இந்தியாவை எத்தனை நாட்டு ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்?

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் 
====================================

தொடர் ........7

இந்தியாவை எத்தனை நாட்டு ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள்? 
====================================

இந்தியாவை “ஆங்கிலேயர்கள்” (British) மட்டுமல்லாமல், பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களும், வர்த்தகர்களும் வந்து ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல் வழியாகவே வந்தனர்.

1.  போர்த்துக்கீசியர் (Portuguese)

1498 மே 20 அன்று முதன் முதலில் வாஸ்கோட காமா கேரளாவின் கோழிக்கோட்டிற்கு (Calicut) வந்தார்.

மசாலா சாமான்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு  போன்றவற்றை ஐரோப்பியர்கள் அரபியர்களிடமிருந்து மட்டுமே வாங்க முடிந்தது. 

அதனால் அதன் விலை அதிகமாக இருந்தது; இந்த மசாலா சாமான்கள் விளையும் இடத்திலேயே கொள்முதல் செய்யலாம் என்று எண்ணி வாஸ்கோடா காமா இந்தியாவிற்கு வந்தார்; ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான முதல் கடல் வழி மார்க்கத்தை கண்டறிந்தவர் இவர்தான்.

முதன் முதலில் கி.பி. 1510-ல் கோவா (Goa) வை கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். 

பின்னர் தமன் & தியூ (Daman and Diu) , பாசைன் (Bassein / Vasai, தற்போது மும்பை அருகில்) , சால்செத், சோப்ரா, பாசைன் சுற்றியுள்ள தீவுகள் –
மும்பை தீவுகள் (Bombay Islands), மலபார் கரை (Kerala coast) , கோழிக்கோடு (Calicut), கொச்சி (Cochin), கன்னூர் (Kannur), கொல்லம் (Quilon), ஹூவிடா (Hooghly, West Bengal) என இந்தியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து ஆட்சி செய்தனர்.

இந்தியாவில் இருந்து கடைசியாக 1961 ஆம் ஆண்டு  விரட்டப்பட்டார்கள்.

2.  டச்சுக்காரர் (Dutch / Netherlands / Holland) 

டச்சு எனும் மொழி பேசும் நெதர்லாந்து மற்றும் ஹாலாந்து வாசிகள் 1605 இல் புலிகாட் (ஆந்திரா) அருகே முதன்முதலில் குடியேறினார்கள்.

பின்னர் கொரோமண்டல் கரை, மலபார் கரை, பெங்கால், சூரத்துக் கரை என பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வந்தார்கள்.

1759 பிளாசிப் போருக்குப் பிறகு செல்வாக்கை இழந்து 1825 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.

3.  டேனிஷ்காரர் (Danish / Denmark) 

டேனிஷ் என்பது அவர்கள் பேசும் மொழியாகும்; இவர்கள் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் முதன் முதலில் கால் பதித்தனர். மேற்கு வங்கத்தில் செராம்பூர் முதல் நிக்கோபார் தீவு வரை பல நிலப்பரப்புகளை ஆட்சி செய்தனர்; இறுதியாக 1869 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

4.  பிரெஞ்சுக்காரர் (French) 

ஃபிரன்ஞ் மொழி பேசும் பிரான்ஸ் காரர்கள் 1667  வணிகர் ஃப்ரான்சுவா காரோன் (François Caron) என்பவர் தலைமையில்  சூரத்தில் (Surat)  குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினார்கள்.

பின்னர் புதுச்சேரி, கரைக்கால், யானம், சந்தநகர், மாஹே போன்ற இடங்களை 1954 வரை ஆட்சி செய்தனர்.

5.  ஆங்கிலேயர்கள் (British / English) 

1608 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் முதல் கப்பல் இந்தியாவின் குஜராத் பகுதியில் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் (William Hawkins) தலைமையில் வியாபார குழுவினர் வந்து இறங்கினார்கள். 

இவர்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய முகலாய மன்னர் ஜகாங்கீர் ஆவார். 

ஆங்கிலேயர்கள் East India Company  எனும் வியாபார கம்பெனி முன்வைத்து அகண்ட பாரதத்தை ஆக்கிரமித்து 1947 வரை ஆட்சி செய்தார்கள்.

பிற நாட்டு ஆங்கிலேயர்கள் அனைவரும் இந்தியாவின் குஜராத்தில் வந்து இறங்கியே இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். 

இப்பொழுதும் கூட இந்தியாவை குஜராத்திகளே ஆக்கிரமித்து இருக்கிறார்கள். 

ஒன்றுபடுவோம் !
இந்தியாவை காப்போம்!!

புகைப்படத்தில் இருப்பவர் ஜஹாங்கீர் மன்னர் ஆவார்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்