Posts

Showing posts from August, 2024

நபி (ஸல்) அவர்களின் புகழ் எவ்வளவு பரவி இருக்கிறது?

Image
நபி (ஸல்) அவர்களின் புகழ்  எவ்வளவு பரவி இருக்கிறது? =⁠_⁠==⁠_⁠==⁠_⁠==⁠_⁠==⁠_⁠==⁠_⁠==⁠_⁠==⁠_⁠= وقال محمد بن إسحاق : عن يزيد بن رومان قال : كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول : دعوه ، فإنه رجل أبتر لا عقب له ، فإذا هلك انقطع ذكره . நபி (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்ட போது ஆஸ் பின் வாயில் என்பவன் கூறினான். அவரை விடுங்கள்; அவர் சந்ததி அற்ற மனிதர்; அவருக்கு எதிர்காலமே இல்லை; அவர் இறந்து போனால் அவரைப் பற்றி பேச யாருமே இருக்க மாட்டார்கள்.  நூல்: தஃப்ஸீர் தப்ரீ  இப்படி சொன்னவனுக்கு பதில் அளிக்கும் விதமாக சில வரிகள்.  வளர்ப்புத் தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு பருவத்தையும் புகழ்ந்துப் பேசி வந்தார்கள்.  இளைஞராக இருந்தபோது குடும்பத்தினர் பேசிய புகழ் வார்த்தைகள் அனைத்தும் அவருக்கு உரியது தான் என அவரின் செய்கைகளை கண்டு ஊர் மக்கள் ஒப்பு கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தன் நடத்தையை மென்மேலும் அழகு படுத்திக் கொண்டே சென்றதால் அவர்களின் புகழும் ஓங்கியது. சிறுவராக, இளைஞராக, ஆடு மேய்ப்பாளராக, வியாபாரியாக, கணவனாக...

நபிகள் நாயகம் குறித்து ஒரு நபியின் வாக்குமூலம்

Image
நபிகள் நாயகம் குறித்து ஒரு  நபியின் வாக்குமூலம் ×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷ வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உயர்ந்தோன் அல்லாஹ் இஸ்ர வேலர்களின் நபிமார்களில் ஒருவரான ஷஅயா (அலை) அவர்களுக்கு (ஏசாயா) இறையறிவிப்பு' (வஹீ) வழங்கும்போது, "நீர் உம்முடைய இஸ்ரவேலர் சமுதாயத்தாரிடையே எழுந்து நிற்பீராக நான் . நான் உமது நாவை 'வஹீ' மூலம் பேசச்செய்கிறேன்" என்று கூறினான்.  (அவர் அவ்வாறே செய்ய, அவர் வழியாக இறைவன் பின்வருமாறு பேசினான்:) நான் எழுத வாசிக்கத் தெரியாத மக்களில் ஒருவரை நபியாக அனுப்பவுள்ளேன். அவர் கடின சித்தம் கொண்டவராகவோ முரடராகவோ கடைவீதிகளில் கூச்சலிடுபவராகவோ இருக்கமாட்டார். அவர் (எரியும்) விளக்குக்கு அருகில் நடந்து சென்றாலும் அவரது அமைதியால் விளக்கு (காற்றில்) அணைந்துவிடாது. அவர் மூங்கில் மேல் நடந்தாலும் அவருடைய காலடி களுக்குக் கீழேயிருந்து ஓசை எழாது. அவரை நான் நற்செய்தியாளராக வும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்புவேன். நெறி பிறழ்ந்த எதையும் அவர் மொழியமாட்டார்.  அவர்மூலம் நான் குருட்டுக் கண்களையும் செவிட்டுக் காதுகளையும் மூடிய உள்ளங்களையும் திறப்பேன்.  ஒவ...

