Posts

Showing posts from December, 2025

தங்கையை திருமணம் செய்த அண்ணன்

Image
நபி {ஸல்} அவர்களை  நான் கனவில் பார்த்தேன் <><><><><><><><><><><><><><> மாதம்: 11 தொடர்: 86 துஆ ஒப்புக்கொள்ளப்பட்டது ஏன்? <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> தங்கையை  திருமணம் செய்த அண்ணன் <=><=><=><=><=><=><=><=><=><=><=><=> இப்னு அபீ துன்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;  ஒரு மனிதர் தன் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டார்; அப்பொழுது நபிகளார், "பக்தாத்தில் இன்ன இடத்தில் இன்ன மஜூசி - நெருப்பு வணங்குபவர் இருக்கிறார்; அவரிடம் நீங்கள் சென்று, 'உங்களுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்று சொல்லுங்கள்" எனக் கூறினார்கள். கனவு கண்டவர் கூறுகிறார்; "நான் விழித்த போது, ஒரு நெருப்பு வணங்கியிடம் சென்று நான் எப்படி சொல்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  மறுநாள் இரவும் அதே கனவு வந்தது; மீண்டும் நான் யோசித்தேன்; மூன்றாம் நாள் இரவும் அதே க...

மன்பவுல் அன்வார் ஆலிம்களின் அடிச்சுவடுகள்

Image
  மன்பவுல் அன்வார்  ஆலிம்களின் அடிச்சுவடுகள்  اثار علماء منبع الانوار ===================================== 23/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று மன்பயீ ஆலிம்கள் சங்கமித்த விழாவில் ஒரு நூல் வெளியிடப்பட்டது அதன் பெயர் தான் இன்றைய தலைப்பு. 176 பக்கங்களை கொண்ட இந்த நூல் 12 தலைப்புகளில் காலம் சென்ற பேராசிரியப் பெருந்தகைகள் வரலாறு, மதரஸாவின் வரலாறு, லால்பேட்டை மக்கள் மதரஸாவின் மீதும் மாணவர்கள் மீதும் வைத்திருக்கும் பாசம் குறித்தெல்லாம் இந்த நூலில் விரிவாகப் பேசுகிறது.  இது ஒருவர் எழுதிய புத்தகம் அல்ல! மன்பயீ ஆலிம்களில் பலர் தம் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள்; அவை தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது;  வாங்கி வாசியுங்கள். அட்டை படத்தில் உள்ள செய்தி : ============================== இஸ்லாமிய வரலாற்றில் அரசர்களின் பெயர்களை விட ஆலிம்களின் பெயர்கள்தான் அதிகமாக பதிவாகி இருக்கிறது. ஆலிம்கள் எந்த அரியணையிலும் அமரவில்லை; ஆனால் அனைவருடைய இதயங்களையும் ஆட்சி செய்கிறார்கள்! தலைமுறை தலைமுறையாக குர்ஆனை...

ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் பேசும் மௌன வரலாறு ==================================

Image
ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் பேசும் மௌன வரலாறு  ==================================== வாட்ஸ்அப் காலத்தில் வாசிக்க வேண்டிய ஒரு கடிதம்! இந்தக் கடிதம் எழுதப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது! இந்தக் கடிதம் இரண்டு தலைமுறைகளை தாண்டிய குரல்! ஒவ்வொரு கடிதமும் ஒரு கருத்தை, ஒரு கதையை, அந்தந்த கால வரலாறுகளை, சந்தோசங்களை, சோகங்களை தாங்கி நிற்கும்; அப்படி பல நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஒரு கடிதம் தான் இது.  மேற்கண்ட கடிதத்தில் இருக்கும் செய்தி இதுதான்! ٧٨٦ 8 . 10 . 76  பரங்கிப்பேட்டை .   கணம் மேன்மை தாங்கிய ஹஜ்ரத் கிப்லா நாயிப் நாஜிர் அவர்களுக்கு தங்கள் அன்புள்ள மாணவன் ஷேக் முஹம்மது சுல்தான் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் நலம் நலம் அறிய அவா.... நிற்க ....... நமது ஊர் பையன் விஷயமாக நான் தங்களுக்கு ரமலானில் கடிதம் எழுதி இருந்தேன் ஹீப்ஜு வகுப்பில் சேர்த்து கொள்ளும் படியாக....  அதற்கு தாங்கள் "இடமில்லை" என்று பதில் எழுதி விட்டீர்கள்;  இருப்பினும் நான் தங்களை நேரில் வந்து சந்திக்க நினைத்தபோது எனக்கு உடம்பு கொஞ்சம் சுகக் குறைவு ஏற்பட்டு விட்டது...

