ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்.....
ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால்..... மன அழுத்தத்தின் காரணமாகவோ மனநிலை சரியில்லாத நிலையில் இருந்தோ அல்லது எந்த காரணமும் இல்லாமல் வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரும் பாவச் செயலாகும். وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا உங்களை நீங்களே (தர்) கொலை செய்து கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகப்பெரும் கருணையாளனாக இருக்கின்றான் 4: 29 இந்த வசனத்தின் அடிப்படையிலும் மற்றும் பல நபி மொழிகளின் அடிப்படையிலும் தற்கொலைச் செய்து கொள்ளவும், கருணைக் கொலை செய்யவும் மார்க்கத்தில் அனுமதி இல்லை. அது ஹராம் - ஆகாதச் செயலாகும். ஒரு முஸ்லிம் தற்கொலைச் செய்துகொண்டு இறந்து விட்டால், அவருக்கு ஜனாஸா தொழுகை மற்றும் ஈஸால் ஸவாப் - நன்மையை எத்தி வைக்கும் அமல்கள் செய்வது கூடுமா? وقال الحسن والنخعي وقتادة ومالك وأبو حنيفة والشافعي وجماهير العلماء يصلى عليه، தற்கொலை செய்து கொண்டவர் அவசரகதியில் தவறான முடிவு எடுத்து இறந்து போய்விட்டார். அவருக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பானோ அதை வழங்குவான். அது கடுமையாகவும்...