ஷைகுல் அன்பியா நூஹ் அலை அவர்கள் :
ஷைகுல் அன்பியா
நூஹ் அலை அவர்கள் :
https://bmkmanbayee.blogspot.com/p/blog-page_77.html
https://www.blogger.com/blog/page/edit/7086443299022251611/6398852634195526853
(நூஹ் அலை) அவர்கள் தம் சமுதாயத்தினருக்கு மத்தியில் ஐம்பது ஆண்டுகள் குறைவாக ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள். 29 : 14
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக மட்டும் 950 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது. அதே நேரம் மொத்தத்தில் 1100 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
நூஹ் (அலை) அவர்களின் 270 வது வயதில் நபித்துவம் அருளப்பட்டது. 480 ஆண்டுகள் வெள்ளப் பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்தார்கள் வெள்ளப் பிரளயத்திற்கு பிறகு 350 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஆக மொத்தம் ஆயிரத்து நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
போதும் போதும் என்கிற அளவிற்கு வாழ்ந்து இருக்கிறார்கள். தஃவா - அழைப்புப் பணி அலுத்துப் போகும் அளவிற்கு செய்திருக்கிறார்கள்.
நமது ஊம்மத்தினரின் வயது அறுபதுக்கும் எழுபதிற்கும் இடையில் தான் என்பது நாம் அறிந்ததே!
ரூஹுல் மஆனீ எனும் திருக்குர்ஆன் விரிவுரையின் ஆசிரியர் ஆலூஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் நூஹ் (அலை) அவர்களிடம் இப்படிக் கேட்டார்.
நீங்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து இருக்கிறீர்களே அது எப்படி இருக்கின்றது?
நூஹ் (அலை) அவர்கள் "ஒரு வீட்டின் முன்புற வாசல் வழியே நுழைந்து பின்புற வாசல் வழியே சென்றதுப் போல் இருக்கின்றது"என்று கூறினார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நூஹ் (அலை) அவர்களுக்கு உலக வாழ்க்கை அலுத்துப் போகவில்லை. இன்னும் வாழ வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது. உலகில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது மன நிறைவைத் தராது. மறுமையில் தான் மன நிறைவும் நிம்மதியும் கிடைக்கும்.
மேலும் வாசிக்க பிளாக் ஸ்பாட்டை பாருங்கள்.....
Comments
Post a Comment