ஆன்மீக ஒளிபரப்பிய நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) 145 - 208

Image
ஆன்மீக ஒளிபரப்பிய நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) 145 - 208 ****************************************** ஹுசைன் (ரலி) அவர்களின் சந்ததியில் ஹசன் அன்வர் (ரஹ்) அவர்களின் மகளாக நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 145 ரபியுல் அவ்வல் பிறை 11 இல் மக்காவில் பிறந்தார்கள். மதீனாவில் வளர்ந்தார்கள். மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியில் உள்ள பேராசிரியர்களிடம் திருக்குர்ஆனை மனனம் செய்தார்கள். அங்கே இருந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் 'முஅத்தா' நூல் மற்றும் ஹதீஸ் கலையை கற்றுத் தேறினார்கள். இவர்கள் பெற்றிருந்த கல்விக்கு எல்லையே இல்லை. மாபெரும் கல்வியாளராக ஆனார்கள். இவர்களுடைய கல்வி அறிவை அறிந்தவர்கள் 'நஃபீஸத்துல் உலூம் -  கல்வித் தாய்' என்று அழைத்தனர். இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பேரன் இஸ்ஹாக் பின் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களிடமிருந்து தஸவ்வுஃப் கலையை கற்றார்கள். இவர்களுக்கு 'காசிம்' என்ற ஒரு ஆண்மகனும் 'உம்மு குல்சூம்' என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.  பின்னர் இவர்கள் தன் முழு நேரத்தையும் கல்வி வளர்ச்சிக்காகவும், மக்கள...

ஒற்றைச் சொல்லால் உருகுளைந்த குடும்பங்கள்

Image
ஒற்றைச் சொல்லால்  உருகுளைந்த குடும்பங்கள் : `•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`• தொடர்ச்சி .......6 அபூ லஹபும்  அவனது குடும்பமும் : ===================== அபூ லஹப் என்பவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர் உத்பா, முஅத்தப், உதைபா மற்றும் மூன்று பெண் மக்களும் இருந்தனர்.  நபி (ஸல்) அவர்களின் மகளை திருமணம் செய்து இருந்த உதைபாவை சிங்கம் கடித்து சாகடித்தது. தந்தை அபூ லஹப் இருக்கும்போதே மகன் இறை மறுப்பாளனாகவே இறந்து விட்டான். உத்பா, முஅத்தப் ஆகிய இருவரும் ஃபதஹ் மக்காவிற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அபூ லஹபிற்கு மூன்று பெண் மக்கள் இருந்தனர். துர்ரா, ஸபீஆ ஆகிய இருவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். தந்தை இருக்கும்போதே உஜ்ஜா என்பவர் இறை மறுப்பாளராக இருந்து விட்டாள். அபூ ஜஹலும்  அவனதுகுடும்பமும் : =================== அபூ ஜஹலுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அபூ ஜஹல் பத்ர் போரில் கொலை செய்யப்பட்டான். இவனுக்கு மூன்று ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் பிறந்தனர்.  அபூ ஹாஜிப், அபூ அல்கமா என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். இவ்விருவருக்கும் கு...

நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?

Image
நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் அனைவரும் இறந்தது ஏன்?  •~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~×~• அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைவரும் மரணித்தார்கள் என்பதே உண்மை. இதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை என்பதே உண்மை. பொதுவாகவே அரபியர்கள் தமக்கு ஆண் பிள்ளைகள் இருப்பது பெருமை என்றும், பலம் என்றும், சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தித் தரும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதில் உறுதியாகவும் இருந்தார்கள்.  ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகளே இல்லாமல், சமூகத்தில் அந்தஸ்தையும், மரியாதையையும் வழங்கி அல்லாஹ்  கௌரவப்படுத்தி இருக்கின்றான்.  பொதுவாகவே அல்லாஹ்வின் வல்லமை என்னவென்றால், எதை மனிதர்கள் மதிக்கிறார்களோ அது இல்லாமலே அல்லாஹ் மதிப்பையோ அந்த தேவையையோ நிறைவேற்றி விடுவான். உதாரணமாக கன்தக் -  அகல் யுத்தத்தில் இரண்டு மூன்று நபர்கள் சாப்பிடும் அளவிற்கு இருந்த பாதாம் பிஸ்தா பேரித்தம் பழம் போன்றவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் கையை வைத்து துஆ செய்த பிறகு அந்த துணியில் கிடந்த nuts - நட்ஸ்களை  பல நூறு பேர் சாப்பிட்டார்கள். அதைப்போல் ஜாபிர் (ரலி) அவர்கள் ஐந்தாறு பேருக்கு சமைத...

