அமெரிக்கா 5 நாள் போர் நிறுத்தம் கேட்பது ஏன்? ================================== "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று பழமொழி சொல்லுவார்கள். அது போலவே அமெரிக்காவின் பொருளாதார அழிவை தடுத்து நிறுத்தவே 5 நாள் அவகாசம் கேட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஹீலியம் கேஸ் என்று ஒன்று உள்ளது. இதைக் கொண்டு ஏ.ஐ. தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும் போர்டுகள், செல்போன் போர்டுகள், சிப்புகள் , எலக்ட்ரானிக் போர்டுகள், மருத்துவ உபகரணங்கள் கருவிகள் போன்றவற்றுக்கு இந்த ஹீலியத்தை பயன்படுத்துவார்கள். அவ்வாறே கேன்சர் பேஷண்டுகளுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த ஹீலியம் கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேஸ் கத்தாரில் 200க்கும் மேற்பட்ட கண்டெய்னரில் கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் , சவுத் கொரியா, இந்தோனேசியா தைவான், ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு சென்றடைய வேண்டும். கத்தார் ரஸ்லபான் என்கிற இடத்திலிருந்து இந்த ஹீலியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக ஹீலியம் உற்பத்தியில் சுமார் 40% கத்...