ஃபுட்பால் கிரவுண்ட் போல நஞ்சை வயல் .......

Image
ஃபுட்பால் கிரவுண்ட் போல  நஞ்சை வயல் ....... ============================= கைருல் மில்லத் அப்துல்லாஹ்   ஹள்ரத் ரஹ் அவர்கள்  ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ கைருல் மில்லத் அப்துல்லாஹ்  ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்துக் கொண்டு தமது விவசாய நிலத்திற்கு சென்றார்கள். அங்கே வயலின் வரப்புகளில் நடந்து சென்றோம்; நஞ்சை ஓட்டப்பட்டு, சேறு கலக்கப்பட்டு, இலை தலைகள் மிதிக்கப்பட்டு, ஃபுட்பால் கிரவுண்ட் போல் சமமாக பயிர் நடுவதற்கு ஏற்ற நிலையில் நஞ்சை வயல் இருந்தது.  ஹள்ரத் அவர்கள் ஒரு குச்சியின் அடிபாகத்தில் ஒரு பேப்பரை சுருட்டி அதற்கு மேல் மற்றொரு பிளாஸ்டிக் கவரை சுருட்டி நஞ்சை நிலத்திற்கு அடியில் ஊன்றி வைத்தார்கள்.  உடன் சென்றிருந்த நான், "ஹள்ரத் என்ன செய்கிறீர்கள்? எதை  ஊண்டுகிறீர்கள்?" என்று கேட்டேன்.  அதற்கு ஹள்ரத் அவர்கள், "நமக்கு இருப்பது குறைந்த நிலம் தான்! நமக்கு அதிகமான தானியங்கள் தேவைப்படுகிறது; மகசூல் அதிகம் தேவை உடையவர்களாக இருக்கிறோம்;  எனவே இறைவன் மீது நம்பிக்கை வைத்து  أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّا...

மரியம் அலை (மேரி) பிறந்தநாளில் அரங்கேரிய அதிசயங்கள்

Image
மரியம் அலை (மேரி) பிறந்தநாளில்  அரங்கேரிய அதிசயங்கள்  ===================================== ذَٰلِكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ (நபியே!) இவை (இதுவரை யாருக்கும் தெரிந்திடாத) மறைவான செய்திகள்;  இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம்;  யார் மரியமை வளர்ப்பது என்று தீர்மானிப்பதற்காக அவர்கள் தமது பேனாக்களை நதியில் போடும்போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;  அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட போதும் நீர் அங்கு இருக்கவில்லை.  அல்குர்ஆன் 3 : 44 ஃபாலஸ்தீனில் நாசிரா Nazareth எனும் பகுதியில் வாழ்ந்த இம்ரான் என்பவர் ஃபலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின்  நீண்டகால தலைமை இமாமாகவும், மக்களால் மதிக்கப்படுகிறவராகவும், உண்மையாகவே உலகப்பற்று இல்லாத துறவியாகவும் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி ஹன்னா பின்த் ஃபாகூத் .  ஹன்னா அவர்கள், "தமக்கு குழந்தை பிறந்தால் அதை மஸ்ஜிதுல் அக்ஸா இறை இல்லத்திற்கு அன்பளித்து விடுகிறேன்" என நேர்ச்சை செய்து கொண்டார். இ...

மன்பவுல் அன்வாரில் வாரிசு ஆலிம்கள் .............

Image
இமாம் ஷாஃபியீ ( ரஹ்) அவர்கள் எந்த மத்ஹப் ? ========================== மன்பயீ ஆலிம்களை சந்தித்து பேசும்பொழுது சில ஆலிம்கள் கூறிய கருத்துக்கள் என் நெஞ்சைத் தொட்டது; அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  மர்ஹூம் அப்துல் ரப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் பாடத்தில், "இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் எந்த மத்ஹபை சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள்.  நாங்கள் அனைவரும் திரு திரு என முழித்துக் கொண்டிருந்தோம்; எங்களில் ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.  பேச்சுவாக்கில் அந்த பேச்சு மறந்து வேறு பேச்சுகளுக்கு சென்று விட்டோம்; அந்தக் கேள்வியை மறந்தே விட்டோம்.  அந்தப் பாடத்தின் முடிவில் பெல் அடித்த பிறகு நாங்கள் புறப்பட தயாராக இருந்த போது அப்துர் ரப் ஹள்ரத் ரஹ் அவர்கள், "அவர்களை 'முஜ்தஹித்' என்று சொல்ல வேண்டும்" என்று கூறினார்கள். இதனை என்னால் மறக்கவே இயலாது என எனது வகுப்புத் தோழர் ...... கூறினார். °•°•°•°•°•°• மன்பவுல் அன்வாரில்  வாரிசு ஆலிம்கள் ............. ======================== சில வாரிசு உலமாக்களை மதரஸாவில் பார்க்கும் பொழுது மனதிற்கு சந்தோசமாக இருக்கின்ற...