நான் எழுதிய நூல்கள்

Image
ஆசிரியரின் பிற நூல்கள் : 1.புண்ணியம் பூத்திடும் புனித ரமளான் 2. ஹதீஸ் குத்ஸீ 3. பூமான் நபி மீது பொழிவோம் ஸலவாத்  4. மதீனா வரலாறு 5. மக்கா வரலாறு 6. ஆன்மிக மருத்துவம் 7. அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? 8. கல்புல் குர்ஆன் (யாஸீன் ஸூறா விளக்கவுரை) 9. தொழுகை முறையும் தொழுகையில் நிகழும் தவறுகளும் 10. நபிகளாரும் நாமும் (நபிகள் நாயகத்தின் வரலாறு) 11. ஜகாத் ஏன்? எதற்கு? எப்படி? 12. சொர்க்கம் நரகம் (இறந்தவர்களின் இல்லம்)  13. திரு நபியின் தேன் துளிகள் (பாகம்-1) 14. உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி? 15. ஈன்ற தாய் 16. தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் (பாகம்-1) 17. திருநபியின் தேன் துளிகள் (பாகம்-2)  18. அனைத்து நோய்களுக்கும் மாநபி மருத்துவம் 19. அன்ஸருள் வளாயிஃப் 20. நபிநேசம் நம்சுவாசம் 21. கவலை எனும் வலை  22. மகளிர் மகிமை 23. மாபெரும் ஞானி மஹ்பூப் சுபுஹானி 24. அல்குர்ஆனின் அற்புதங்கள் 25. ஹஜ் & உம்ரா விளக்க ஆவணப்படம் (CD) 26. அருள் வழங்கும் ஆயத்துல் குர்ஸி 27. திருமறைக் கூறும் திருமண வாழ்வு  28. P.S.P. ஹளரத் அவர்களின் ஆன்மீக அறிவுரைகள் 29. முனாஜாதே ஹனீஃபா 30. நபிமார்களின...

நபியே ! நீங்கள் இல்லை அவர்கள்தான்......!

Image
நபியே ! நீங்கள் இல்லை  அவர்கள்தான்......! ÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷ தொடர்ச்சி.....4 إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ எனும் இந்த வசனம் மட்டும் மக்காவில் அருளப்பட்டது. மற்ற இரண்டு வசனங்களும் மதீனாவில் அருளப்பட்டது. 'சந்ததியற்றவர்' எனும் சொல் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் மனதை மிகப்பெரும் அளவில் பாதித்தது. மனம் காயப்பட்டு இருந்தது.  காயம்பட்ட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவே முதல் இரண்டு வசனங்களை அல்லாஹ் மதீனாவில் அருளினான். அதனால் நபி (ஸல்)  அவர்கள் ஓரளவு ஆறுதலும் அடைந்தார்கள். அதே சமயம் மதீனாவில் அன்னை மாரியா கிப்தியா (ரலி) அவர்கள் மூலம் இப்ராஹிம் (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மகனாகப் பிறந்தார்கள்.  அதனால் நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அந்த வார்த்தையின் நினைவில் இருந்து வெளிவந்து சந்தோசமாக வாழ்தார்கள். நபிகளாரை சோதிக்கும் விதமாக அல்லாஹ் மீண்டும் இப்ராஹிம் (ரலி) அவர்களையும் தன்னளவில் அழைத்துக் கொண்டான். அதனால் மக்கா இறை மறுப்பாளர்கள் சொன்னதை நினைத்து நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார்கள். ### ஜுர்ஜானீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். இந...

