உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் 7

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்ச்சி : 7
=============|->

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)

அறிவு ஜீவிகள் 
போர்வையில் மூடர்கள் :
============÷=÷=÷÷÷÷====

சிலுவைப் போர்கள் நடைபெற்று வந்த காலத்தில் வாழ்ந்த உலக அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தவறாகவே பேசியும் எழுதியும் வந்தார்கள். அந்த வரலாறு இன்று நம்மையும் வந்தடைந்து இருப்பதை நாம் கண்டிருப்போம். 

சிலுவை யுத்தங்கள் முடிவுற்ற பிறகு தோன்றிய அறிஞர்கள் அனைவரும் நபிகள் நாயகம் குறித்து தமது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் நல்லதையே சொல்லி வந்தார்கள். அதையும் இன்று நாம் அறிவோம். 

ஆனால் இந்த நிமிடம் வரை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அறிஞர் பெருமக்களில் யாரும் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லி வந்த உண்மையான இறை நம்பிக்கையையும், அவரின் வாழ்வியலையும் முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்திட எவரும் முன்வரவில்லை. அதாவது இஸ்லாத்தில் இணையவில்லை. இது அவர்களின் அறியாமை என்று சொல்வதா? 

அல்லது நபிகள் நாயகத்தை புகழ்வதின் மூலம் தாமும் புகழை பெறலாம் என எண்ணியதா?

என்று நமக்குள் அனேக கேள்விக்குறிகள் இருந்தாலும் அதையும் அல்லாஹ் விபரமாகவே தன் திருமறையில் கூறுகிறான்.

இறுதி நாளை உறுதியாக நம்புவோருக்கு இறுதித் தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது என்று  (33 : 21 ) இந்த வசனம் கூறுகிறது. 

எனவே அறிஞர்கள் என்று தம்மை சொல்லிக் கொண்டும், ஒரு மதத்துக்குள் இருந்து கொண்டும் பேசுகிற இவர்கள் மறுமை நாளை நம்பாதவர்களாக இருக்கிறார்கள். 

மேலும் தமது கிறிஸ்தவ, அல்லது யூத மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான மறுமையை கூட நம்பாமல் தம் மதத்திற்கு துரோகம் செய்திருகிறார்கள் என்பதே உண்மை.

உலக மக்களில் அந்தந்த காலத்தில் வாழ்ந்த அனைவருக்கும், நிகழ்காலத்தில் வாழ்கிற மக்களுக்கும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கும், ஒரே மாதிரியான வழிகாட்டுதலை வகுத்துத் தந்த ஒரே மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள், இறைவனின் இறுதி இறை தூதர் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது ஏனோ!

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்