நபி (ஸல்) அவர்களின் புகழ் எவ்வளவு பரவி இருக்கிறது?
நபி (ஸல்) அவர்களின் புகழ்
எவ்வளவு பரவி இருக்கிறது?
=_==_==_==_==_==_==_==_=
وقال محمد بن إسحاق : عن يزيد بن رومان قال : كان العاص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول : دعوه ، فإنه رجل أبتر لا عقب له ، فإذا هلك انقطع ذكره .
நபி (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்ட போது ஆஸ் பின் வாயில் என்பவன் கூறினான். அவரை விடுங்கள்; அவர் சந்ததி அற்ற மனிதர்; அவருக்கு எதிர்காலமே இல்லை; அவர் இறந்து போனால் அவரைப் பற்றி பேச யாருமே இருக்க மாட்டார்கள்.
நூல்: தஃப்ஸீர் தப்ரீ
இப்படி சொன்னவனுக்கு பதில் அளிக்கும் விதமாக சில வரிகள்.
வளர்ப்புத் தாய் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு பருவத்தையும் புகழ்ந்துப் பேசி வந்தார்கள்.
இளைஞராக இருந்தபோது குடும்பத்தினர் பேசிய புகழ் வார்த்தைகள் அனைத்தும் அவருக்கு உரியது தான் என அவரின் செய்கைகளை கண்டு ஊர் மக்கள் ஒப்பு கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் நடத்தையை மென்மேலும் அழகு படுத்திக் கொண்டே சென்றதால் அவர்களின் புகழும் ஓங்கியது.
சிறுவராக, இளைஞராக, ஆடு மேய்ப்பாளராக, வியாபாரியாக, கணவனாக, தந்தையாக இருந்த அனைத்துத் தருணங்களிலும் தன் புகழ் ஓங்கும்படியே வாழ்ந்தார்கள்.
அதிலும் நபியாக தன்னை அறிவித்துக் கொண்ட போதும், அது சார்ந்த புரட்சிகரமான பல கருத்துக்களை உதிர்த்த போதும் அவர்களின் புகழ் மேலும் பெருகியது.
இன்று உலகம் முழுவதிலும் 200 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உலகில் உள்ள சாதி மதங்கள் வாரியாக அந்த மக்களை பிரித்துப் பார்த்தால் முஸ்லிம் மக்கள் தொகை தான் மிக அதிகமாகக் காணப்படும்.
200 கோடி முஸ்லிம்களுக்கு ஒரு கோடி பள்ளிவாசல்கள் உலகம் முழுவதிலும் இருக்கும்.
ஒரு கோடி பள்ளிவாசலிலும் தினம் தினம் ஐந்து முறை பாங்கின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் இகாமத்தின் மூலம் பத்து முறை நபி (ஸல்) அவர்களின் பெயரும் நினைவு கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இருபது கோடி முறை நபி ஸல் அவர்களின் பெயர் பள்ளிவாசலில் ஓங்கி ஒழிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு பள்ளிவாசலுக்கு ஒரு நேரத் தொழுகைக்கு 25 பேர் தொழ வருவதாக வைத்துக் கொண்டால் 25 கோடி பேர் ஒரு நேரத் தொழுகையில் ஒன்று கூடுகிறார்கள்.
இவர்கள் தொழுகையில் ஸலவாத் ஓதுவார்கள். அதன் மூலம் நபி ஸல் அவர்களின் பெயரை நான்கு முறை சொல்வார்கள். அதனால் தொழுவோரின் மூலம் ஒரு நாளில் ஒரு நேர தொழுகையின் போது மட்டும் 100 கோடி முறை நபி (ஸல்) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுகிறது.
லா அகீப லஹு அவரைப் பின்பற்ற ஆட்கள் இல்லை என்று சொன்னான் ஆனால் இன்று 200 கோடி பேர் நபிகள் நாயகத்தை பின் துயர்ந்து வருகிறார்கள்.
*ஃப இதா ஹலக இன்கதஅ திக்ருஹு" அவர் அழிந்தால் அவரை நினைத்துப் பார்க்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னான்.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் அவர்களை பல நூறு முறை நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே உண்மை.
அப்தர் - சந்ததி அற்றவர் என்று சொன்னான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மூலமாக பிறந்த குழந்தைகளின் சந்ததியினர் இன்றும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சந்ததிகள் மென்மேலும் பெருகவும் அவர்கள் அனைத்து வாழ்வாதாரங்களையும் பெற்று வளமாக வாழவும் ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில் ஸலவாத்து ஓதுவது மூலம் "அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் - முஹம்மது நபிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும்" என பிரார்த்தனை செய்து கொண்டும் அவரை நினைத்து கொண்டுமே இந்த சமுதாயம் இருக்கிறது.
தொழுகையில் ஸலவாத்தை ஓதவில்லை என்றால் அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரைச் சொல்லி நபிகளாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரார்த்தனை செய்யவில்லை என்றால் அவருடைய தொழுகை கூடாது எனும் நிலையை அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் பெயரையும், அவர்களின் நினைவையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்க வேண்டும் என இறைவன் இயற்கையாகவே அமைத்திருக்கின்றான்.
Comments
Post a Comment