இலக்கணம் மாறாமல் இறைவன் திட்டினான்

Image
இலக்கணம் மாறாமல்  இறைவன் திட்டினான் : •°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•° தொடர்ச்சி  : .....3    إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; மதீனாவைச் சேர்ந்த கஅப் பின் அஷ்ரஃப்  அவர்கள் மக்காவிற்கு வந்திருந்த போது குரைஷியர்கள் "நீங்கள் மதீனாவில் உள்ள மனிதர்களில் சிறந்தவர்; அவர்களின் தலைவரும் கூட" என்று கூறினார்கள். அதற்கு கஅப் பின் அஷ்ரஃப் " ஆமாம் உண்மைதான்" என்று கூறினார்.  குரைஷிகள் " அவர் ஒரு புடை கட்டை ( வாழை மரத்தின் வேரிலிருந்து துளிரும் புடை கட்டைகள் எந்தப் பயனும் இல்லாதது; அதை வீணாகவே வெட்டி எறிவார்கள்;) தன் கூட்டத்தில் சந்ததி இல்லாத ஒரே மனிதர்; அவர் நம்மை விட சிறந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்; நாங்கள் தான் சிறந்தவர்கள்,  தோட்டம் துறவு உள்ளவர்கள்; கஅபே! நீங்கள் தான் அவரை விட சிறந்தவர்" என்று கூறினார்கள். அப்பொழுதுதான் "நபியே! உங்களை வெறுப்பவர்களே சந்ததியற்றவர் ஆவார்" எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்: நஸாயீ , இப்னு ஹப்பான். அதாவு பின் அபீ ரபாஹா (ரலி) அவர்கள் கூறுவதாவது; இந்த வசனம் அபூ லஹப் குறித்...

ஆதம் (அலை) வாழ்வியலில் ஆன்மிக நெறிகள்

Image
ஆதம் (அலை) வாழ்வியலில்  ஆன்மிக நெறிகள் _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_ மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு பூமியில் 18000 உயிரினங்கள் மிகப்பெரிய தோற்றத்தில் இருந்தது. அவற்றில் ஒன்றுதான் ஜின். அதன் சந்ததியில் வந்தவன் தான் இப்லீஸ். சுமார் 6,36,000 ஆண்டுகள் இப்லீஸ் இறைவனை வணங்கி வந்தான். அதனால் அனைத்து வானவர்களும் அவன் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள். வானவர்கள் அனைவருக்கும் அவன் பேராசனாக இருந்தான். இந்நிலையில் தான் இறைவன் தன் கலீஃபா - பிரதிநிதியாக ஆதம் (அலை) அவர்களை படைக்க வேண்டும் என உத்தேசித்து வானவர்களை அழைத்தான். "வானவர்களே! ஆதம் (அலை) அவர்களின் உருவத்தை மண்ணினால் உருவாக்க வேண்டும்; அதற்காக பூமியில் உள்ள மிருதுவான, கெட்டியான, கருப்பு மற்றும் மஞ்சள் நிற மண்ணைக் கொண்டு வந்து தண்ணீர் விட்டு பிசைந்து மனித உருவத்தில் உருவாக்க வேண்டும்; அதை விரைந்து செய்து முடியுங்கள். அவர் படைக்கப்பட்டு உயிர் பெற்று எழுந்து அமர்ந்ததும் அவருக்கு நீங்கள் ஸஜிதா  - மரியாதை செலுத்த வேண்டும்" என்று கூறினான். இச்செய்தி இப்லீஸை சென்றடைந்தது. அவன் மிகவும் கவலைப்பட்டான். வானவர்களை ஆதம்...

முதல் மனிதரும் நான்கு வகை மனிதர்களும்

Image
முதல் மனிதரும்  நான்கு வகை மனிதர்களும் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= மனித இனத்தின் தோற்றம் பற்றி மனிதனைப் படைத்தவன் சொல்வதை ஏற்பதுதான் சரியான தீர்வாகும்.  முதல் மனிதனின் வரலாறு நிச்சயமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது.  எனவே, வேத வழிகாட்டல் இல்லாவிட்டால் மனித இனத்தின் தோற்றம் குறித்து வெறும் யூகங்களை மட்டுமே செய்ய முடியும். முதல் மனிதன் குறித்து குர்ஆன் : =÷=÷=÷=÷=÷=÷÷÷=÷=÷=÷=÷=÷=÷=÷= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்;  அவன் உங்கள் அனைவரையும் ஒரே மனிதரில் இருந்து படைத்தான்;  அந்த ஒரு மனிதரில் இருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;  பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;  ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;  உங்களுக்கிடையே நீங்கள் யார் பெயர் சொல்லி (உதவி) கேட்பீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த பந்த உறவுகளை (முறிப்பதையும்) அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.  4 : 1 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذ...

