முதல் மனிதரும் நான்கு வகை மனிதர்களும்

முதல் மனிதரும் 
நான்கு வகை மனிதர்களும் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

மனித இனத்தின் தோற்றம் பற்றி மனிதனைப் படைத்தவன் சொல்வதை ஏற்பதுதான் சரியான தீர்வாகும். 

முதல் மனிதனின் வரலாறு நிச்சயமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது. 

எனவே, வேத வழிகாட்டல் இல்லாவிட்டால் மனித இனத்தின் தோற்றம் குறித்து வெறும் யூகங்களை மட்டுமே செய்ய முடியும்.

முதல் மனிதன் குறித்து குர்ஆன் :
=÷=÷=÷=÷=÷=÷÷÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்; 

அவன் உங்கள் அனைவரையும் ஒரே மனிதரில் இருந்து படைத்தான்; 

அந்த ஒரு மனிதரில் இருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; 

பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; 

ஆகவே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; 

உங்களுக்கிடையே நீங்கள் யார் பெயர் சொல்லி (உதவி) கேட்பீர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்த பந்த உறவுகளை (முறிப்பதையும்) அஞ்சிக் கொள்ளுங்கள்;

நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கின்றான். 

4 : 1

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரே ஆண்,  பெண்ணிலிருந்தே படைத்தள்ளோம்; 

நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக,  உங்களைப் பல கிளைகளாகவும், குடும்பங்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம்;  

நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களே அல்லாஹ்விடம் அதிக கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர்;  

நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும், (யாவற்றையும்) தெரிந்தவனும் ஆவான்.   49: 13

இரண்டு வசனங்களின் கருத்து:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷÷

ஆதம் அலை அவர்களை அல்லாஹ் தன் கைகளால் படைத்தான். 

ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்.

ஆதம் ஹவ்வா என்ற ஆண் பெண்ணிலிருந்து ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ்வே படைக்கின்றான். 

ஆதம் (அலை) அவர்களின் குடும்பம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

ஆதம் (அலை) அவர்கள் 930 வருடங்கள் வாழ்ந்தார்கள். ஹவ்வா (அலை) அவர்கள் 931 வருடங்கள் வாழ்ந்தார்கள். 

அந்த இல்லற வாழ்வில் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை ஒன்று என கர்ப்பமுற்று 120 சூலில் 220 குழந்தைகளை ஹவ்வா (அலை) அவர்கள் பெற்றெடுத்தார்கள்.

முதல் சூலில் பிறந்த குழந்தை காபில் / கலிமா. இரண்டாவது சூலில் பிறந்த குழந்தை ஹாபில் / லபூதா. மூன்றாவது சூலில் பிறந்தவர் ஷீத் (அலை) அவர்கள்.

கடைசி சூலில் பிறந்த குழந்தை அப்துல் முகீஸ் / உம்முல் முகீஸ்.

காபில் விவசாயம் செய்து வந்தார். ஹாபில் கால்நடை பண்ணை வைத்திருந்தார். இந்நிலையில் ஹாபில் காபிலை கொலை செய்தார். 

காபிலோடு பிறந்த கலிமாவை வேறு யாரும் திருமணம் செய்து கொண்டார்களா? அல்லது திருமணம் செய்யாமலே வாழ்ந்தாரா என்பது குறித்த எந்த தகவலும் வரலாற்றில் காணப்படவில்லை.

ஆதம் (அலை) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் பிள்ளைகள் மூலம் பேரன் பேத்திகள் என  நான்கு லட்சம் பேர் பிறந்திருந்தார்கள். 

ஆதம் (அலை) அவர்கள் இறப்பதற்கு முன்பு காபிலை தவிர வேறு யாரும் மரணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்கு வகை மனித இனம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

மனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

மங்கோலிய இனம் (Mongoloids)
காக்கேசியஸ் இனம் (Caucasoid)
நீக்ரோ இனம் (Negroids)
ஹோமோ லாங்கி ( Homo Longi)

இதைத்தான் திருக்குர்ஆன் 

وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌

"நீங்கள் ஒருவர் ஒருவரை அறிந்து கொள்வதற்காக உங்களை பல கிளைகளாகவும், குடும்பங்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம்" என்று கூறுகிறது.

கிடைக்குள் வரும் ஆடுகளில் தன் தாயை அறிந்து குட்டிகள் அதன் மடுவில் வாயை வைப்பது போல மனிதனும் ஒரு மனிதனின் தோற்றத்தை பார்த்து இவன் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொள்கிறான். 

இப்படி அறிந்து கொள்வதற்காகத்தான் இறைவன் மனித இனத்தை நான்கு வகைகளாக பிரித்து வைத்திருக்கின்றான்.

நூஹ் )அலை) அவர்கள் காலத்திற்கு முன்பாக மனித இனம் ஆறு வகைகளாக இருந்தது. 

பின்னர் நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு அதில் இரண்டு இனங்களை இறைவன் இல்லாமல் ஆக்கிவிட்டான். 

இப்பொழுதுள்ள 800 கோடி மக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தால், அவர்கள் அனைவரையும் நான்கு இரத்த வகைகளில் மட்டுமே பிரித்து காண முடியும்.

ஆதம் (அலை) அவர்கள் 60 முழம்  இருந்திருந்தால் அவர்களின் உயரத்திற்கு எவ்வளவு பெரிய அபா தைக்க வேண்டும் என நினைத்து தைக்கப்பட்ட ஒரு ஆடை தான் நீங்கள் காண்பது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்