மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி விலைமதிப்பற்ற கல்வி எது?
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
நேற்றைய தொடர்ச்சி......>7
===============
விலைமதிப்பற்ற கல்வி எது?
============================
ஷைஹு அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தம் பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொழுது ஒரு பிக்ஹு சட்டத்தை கற்பித்துவிட்டு "இது பத்தாயிரம் தங்க காசுக்கு ஈடான கல்வி" என்பார்கள்.
மற்றொரு சமயம் ஒரு ஹதீஸை கற்பித்துவிட்டு "இது ஒரு லட்சம் தங்கக் காசுக்கு நிகரான கல்வி" என்பார்கள்.
இன்னொரு சமயம் அல் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கங்களை கற்பித்துவிட்டு "இது ஒரு கோடி தங்க நாணயத்திற்கு ஈடான விளக்கம்" என்பார்கள்.
ஏன் இப்படி கூறுகிறார்கள் என்றால், மாணவர்கள், தாம் படித்த கல்வியின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்கே.
ஒரு சமயம் ஒரு மாணவர் தெருவில் நடந்துச் செல்லும் பொழுது செருப்பு வாரு அறுந்து விட்டது. அங்கிருந்த கூலி தொழிளாலியிடம் "இந்த செறுப்பு வாரை தைத்துக் கொடுங்கள்; உமக்கு பத்தாயிரம் பொற்காசு மதிப்புள்ள ஒரு கல்வியை கற்றுத் தருகிறேன்" என்றார்.
அந்த தொழிலாளி "அது வெல்லாம் எனக்கு வேண்டாம்; காசு இருந்தா கொடு தைத்து தருகிறேன்; இல்லையானால் உன் செருப்பை எடுத்துச் செல்" என கூறி விட்டார்.
அம்மாணவர் மிக வருத்தத்துடன் ஆழ்ந்த சிந்தனையோடு மதரஸாவிற்கு வந்தார்.
ஷைஹு அவர்கள் அன்று பாடம் நடத்தும் பொழுது எப்பொழுதும் போல் அது அவ்வளவு பொறுமான கல்வி இது இவ்வளவு பெறுமான கல்வி என்றார்கள்.
அந்த பாதிக்கப்பட்ட மாணவர் எழுந்து "உஸ்தாத் அவர்களே! இந்தக் கல்வியை கொண்டு என் செருப்பு வாரைக்கூட தைக்க முடியவில்லை" என தமக்கு நேர்ந்ததை விவரமாகக் கூறினார்.
உஸ்தாத் அவர்கள் "மாணவரே! இந்தக் கல்வியின் மதிப்பு, அத்துரை சார்ந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் அதன் உண்மையான மதிப்பு உமக்குத் தெரியும்" என்றார்கள். ஆனால் அம்மாணவருக்கும் அச்சபையில் கேட்ட சில மாணவர்களுக்கும் திருப்தியாக தெரியவில்லை.
இவ்வேளையில் மிகப்பெரிய வியாபாரியான ஷைஹு ஜீலானி அவர்களிடம் அச்சமயம் ஒரு வைரக்கல் வியாபாரி வந்தார். அவர் கணமான ஒரு வைரக்கல்லை எடுத்து வந்து "ஷேஹ் அவர்களே! இந்த கல்லை விற்பனை செய்ய பக்தாத் முழுவதும் சுற்றி விட்டேன்; இதற்கு ஈடான பணம் கொடுக்க எவரிடமும் வசதி இல்லாத தால் எல்லோரும் என்னை உங்களிடம் போகச் சொன்னார்கள் அதனால் வந்தேன்" என்றார்.
ஷைஹு அவர்கள் அவரை ஒரு ஓரமாக அமரச் செய்து விட்டு அந்த வைரக்கல்லை திருப்தியடையாத மாணவரை அழைத்து “இந்தக் கல்லின் மதிப்பு என்னவென்று ஊருக்குள் விசாரித்து விட்டுவா" என்றார்கள்.
அம்மானவர் அதனை எடுத்துக் கொண்டு தாம் வழமையாக கீரை வாங்கும் மூதாட்டியிடம் சென்று ''மூதாட்டியே இதனை வைத்துக் கொண்டு ஏதேனும் பணம் கொடு" என்றார். அம்மூதாட்டி அதனை பார்த்து விட்டு, ''தம்பி! இது என்னனு எனக்கு தெரியல, ஆனாலும் பார்க்க நன்றாக இருக்கின்றது; மின்னுகிறது அதுக்காக வேண்டுமானால் ஒரு கீரைக் கட்டுத் தருகிறேன்" என்றாள்.
அம்மாணவர் அதற்கு சம்மதித்திடாமல் அதனை வாங்கிச் சென்று தம் வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் கொடுத்த போது அவர் ஒரு கிலோ கோதுமை, சிறிது ஆலிவ் என்னை தருவதாகக் கூறினார்.
அதற்கும் சம்மதிக்காமல் ஒரு கசாப்பு கடையில் சென்று கொடுத்தார்; அவர் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி தருவதாகக் கூறினார்.
பிறகு அம்மாணவர் ஒரு நகைக் கடைக்குள் சென்று கொடுத்த போது அம் முதலாளி அதன் தரத்தை புறிந்துக் கொண்டார். மேலும் சற்றுமுன் வேறு ஒருவர் இதே கல்லை எடுத்து வந்து பணம் கேட்ட பொழுது பணம் இல்லை, இதற்கு பணம் வைத்திருக்கும் ஒரே நபர் ஷைகு அவர்கள் மட்டும் தான் என அவருக்கு சொல்லி அனுப்பியது நினைவிற்கு வந்தது.
ஆகவே அவர் இது உன்னுடையதல்ல! இது உனக்கு ஏது என மிரட்டும் தோரனையில் கேட்டபொழுது அம் மாணவர் உஸ்தாத் கொடுத்ததாக கூறினார். ஆனாலும் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் மாணவரை அழைத்துக் கொண்டு மதரஸாவிற்கு வந்தார். அங்கே அக்கல்லுக்குறிய வரும் அமர்ந்திருப்பதை கண்டு நிம்மதியானார்.
மேலும் அவர் ஷைகிடம் விசாரித்த போது நேரடியாக அம்மாணவர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன் என கூறிவிட்டு அதற்கு ஈடான பணத்தை ஒரு பை நிறைய ஷெய்கு அவர்கள் அள்ளி தந்ததை அம்மானவரும் கண்கூடாகக் கண்டார்.
அப்பொழுது தான் அக்கல்லின் மதிப்பை உணர்ந்தார். தம் கல்வியின் உண்மையான மதிப்பையும் உணர்ந்தார்.
ஆகவே, இஸ்லாமியர்களாகிய நீங்கள் ஆலிம்களுக்கும், இஸ்லாம் சம்பநதமான போதனைகள் செய்வோருக்கும் மதிப்பளியுங்கள்; அல்லாஹ் அதன் மூலம் மட்டுமே கூட சொர்க்கத்தில் நுழைத்திட முடியும்.
நூல் : கலாயிதுல் ஜவாஹிர், தாரிக் பக்தாத்
Comments
Post a Comment