நபிகள் நாயகம் ரசித்த கவிதை :

நபி (ஸல்) அவர்களை 
நான் கனவில் பார்த்தேன் 

தொடர்  : 8

.

53.  கவிதையினால் அல்லாஹ் மன்னித்து விட்டான் :

ஹிஜ்ரீ 60 களில் வாழ்ந்த ஸஅதுல் அஸதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; 

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் பார்த்தேன்; அப்பொழுது 

நபி ஸல் : மக்களில் நீ யார்?

நான் : அரபு கோத்திரத்தைச் சேர்ந்தவன்....

நபி ஸல் : அது தெரியும்... அரபு கோத்திரத்தில் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்....

நான் : பனீ அஸத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்....

நபி ஸல் : பனி அஸத் கோத்திரத்தாரில் குசைமா - بنى خزيمة கோத்திரத்தை சேர்ந்தவரா?

நான் : ஆமாம்.....

நபி ஸல் : அப்படி என்றால் ....நீர் எனது குடும்பத்தாரில் ஒருவர்.... அப்படித்தானே....

நான் : ஆமாம்....

நபி ஸல் : கும்மியத் பின் ஸைத் தை உமக்குத் தெரியுமா?  

நான் : அல்லாஹ்வின் தூதரே! ஆமாம் ! எனக்கு தெரியும்; அவர் எனது கோத்திரத்தாரில் ஒருவர்; எனது தாய் மாமன்களில் ஒருவரும் கூட.....

நபி ஸல் :  அவருடைய கவிதைகளில் ஏதேனும் உமக்கு மனப்பாடமாக இருக்கின்றதா? 

நான் : ஆமாம்!... எனக்கு தெரியும்...

நபி ஸல் : அவற்றில் இருந்து எனக்கு கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்....

طربت، و ما شوقا إلى البيض أطرب‌ و لا لعبا منّى، و ذو الشّيب يلعب؟
எனும் கவிதையில் தொடங்கி

فمالى إلّا آل أحمد شيعة
و مالى إلا مذهب الحقّ مذهب‌
எனும் கவிதை வரை படித்தேன். 

நபி ஸல் : "நீர் நல்ல காரியம் செய்தீர்...! அவருக்கு என் ஸலாம் சொல்லுங்கள்! இந்த கவிதைகளின் பொருட்டால் அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னித்து விட்டான் என்றும் சொல்லுங்கள்" என  என்னிடம் கூறினார்கள்.

நூல் : கஸானதுல் அதப் , அல் அஙானீ.

சமூகத்திற்கு பயனுள்ள கருத்துகளை கவிதை வடிவங்களில் சொன்னாலும் அது அல்லாஹ் மற்றும் ரசூலிடம் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இந்த வரலாறு ஒரு சாட்சி!


Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்