உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
உலகின் முதல்
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான்.
(அல்குர்ஆன் 33:21)
உஸ்வத் - முன்மாதிரி என்றால், "ஒருவரது செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பது" என்று பொருள்.
33:21 வது வசனம் "அதீஉல்லாஹ வ அதிஉ ரஸூல - அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள்" ( 3 : 32) எனும் வசனத்தின் மறு பிரதிபலிப்புதான் என்று சொன்னால் மிகையல்ல!
ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் இடத்தில், நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டிய பல அழகிய முன்மாதிரிமிக்க நற் செயல்கள் இருக்கின்றது நீங்கள் பின்பற்றுங்கள்" என்பதுதான் 33:21 வது வசனத்தின் பொருள்.
உஸ்வதுன் ஹஸனா என்பதின் பொருள், "நீர் மகத்தான நற் நற்குணத்தில் இருக்கின்றீர் ;68:4" என்பதைத் தான் குறிப்பிடுகிறது என அநேக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
மனித இனத்தில் எவருக்கும் வாய்க்கப்படாத நற்குணம் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தது; அந்த குணம் குடிகொண்டிருந்த கோமான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துதான் அல்லாஹ் "உஸ்வதுன் ஹஸனா " என சொல்கிறான்.
நபி (ஸல்) அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதும், அவர்களுக்கு எந்த வகையிலும் மாற்றம் செய்யாமல் இருப்பதுமே இதன் பொருள் என திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
தொடரும்.....
Comments
Post a Comment