நபிப் புகழை அளவிட முடியாமல் அறிவுத் திணறுகிறது

நபிப் புகழை 
அளவிட முடியாமல் 
அறிவுத் திணறுகிறது :
^÷^÷^÷^÷^÷^÷^÷^×^÷^÷^÷^÷^÷

காயல்பட்டினம் 
சதக்கத்துல்லா அப்பா 
அவர்கள் இயற்றிய 
'கஸீதத்துல் வித்ரியா' வில் இருந்து 
ஒரு கவிதை 

நபியே 
தங்களின் புகழை 
அளவிட முடியாமல் 
எங்கள் அறிவுத் திணறுகிறது! 

நபியே! 
உங்களைப் புகழ்வதால் 
எங்களின் அநீதிகளும் ,
பாவங்களும் அழிகிறது!

ஒளிரும் பேரொளியே! 
செல்வங்களின் நிலைக்கலனே! 
நீங்கள் 
என் அச்சத்தை அகற்றி விட்டீர்! 

நேர்வழியின் தலைமையே !
பகைமையின் நஞ்சே! 
தேவைகளைத் தரும் 
அருள் நிலையமே! 

ஒட்டுமொத்த நன்மைகளின் களஞ்சியமே! 
(மறுமையில் ) 
எங்களுக்கு நேர இருந்த நாசம் 
உங்களால் விலகுகிறது! 
அதுவே எங்களுக்குப் போதுமானது!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்