அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு

அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13

தொடர்: 84

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•

அபூ மூஸா அத்துர்கீ (ரஹ்) அவர்கள் கலீஃபா அல் முதவக்கில் அவர்களுடைய படை தளபதிகளில் ஒருவராக இருந்தார். 

அவர் மிகப்பெரும் போர்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அவருக்கு ஒரு போதும் காயங்கள் ஏற்பட்டதே இல்லை; அதே நேரம் அவர் போர் செய்யும் பொழுது கவச உடைகள், பாதுகாப்பு அணிகலன்கள் எதையும் அணிவதும் இல்லை. 

இந்நிலையில் அவரிடம் ஒருவர் இது குறித்து கேட்டார்; அதற்கு அவர், "நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்' என்று நான் கேட்டுக் கொண்டேன். 

அப்பொழுது அவர்கள், "உமக்கு எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாது; ஏனென்றால் எனது வழித்தோன்றல்களில் ( - அஹ்ல பைத்) ஒருவரை காப்பாற்றி இருக்கிறீர்கள்;

கலீஃபா அல் முதவக்கில் அவர்கள் காட்டு மிருகங்களிடம் இவரை தூக்கி எறிந்து விடு என்று சொல்லியும் அவரை நீங்கள் காப்பாற்றியதால் நான் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவேன்" என்று சொல்லி இருக்கிறார்கள்" எனக் கூறினார்.

நூல் : அந்நுஜுமுஸ் ஸாஹிரா

அப்பாஸியா கலீஃபா ஜஃபர் அல் முதவக்கில் அவர்கள் கி.பி. 847 - 861 ஹிஜ்ரி 232 - 247 காலகட்டத்தில் ஈராக் பாக்தாத் நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்.

இவருடைய படையில் தான் அபு மூஸா அத்துர்கீ (ரஹ்) அவர்கள் படைத்தளபதியாக செயல்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்