ஒற்றைச் சொல்லால் உருகுளைந்த குடும்பங்கள்
ஒற்றைச் சொல்லால்
உருகுளைந்த குடும்பங்கள் :
`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•`•
தொடர்ச்சி .......6
அபூ லஹபும்
அவனது குடும்பமும் :
=====================
அபூ லஹப் என்பவனுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர் உத்பா, முஅத்தப், உதைபா மற்றும் மூன்று பெண் மக்களும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்களின் மகளை திருமணம் செய்து இருந்த உதைபாவை சிங்கம் கடித்து சாகடித்தது. தந்தை அபூ லஹப் இருக்கும்போதே மகன் இறை மறுப்பாளனாகவே இறந்து விட்டான். உத்பா, முஅத்தப் ஆகிய இருவரும் ஃபதஹ் மக்காவிற்கு பிறகு இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அபூ லஹபிற்கு மூன்று பெண் மக்கள் இருந்தனர். துர்ரா, ஸபீஆ ஆகிய இருவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். தந்தை இருக்கும்போதே உஜ்ஜா என்பவர் இறை மறுப்பாளராக இருந்து விட்டாள்.
அபூ ஜஹலும்
அவனதுகுடும்பமும் :
===================
அபூ ஜஹலுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அபூ ஜஹல் பத்ர் போரில் கொலை செய்யப்பட்டான். இவனுக்கு மூன்று ஆண் மக்களும் நான்கு பெண் மக்களும் பிறந்தனர்.
அபூ ஹாஜிப், அபூ அல்கமா என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். இவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. அபூ அல்கமா அறியாமை காலத்திலேயே தந்தை இருக்கும் போதே எமனில் கொலை செய்யப்பட்டு விட்டான்.
மூன்றாவது இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு - இவர் இஸ்லாத்தில் இணைந்து குழந்தைகளோடு தாயிஃபில் நீண்ட காலம் வாழ்ந்தார்.
ஹுனஃபா, ஸக்ரா, அஸ்மா, ஜுவைரியா என்ற நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.
இவர்கள் நால்வரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் இருக்கும் போதே அலீ (ரலி) அவர்கள் இந்த நான்கு பெண் மக்களில் ஒருவரை திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள்
واللَّهِ لا تَجْتَمِعُ بنْتُ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ واحِدٍ، فَتَرَكَ عَلِيٌّ الخِطْبَةَ.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும், அல்லாஹ்வின் எதிரி உடைய மகளும் ஒரே மனிதரிடத்தில் இருப்பது சாத்தியமல்ல" என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் அந்த பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்கள்.
நூல் :புகாரி
கஅப் பின் அஷ்ரஃப் என்பவன் மஸ்லமா (ரலி) அவர்கள் மூலம் கொலை செய்யப்பட்டான். இவனுடைய மரணத்திற்குப் பிறகு இவனை குடும்பத்தினரும் அழிந்து போனார்கள்.
ஆஸ் பின் வாயில் என்பவனுடைய முடிவை ஏற்கனவே பார்த்து விட்டோம்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களை அப்தர் - சந்ததியற்றவர் என்று சொன்னதால் இவர்கள் அனைவரும் சிறுவயதில் மரணித்தது மட்டுமின்றி இவருடைய ஆண்மக்கள் பலர் சிறுவயதிலேயே இறந்துப் போனார்கள். எஞ்சி இருந்த பிள்ளைகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.
அதனால் இவர்களுடைய இறை மறுப்பு கொள்கையை அடுத்த தலைமுறையினருக்குச் சொல்ல எவரும் இல்லாமல் ஆகி விட்டார்கள்.
இவர்கள் கொள்கை பிடிப்போடு இருந்தது போல் இவருடைய சந்ததிகளில் எவரும் கொள்கையில் உறுதியாக இருக்கவில்லை. அதைத்தான் அல்லாஹ், "அவர்கள் கொள்கைக்கு சந்ததி அற்றவர்கள்" என்று சொல்லிக் காட்டுகிறான்.
Comments
Post a Comment