நான் இறைவனின் தேர்வு : =÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷= எனது சிறிய தந்தை மர்ஹூம் மௌலானா B. முஹம்மது சுல்தான் ஃபாஜில் தேவ்பந்தி அவர்கள் சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், அரபு தமிழ் அகராதி போன்ற ஆக சிறந்த ஆக்கங்களை அளித்த எனது ஆசிரியர். 1994 இறுதியில் ஷரீஅத்தும் தக்லீதும் எனும் நூலை வெளியீட்டு இருந்தார். அந்த நூலின் விற்பனையாளனாக ஒரு ரமலான் மாதத்தில் திருச்சி நகர் முழுவதும் சுற்றி, அனைத்து பள்ளிவாசல்களிலும் கூவி கூவி விற்பனை செய்தேன். ஒரு ரமலான் மாதம் முழுவதும் திருச்சியில் தங்கியிருந்து இந்தப் பணியை செய்தேன். அன்று நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், அவமானங்கள், நூல்கள் விற்பனையாகாததால் ஏற்பட்ட விரக்தி, பள்ளிகளில் தங்க அனுமதிக்காததால் உண்டான மன அழுத்தம் ஆகியன " நீ எழுத்தாளனாக மட்டும் ஆகிவிடாதே! " என என் மனமும், உடலும் ஒரு சட்டத்தை வகுத்துக் கொண்டது. நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா முதல்வர், எனது ஆசிரியர் மௌலவி முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹள்ரத் அவர்கள் மிஃராஜ் போன்ற சில நூல்களை எழுதி இருக்கிறார்கள். அவற்றையும் நான் விற்பனை செய்து இருக்கிறேன். அந்த நூல்களை விற்ற அனு...