லால்பேட்டை அமானி ஹள்ரத் ரஹ் அவர்கள் கூறினார்கள்; திமுக வெற்றி பெறும்

Image
லால்பேட்டை அமானி ஹள்ரத் ரஹ் அவர்கள் கூறினார்கள்; திமுக வெற்றி பெறும்  ===================================== 1962 ஆம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரியில் மதரஸாவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.  அதில் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு அறிவிப்பு செய்தார்கள்.  இன்று நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தேவ்பந்தில் இருந்து இன்ன ஹள்ரத் அவர்களை அழைத்து இருந்தோம்; கடிதத்தில் அவர்கள் வருவதாக சொல்லி இருந்தார்கள்;  அதனால் அவர்கள் வந்து செல்வதற்குத் தேவையான பணத்தை மணியாடர் மூலம் சில மாதங்களுக்கு முன்பே அனுப்பி வைத்து விட்டோம். ஆனால் அந்தப் பணம் சென்ற வாரம்தான் அவர்களுடைய கைகளுக்கு சென்றடைந்து இருக்கிறது ; அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் ஹள்ரத் அவர்கள், "நான் வந்து செல்வதற்கான  அவகாசம் இல்லாததால்; இனி புறப்பட்டால் வந்து சேர முடியாது என்பதால் என்னால் வர இயலாது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்; அந்த பணத்தையும் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன்" என்று தந்தி அனுப்பி இருக்கிறார்கள்.  நாமெல்லாம் இங்கே ஒன்று கூடுவது இங்...

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையினருக்கு நன்றி !

Image
லால்பேட்டை நகர ஜமாஅத்துல்  உலமா சபையினருக்கு நன்றி ! ================================= அல்ஹம்துலில்லாஹ்!  நேற்றைய தினம் லால்பேட்டை மாநகரத்தில் இரு பெரும் விழா நடைபெற்றது.  மன்பயீ ஆலிம்கள் சங்கமிப்பு விழாவில் 700க்கும் மேற்பட்ட மன்பயீ ஆலிம்களும் 150 க்கும் மேற்பட்ட மற்ற உலமாக்களும் பெரும் திரளாக  கலந்து கொண்டார்கள்.  புகாரி ஷரீஃப்  ஐம்பதாம் பொன் விழா ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தாருத் தஃப்ஸீர் மிகப்பெரியது என்றே நினைத்திருந்தவர்களுக்கு நேற்றுதான் "தாருத் தஃப்ஸீர் சிறிய கூடம்"  என்ற எண்ணத்தை உருவாக்கியது.  அந்த அளவிற்கு அரங்கு நிறைந்தது மட்டுமின்றி இரண்டு புறங்களிலும் இருக்கைகள் போடப்பட்டும் இட பற்றாக்குறை நிலவியது.  புகாரி ஷரீஃப் - நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளை கேட்பதற்கும், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை பாதுகாப்பதற்கும், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதற்கும் கூடிய கூட்டமாக இது அமைந்திருந்தது. "உயர்ந்த சிந்தனைகளோடும், எண்ணங்களோடும், லட்சியங்களோடும் வாழப் பழகிக் கொள்ளுங...

ஹஜ்ஜுக்குப் போன அரபு தமிழ் - அர்வி மொழி

Image
ஹஜ்ஜுக்குப் போன  அரபு தமிழ் - அர்வி மொழி  =========================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 14 | தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் இரண்டாவது முதல்வர் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு போகும் பொழுது என்னை அழைத்து, "பஷீர்! நாங்கள் ஹஜ்ஜுக்கு எடுத்துச் செல்லக்கூடிய மசாலா சாமான்கள் அடங்கிய டப்பாக்களுக்கு மேலாக அதனதன் பெயர்களில் அரபுத் தமிழில் எழுதி ஒட்டு; என் மனைவிக்கு அரபுத் தமிழ் தான் தெரியும்" என்று கூறினார்கள்.  நானும் அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் பேப்பர்களை வெட்டி வைத்துக் கொண்டு ملح மிளகு, கடுகு كدح, உப்பு ابو, புளிفلى, மஞ்சள் منجل என ஒவ்வொன்றுக்கும் அரபுத் தமிழில் எழுதி வைத்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் அந்தப் பக்கமாக வந்து காணலில்லாஹ் ஹள்ரத் அவர்கள் மஞ்சள்  منجل என்று எழுதியிருந்ததை பார்த்துவிட்டு, "இதை இப்படி எழுதக்கூடாது என சொல்லி منجض எ...

