்கு ஹுசைன் அஹமது மதனி (ரஹ்) அவர்கள், "நான் படிக்கும் நூல்கள் என் நினைவுக்கு வந்து விட வேண்டும்; நான் வாசிக்காத நூல்களை  வாசித்ததும் அது எனக்கு எளிதில் புரிந்திட வேண்டும்;  நினைவாற்றலும் அதை விளக்கிச் சொல்லும் ஆற்றலும், பிறர் புரிந்து கொள்ளும் வகையில் பேசும் வல்லமையும் எனக்கு கிடைக்கப்பெற வேண்டும்" என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் உதவியோடு அது உமக்கு கிடைத்துவிட்டது" என்று கூறினார்கள்.  நூல் : ஸலாஸிலே தய்யிபா

தலைப்பு இல்லை

https://www.facebook.com/100047768203982/posts/248388990096706/ இன்று O. M . ஹள்ரத் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். "கொரானா காலம் எப்படி கழிந்தது? நீங்கள் பயான் செய்வதற்காக தினமும் பயணத்திலேயே இருப்பீர்களே? எப்படி நான்கு சுவருக்குள் இருந்தீர்கள்?" எனக் கேட்டேன். ஹள்ரத் அவர்கள் சொன்னார்கள்." நீங்கள் சொல்வது உண்மைதான், நானெல்லாம் ஒரு மாதம் வீட்டுக்குள் மட்டுமே இருக்க முடியுமா என பலமுறை யோசித்ததுண்டு. அது முடியாது என நானே சொல்லிக் கொண்டதும் உண்டு.  ஒரு மாதம் வீட்டிலிருக்க வேண்டும் என நான் பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். கொரானா காலம் வந்ததும் நான் ஆசைப்பட்டதை அல்லாஹ் அமைத்துக் கொடுத்தான் என்று எண்ணி சந்தோசப்பட்டேன்.  ஒரு மாதம் வீட்டிலிருக்க ஆசைப்பட்ட எனக்கு அல்லாஹ் பத்து மாதம் - ஒன்றுக்குப் பத்தாக  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். இதனால் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  அதேபோல ஒரு மாதம் தனிமையில் வீட்டில் இருக்க முடியுமா எனவும் நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். அப்படி ஒரு மாதம் கிடைத்தால் அதை நாம் எப்படி கழிப்பது என யோசித்தும் இருக்கிறேன். எனவே கிடைத்த இந்த பத்து மாத காலத்த...

இனிய ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்

Image
இப்ராஹீம் நபி அவர்கள் இறைவனுக்கு உடனுக்குடன்  கட்டுப்பட்டு வாழ்ந்து  இறையன்பை பெற்றது போல்  இந்த ஈதுல் அல்லாஹ்வில் நாமும் இறை அன்பைப் பெற  உறுதி ஏற்போம்! யூதர்கள்  கிறிஸ்தவர்கள் என  ஒவ்வொரு சாராரும்  "இப்ராஹிம் நபி எங்கள் தலைவர்" என மார்தட்டிக் கொள்வது போல்  நாமும் அவ்வாறு வாழ்ந்து  நம்மையும் பிறர் மார்தட்டிக்கொள்ள  வாழ முற்படுவோம் என  இந்த ஈதுல் அல்ஹா பெருநாளில்  உறுதி ஏற்போம்!  அனைவருக்கும்  இனிய ஈதுல் அல்ஹா -  மீண்டும் மீண்டும் குர்பானி கொடுக்கும் நிலையை வழங்குவானாக! என்ன பிரார்த்தித்து வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் உங்களுக்கும்  உங்கள் குடும்பத்தினருக்கும்  மன மகிழ்வை  என்றென்றும் அல்லாஹ்  நிரந்தரமாக ஆக்குவானாக ஆமீன்! அன்புடன்  மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசல் நிர்வாகம்  &  இமாம்: மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ  07/06/2025

குர்பானி இறையச்சத்தின் வழிபாடா?

Image
குர்பானி இறையச்சத்தின் வழிபாடா?  ================================== முற்காலத்தில் அரசர்களை சந்திக்க வரும் கிராமப்புற மனிதர்களும், பொதுமக்களும் அன்பளிப்புகளை கொண்டு வந்து கொடுப்பார்கள் . அவர்கள் தங்களிடம் இருக்கும் கோழி, முயல், திணை, தேன், நெய் போன்ற சாதாரணமான பொருட்களையே  அன்பளிப்புச் செய்வார்கள்.  அரசரின் அந்தப்புரத்திலும் கஜானாவிலும் இவர்கள் வழங்குவதை விட சிறந்தவை ஏராளமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் கொண்டு வருவார்கள்.  அரசரின் பிறந்த நாள், பதவியேற்ற நாள் போன்ற சிறப்புக்குரிய நாட்களில் ஊர் மக்கள் அனைவரும் வரிசையாக வந்து இவ்வாறு அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம்.   அரசர் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமர்ந்திருப்பார். பொதுமக்கள் ஒவ்வொருவராக முன்வந்து ஸலாம் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு தம் அன்பளிப்பு பொருட்களை சமர்ப்பிப்பார்கள்.   அரசர் அவை அனைத்தின் மீதும் தன் வலது கரத்தை வைத்து அதை ஏற்றுக் கொண்டதாகக் கூறுவார். பின்னர் அவரிடமே அந்தப் பொருளை கொடுத்து, "தாங்களே எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லுவார்; அவர்கள் அதை எடுத்துச் சென்...

நோன்பு நோற்ற பிறகு தான் இஸ்லாமியர்களின் இரண்டு பெருநாளும்.....

Image
நோன்பு நோற்ற பிறகு தான்  இஸ்லாமியர்களின் இரண்டு பெருநாளும்..... ================================== அரஃபா நோன்பில் உள்ள ஆன்மீகம்  ÷÷÷÷÷÷÷÷÷÷÷===========÷÷÷÷÷÷÷÷÷÷÷ ரமலான் மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது அரஃபா நோன்பு! அதைப்போல் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நாட்கள் ! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் நற்காரியங்கள் செய்வது மிகவும் விருப்பமானது ;  இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் (விருப்பமானதாக) இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?” என்று கேட்க, “ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட ;  ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர“ என்று  கூறினார்கள். ந...