நான்' மறையும் புனித தருணம்
'நான்' மறையும் புனித தருணம் ================================ நேற்றைய தொடர்ச்சி.....56 மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் ===================================== இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; பகா - அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருக்கும் நிலை குறித்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பகா - அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருக்கும் நிலை என்பது லிகா - அல்லாஹ்வை சந்திக்கும் நேரமாகும். லிகா- அல்லாஹ்வை சந்திக்கும் நேரம் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடும்; அல்லது அதை விடவும் வேகமாக நிகழ்ந்து முடிந்து விடும். அந்த சந்திப்பை பெற்றவர்களுக்கு ஓர் அடையாளம் உண்டு. அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் அங்கு இல்லாமல் போய்விடுவார்கள். அதாவது தான் யார்? தான் எங்கு இருக்கிறோம்? என்பது போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அல்லாஹுவை சந்திக்கிறோம் என்கிற ஒரே மன நிலையில் மட்டுமே இருப்பார்கள். அல்லாஹ்வை நீங்கள் நினைத்தால் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவராக ஆகிறீர். அல்லாஹ் ...