பெரிய வடகரையில் விருது வழங்கும் விழா எப்போது?

Image
21/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பலூர் ஸிராத்துல் முஸ்தகீம் எத்தீம்கானா மதரஸா பள்ளிவாசலில் பெரம்பலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மூன்று எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் எனக்கும் வழங்கப்பட்டது. எனது ஆசிரியர்களில் ஒருவரான மௌலானா ஹாஃபிழ், காரி, முஹம்மது முஸ்தபா ஹள்ரத் அவர்களுக்கு "பெரிய வடகரை மர்ஹூம் முஹம்மது காசிம் பாகவி ரஹ் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. எனக்கும் எனது ஆசிரியருக்கும் எனது நண்பர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ஹள்ரத் அவர்கள் விருதினை வழங்கினார்கள். நமது பெரிய வடகரையில் நிரந்தரமாக ஒரு விருந்தினை உருவாக்க வேண்டும்;  அதனை நமது சுற்றுவட்டார பகுதிகளில் சமூகத்திற்கு பயன்மிக்க வழிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், மக்களுக்கு பொது சேவைகள் செய்வோருக்கும் நமது அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்களின் ...

10,00000 / 00 பேரில் ஒருவர் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள்

Image
10,00000 / 00 பேரில்  ஒருவர் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள்  ===================================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 12 | தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ நேற்று பெரம்பலூர் மௌலானா பள்ளிவாசலில் பெரம்பலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் விருது வழங்கும் விழா நடைபெற்றது; அதில் உரையாற்றிய சில உலமாக்களின் கருத்தும் தனிப்பட்ட முறையில் சில ஆலிம்கள் சொன்ன கருத்தும் மன்பயீ ஆலிம்கள் அறிய வேண்டிய தகவலாக இருந்ததால் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியை மிகச் சிறப்பாக நடத்தி வந்த போது, அது சகோதர சமயத்தவர்களையும் சென்றடைந்தது.  சிதம்பரம், காட்டுமன்னார்குடி, கடலூர், பாண்டிச்சேரி பழைய தஞ்சை மாவட்டம் முழுவதிலும் இருந்து பல சமயத்தவர்களும் ஹள்ரத் அவர்களிடம் வந்து தமது சந்தேகங்களை கேட்டுச் செல்வார்கள். அவர்களை சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றுச் செல்வார்க...

அனைவரும் வாருங்கள்

Image

குர்ஆனை ஓதுவது போல புகாரி ஷரீஃப் ஓதலாமா ?

Image
குர்ஆனை ஓதுவது போல  புகாரி ஷரீஃப் ஓதலாமா ? ===================================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 11| தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்குடி, லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பிளேக் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு தினம் தினம் ஒவ்வொரு தெருவிலும் ஒருவர் இறந்து கொண்டிருந்தார்கள்.  அது மக்களின் மனதில் மிகப்பெரும் பயத்தையும், பீதியையும் விதைத்தது.  1978 க்கு முன்பு கட்டுப்படுத்த முடியாத சில நோய்கள் ஆங்காங்கே பரவி வருவதை அறிந்த கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இந்த ஊரையும் மக்களையும் காக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் புகாரி ஷரீஃப் ஓதி துஆ செய்வோம் என மதரஸா மற்றும் ஊர் தலைவர்களோடு பேசி முடிவு செய்தார்கள்.  இந்நிலையில் ஹள்ரத் அவர்கள் காலமானதால் முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் 1979 ஆம் ஆண்டு ரஜப் மாதம் புகாரி ஷரீப் ஓதத் தொடங்கினார்கள். இன்று 50 ஆவது பொன் விழா ஆண்டை அ...

