நபிகளார் மீது உச்சகட்ட அன்பு

சூஃபிகளின் ஹஜ் : - 54
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

நபிகளார் மீது 
உச்சகட்ட அன்பு 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜு செய்துவிட்டு மதீனா வந்து மஸ்ஜிதுந் நபவியில் நுழைந்தார்கள். 

அப்பொழுது ஒருவர் சைகையாக அதுதான்  நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த கப்ரு ஷரீப் என சுட்டி காட்டினார். 

உடனே உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள்; 

மூர்ச்சை தெளிந்ததும், "என்னை அழைத்துச் செல்லுங்கள்; நபி (ஸல்) அவர்கள் இல்லாத இந்த நகரில் நான்  இருப்பதற்கு  மனமில்லை" என்றார்கள்.

மேலும் கீழ்க்கண்டவாறு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அழைத்து செல்லப்பட்டார்கள்.
 
 لوجِئْتُكُمْ فَاصِدًا أَسْعَى عَلَى بَصَرِي *  لَمْ أَقْضِ حَقَّادَ أَنَّ الْحَقِّ أَدَّيْتُ 
நான் தங்களின் சமூகத்திற்கு
கால்களுக்குப் பதிலாக கண்களால் நடந்து வந்தாலும், தங்களுக்கு நன்றிக் கடனைச் செலுத்தியவனாக  ஆகமாட்டேன். 

என் தலைவரே! தங்களுக்கு வேறு எந்த நன்றிக் கடனை நான் முறையாக நிறைவேற்றி இருக்கிறேன் ; இதனை (ஜியாரத்தை) மட்டும் நிறைவேற்றுவதற்கு?

நபி (ஸல்) அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் இவ்வாறு கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வற்கு ஆவலாக இருக்க வேண்டும். அவர்களை ஜியாரத்து செய்த பிறகு வருத்தத்தோடு திரும்ப வேண்டும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்