அண்ணலாருக்காக அல்லாஹ் பேசிய வார்த்தை அப்தர்

Image
அண்ணலருக்காக  அல்லாஹ் பேசிய வார்த்தை  அப்தர்.... =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷  தொடர்ச்சி ....2 إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ  நபியே! உம்மை வெறுப்பவரே  சந்ததி அற்றவர் மக்காவில் நபி (ஸல்) அவர்கள் ஓர் இறை கோட்பாட்டை முன்மொழிந்ததும் கருத்தியல் அடிப்படையிலான எதிரிகள் அதிகரித்தார்கள்.  அதனால் முஸ்லிம்களுக்கோ நபி (ஸல்) அவர்களுக்கோ ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு , மீள முடியாத நெடுந் துயரங்கள் ஏற்பட்டால் எதிரிகளான இறை மறுப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். அப்படி அவர்கள் சந்தோஷப்பட்டு சொன்ன ஒரு வார்த்தை தான் அப்தர் -  நபியே! நீர் சந்ததி இல்லாதவர். பொதுவாகவே அரபியர்களிடம் பதர் -  சந்ததியற்றவன் நாதியற்றவன் எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்தது.  ஆகக் கீழ்த்தரமாக, கேவலமாக ஒருவரைச் சாடவே அரபியர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்தார்கள்.  இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நபிகளார் மீது பயன்படுத்தியதால் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.  எதிரிகள் திட்டிய நேரம், காலம் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது ‌. நபி (ஸல்) அவர்களுக்கு அந்த சூழல் எதிராக இரு...

இவன் கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்

Image
இவன், கொள்கைக்கு வாரிசு இல்லாதவன்  =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ  நபியே! உங்களை வெறுப்பவனே சந்ததியற்றவன் .... திருக்குர்ஆனுடைய அத்தியாயங்களில் ஆகச்சிறிய அத்தியாயம் அல் கவ்ஸர். இதில் மூன்று வசனங்கள் இருக்கின்றது. மூன்று வசனங்களும் மூன்று வகையான கருத்துக்களைப் பேசுகிறது.  மூன்றாவது வசனம் தான் இது! இந்த வசனத்தின் விளக்கங்களை விரிவாக காண்போம். இந்த வசனம் ஆஸ் பின் வாயில் என்பவன் குறித்து அருளப்பட்டுள்ளது. இவர் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவர். யாருக்கும் தோன்றிடாத சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர். அறிவாளியாக இருந்ததனாலதானோ என்னவோ இவருக்கு இஸ்லாம் ஆகும் பாக்கியம் கிடைக்கவில்லை. அபுல் ஹிகம் எனும் அபூலஹபைப் போல! ஷைத்தானை போல! நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் விவரம்:  அல்-காசிம் பின் முஹம்மது 598–601 ஜைனப் பின்த் முஹம்மது 599–629 ருகாயா பின்த் முஹம்மது 601–624 உம்மு குல்தும் பின்த் முஹம்மது 603–630 பாத்திமா பின்த் முஹம்மது 605/15–632 அப்துல்லா பின் முஹம்மது 611–615 நபி (ஸல்) அவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும், இறுத...

அல்லாஹ்வை நாம் வணங்குவதால், அல்லாஹ்விற்கு (பவர்) அதிகாரம் அதிகரிக்குமா?

Image
அல்லாஹ்வை  நாம் வணங்குவதால், அல்லாஹ்விற்கு (பவர்) அதிகாரம் அதிகரிக்குமா? ^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^ عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ - رضي الله عنه - عَنْ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى، أَنَّهُ قَالَ: يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنكُمْ؛ ما زَادَ ذلكَ في مُلْكِي شيئًا،. رواه البخاري ومسلم அபூ தர்ருல் கிஃபாரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என் அடியார்களே! உங்களில் ஆதிகாலத்தவர்களும் கடைசி காலத்தவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும் சேர்ந்து உங்களில் இறையச்சமுள்ள ஒரு மனிதனின் இதயத்தைப் பெற்றவர்களாக இருப்பினும் அதனால் என் ஆட்சி அதிகாரத்தில் எதுவும் அதிகமாகிவிடப் போவதில்லை.  நூல் : புகாரி, முஸ்லிம். "அதாவது மனிதர்களுடைய மற்றும் ஜின்களுடைய இதயம் முழுவதும் ஈமானால் நிரம்பி இருப்பதால்,  முழுமையாக இறைவனுக்கு கட்டுப்பட்ட அடியானாக இருந்து நற்செயல்கள் செய்வ...

