காசா மக்களின் பசி பட்டினியும் பெருமானாரின்.....
காசா மக்களின் பசி பட்டினியும்
பெருமானாரின் பசி பட்டினியும்
https://youtu.be/Sc-qgjYlw3w?si=B2RCFuvd5FNK9C5f
உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.
காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்து கிடைக்கின்றது.
மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில்,
"உணவு தேடி வரும் மக்களை குறி வைத்துக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. உணவு விநியோக மையங்களில் கொலை செய்வதை (காண்ட்ராக்டர் கில்லர்ஸ்) நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான மக்கள் பசி, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, நோய் மற்றும் இறப்பு போன்ற பேரழிவு சூழ்நிலையில் உள்ளனர். இது உலகின் மிக மோசமான பசி நெருக்கடிகளில் ஒன்றாகும்.
அங்கு ஊட்டச்சத்து குறைபாடும் நோய்களும் ஒன்றையொன்று தூண்டிவிடுகின்றன. அன்றாட நோயே மரண தண்டனையாக மாறி வருகின்றது.
ஒரு வருடத்திற்கும் குறைவான 71000/ குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி விடுகிறது.
காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.
https://youtu.be/Sc-qgjYlw3w?si=B2RCFuvd5FNK9C5f
Comments
Post a Comment