லால்பேட்டை மக்கள் வழங்குவது அன்னதானம் அல்ல! அமலாய் மாறிப்போன ஈமான்

Image
லால்பேட்டை மக்கள் வழங்குவது அன்னதானம் அல்ல!  அமலாய் மாறிப்போன ஈமான் =====================================  💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 10 | தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ 12 ஆம் நூற்றாண்டு முதல் தெற்கிந்திய கடற்கரை பகுதிகளில் அரபு வர்த்தகர்கள் உலர்ந்த மீன், மசாலா பொருட்கள், பட்டாணி போன்றவற்றை வாங்குவதற்காக லால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வந்து சென்றதாக அரசு ஆவணங்கள் சாட்சி கூறுகிறது. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அவர்கள் காலமான பிறகு கி.பி. 1707 களில் முகலாயர்களின் ஆட்சி பலவீனம் அடைந்திருந்தது. அப்பொழுது அவுரங்கசீப் அமைச்சரவையில் இருந்த மீர் கமருதீன் கான் பஹாதுர் என்பவர் ஹைதராபாதிலிருந்து திருச்சி காவேரி கரைவரை உள்ள நிலப் பரப்புக்கு நிஜமாக பொறுப்பு வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் அம்பாஸியா ஆட்சி காலத்தில், ஏழாம் நூற்றாண்டில் "குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்கிற விவாதத்தின் போது ஏற்பட்ட மோதல்களில் ஒரு குழுவினர் வடக்கு  ஆஃப்கானிஸ்தா...

லால்பேட்டை ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு

Image
லால்பேட்டை ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு ===================================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 9 | தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ உலகின் பல ஆட்சியாளர்கள் பெரும்பகுதி நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ததற்கு தூணாகவும், துணையாகவும் இருந்தது நான்கு மத்ஹப்புகளின் நுட்பமான சட்டங்களும் அது  காலத்திற்கு ஏற்றதாக இமாம்கள் வகுத்ததும்தான் காரணம்.  இஸ்லாமிய சட்டங்களில் இருந்து தான் உலகம் இன்று பல சர்வதேச சட்டங்களை தமக்காக வடிவமைத்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் குற்றச் செயல்கள் பல்வேறு வடிவங்களில் பெருகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் உருவாவது வாடிக்கையானது தான்!  புதிய சட்டங்களை வகுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உலகத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் தாம்! இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகிய மூல ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஃபத...

மன்பவுல் அன்வார் மார்க்கத்தை காக்க எழுந்த கல்விக் கோட்டையின் வரலாறு

Image
மன்பவுல் அன்வார் மார்க்கத்தை  காக்க எழுந்த கல்விக் கோட்டையின் வரலாறு  ==================================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 8 | தொடர் பரப்புரை  🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷ இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நடைபெற்றது வரை இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருப்பதாக உணர்ந்தார்கள்.  இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்த போது முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழ்வதற்கான சூழல் கேள்விக்குறியாக ஆனதால் இந்தியாவிலிருந்த  மார்க்க அறிஞர்கள் ஆங்காங்கே மதரஸாக்களை தொடங்க ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மதரஸாக்களில் ஒன்றுதான் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி.  இது, கி.பி. 1864 ஹிஜ்ரி 1281 களில் லால்பேட்டை பெரிய ஹள்ரத் என்று அழைக்கப்படும் சி.  அஹமது ஆலிம் (ரஹ்) அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு ஊர் பொதுமக்களின் பெரும் முயற்சியினால் உருவாக்கப்பட்டது.  இங்கு ஓதுகிற பிள்ளைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டாரும்...

ஆசிரியர்கள் தான் என் அடையாளம்

Image
ஆசிரியர்கள் தான்  என் அடையாளம்  ==================== 💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠 🔹 DAY – 7 | தொடர் பரப்புரை 🔹 =================================== மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை ÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷  லால்பேட்டை மதரஸாவில் நான் ஓதும் போது ஐந்து ஆசிரியர்கள் எனக்கு அழகிய உபதேசங்களை வழங்கினார்கள்.  அவர்களை தெரிந்து கொள்வதற்கு முன் எனது இளம் பருவத்தில் இருந்து இன்று வரை 33 ஆசிரியர்களிடம் நான் பயின்று இருக்கிறேன் ; அந்தப் பட்டியலை நீங்கள் பாருங்கள்.  அதில் ரஹ்மானி பட்டம் பெற்ற ஆலிம், மன்பயீ , பாகவி, நூரி, ஜமாலி, ரியாஜி, தேவ்பந்தி, அன்வாரி, மிஸ்பாஹி, பண்டாரவடை காஸிமி, அரபு மொழியில் டாக்டர் பட்டம் பெற்ற PhD கள் என பல வகையான பட்டம் பெற்ற பலரிடம் அரபு மொழி கல்விப் பயிலும் பாக்கியம் பெற்றிருந்தேன்.  இது போன்று பல மதரஸாக்களில் ஓதிய பேராசிரியர்களிடம் பயிலும் பாக்கியம் இன்றுள்ள மதரஸாக்களில் குறைந்து வருகிறது.   ஒவ்வொரு மதரஸாவிலும், வெவ்வேறு மதரஸாக்களில் ஓதி பட்டம் பெற்ற திறமையான ஆலிம்களை பேராசிரியர்களாக சேர்த்து பேராசிரியர் ...