உண்மையே உன் விலை என்ன?

Image
உண்மையே  உன் விலை என்ன?  •^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^•^• 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உத்திரப்பிரதேசம் முஸஃபர் நகர் மாவட்டத்தில் காந்தலா என்றொரு ஊர் இருந்தது. இந்த ஊர் இன்று ஹரியானா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.  இந்த ஊரில் முஸ்லிம்களும், இந்துக்களும் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஊரில் உள்ள ஒரு இடத்தை இந்துக்களும், முஸ்லிம்களும் 'தமக்கான வணக்கத்தளம்' என வாதிட்டு வந்தார்கள். அதனால் இரு சாராரிடையே கலவரம் மூலும் சூழல் ஏற்பட்டது.  இதனை அறிந்த ஆங்கிலேய அரசாங்கம் அப்பகுதியின் கலெக்டரை அனுப்பி வைத்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி சொல்லி அனுப்பியது.  இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்த கலெக்டர் அவர்கள் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. இரு தரப்பினரும் அந்த ஒரு இடம் எங்களுக்கே உரியது என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால் இரு சாராரிடமும், "அந்த இடம் தமக்கானது" என்பதற்கு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை.  இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் ஆங்கிலேய கலெக்டர் மிகவும் செய்வதறியாது திணறினார். இந்நிலையில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.  இ...

78வது சுதந்திர தினம்

Image
78வது சுதந்திர தினம் : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷ இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் சாதியினருக்கும் குறிப்பிட்ட ஒரு நாளில் பண்டிகைகள் இருக்கின்றது.  அந்த நாட்களில் அவரவர் பண்டிகைகளை அனைவரும் திரளாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி அவரவர் ஊர்களில் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.  அதை சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பார்த்தும், படித்தும் வருகிறோம். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இந்தியர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் ஒன்று கூடி மிக ஆரவாரமாக கொண்டாட வேண்டிய தேசியத் திருவிழா ஆகஸ்ட் 15. ஆனால் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாம் தூரமாக ஆகிவிட்டதாலோ என்னவோ  (78 வருடங்கள் கடந்து விட்டது ) அந்த நாளின் மீது மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை!  சுதந்திர நாள் விடுமுறை நாளாகவும், அரசும், அரசு அலுவலகங்களும் விழா நடத்தும் நாளாகவும் மட்டுமே இன்று மக்களால் பார்க்கப்படுகிறது.  இதற்குக் காரணம் என்ன?

அபூ பக்ர் ரலி அவர்களின் அழகிய அறிவுரை!!

Image
அபூ பக்ர் (ரலி) அவர்களின்  அழகிய அறிவுரை ...................!! ^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~ அப்துல்லாஹ் பின் அபூபக்ர் பின் முஹம்மது பின் அம்ரு பின் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது;  அபூபக்ர் (ரலி) அவர்கள் ஷாம் செல்லும் 3000 பேர் கொண்ட படையினரை ஒன்று கூட்டினார்கள். படையினர் மதீனாவிலிருந்து வெளியேறிய போது  அவர்களில் அதிகமானவர்கள் முஹாஜிர்களும், அன்சாரிகளும் இருந்தனர்.  படை புறப்பட்டுச் செல்லும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அம்ரு பின் ஆஸ் (ரலி ) அவர்களின் வாகனத்திற்கு அருகில் நடந்து கொண்டு  கூறினார்கள். "அம்ரே! படையினரை அய்லா எனும் ஊர் வழியாக ஃபாலஸ்தீன் அழைத்துச் செல்லுங்கள்; தனிமையிலும் மக்களோடு இருக்கும் போதும் அல்லாஹ்வை பயந்த கொள்ளுங்கள்! மேலும் அவனுக்கு முன்பு வெட்கப்படுங்கள்! ஏனெனில் அவன் உங்களையும் உங்கள் செயல்களையும் பார்க்கின்றான்.  மேலும் யார் உங்களை விட இஸ்லாத்தில் முந்தியவர்களாகவும், பழையவர்களாகவும், உங்களை விட இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும், பயனளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களை விட உங்களை அமீர் - தளபதி பொறுப்புக்கு நான் முற்...

நபிப் புகழை அளவிட முடியாமல் அறிவுத் திணறுகிறது

Image
நபிப் புகழை  அளவிட முடியாமல்  அறிவுத் திணறுகிறது : ^÷^÷^÷^÷^÷^÷^÷^×^÷^÷^÷^÷^÷ காயல்பட்டினம்  சதக்கத்துல்லா அப்பா  அவர்கள் இயற்றிய  'கஸீதத்துல் வித்ரியா' வில் இருந்து  ஒரு கவிதை  நபியே  தங்களின் புகழை  அளவிட முடியாமல்  எங்கள் அறிவுத் திணறுகிறது!  நபியே!  உங்களைப் புகழ்வதால்  எங்களின் அநீதிகளும் , பாவங்களும் அழிகிறது! ஒளிரும் பேரொளியே!  செல்வங்களின் நிலைக்கலனே!  நீங்கள்  என் அச்சத்தை அகற்றி விட்டீர்!  நேர்வழியின் தலைமையே ! பகைமையின் நஞ்சே!  தேவைகளைத் தரும்  அருள் நிலையமே!  ஒட்டுமொத்த நன்மைகளின் களஞ்சியமே!  (மறுமையில் )  எங்களுக்கு நேர இருந்த நாசம்  உங்களால் விலகுகிறது!  அதுவே எங்களுக்குப் போதுமானது!

இவர்களே இப்படி என்றால்.....

Image
இவர்களே இப்படி என்றால்... =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; வானிலிருந்து ஓர் அழைப்பாளர், "மக்களே! நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்வீர்; ஆனால் ஒருவரை தவிர' என்று சொல்லப்பட்டால் அது நானாக இருக்குமோ என்று அச்சப்படுகிறேன்.  அதே சமயம் வானில் இருந்து ஒர் அழைப்பாளர், 'மக்களே! நீங்கள் அனைவரும் நரகம் செல்வீர்; ஒரு மனிதரைத் தவிர' என்று சொல்லப்பட்டால் அது நானாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்" எனக் கூறுவார்கள். நூல் : அல் ஹுல்யதுல் அவ்லியா

குர்ஆன் முழுவதிலும் எத்தனை வகையானச் செய்திகள் இடம் பெற்றுள்ளது?

Image
குர்ஆன் முழுவதிலும் எத்தனைச் வகையான செய்திகள் இடம் பெற்றுள்ளது?  =^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^=^ காழி அபூ பக்ர் பின் அரபி (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள். 1. தவ்ஹீத்: படைத்தவனின் பண்புகள், அவனைப் பற்றிய தாத் -  உள்ளமைகள், அவனுடைய செயல்பாடுகள், மற்றும் படைப்பினங்களைப் பற்றிய புரிதல்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.  உதாரணமாக ஒரு வசனம் ; உங்களுடைய இறைவன் ஒருவனே! 2 : 163 2. தந்கீர் : எச்சரிக்கைகள், உபதேசங்கள், சொர்க்கம், நரகம் , பகிரங்கமான மற்றும்  மறைமுகமான பல்வேறு தகவல்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. நீர் (தொடர்ந்து) நல் உபதேசம் செய்து வருவீராக! நிச்சயமாக இறை நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசம் பயனளிக்கவே செய்யும். 51: 55 3. அஹ்காம்:  ஏவல், விலக்கல், ஆகுமானவைகள், நிர்பந்தத்தில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள், பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் என பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ் இறக்கிய குர்ஆனை கொண்டு அவர்களுக்கு இடையே நபியே நீர் தீர்ப்பு வழங்குவீராக! 5 : 49 குல்ஹுவல்லாஹு அஹது சூரா திருக்குர்ஆனில் மூன்றில் ...